Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம சேஸ்...கோலியின் ரேஸ்!

Featured Replies

செம சேஸ்...கோலியின் ரேஸ்!

 

டைம் டூ லீட் கோலி என வெறுத்துப்போய் ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையில்,  உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த தென்னாபிரிக்காவை வொயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒரே மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருதின போட்டிகளில் வொயிட்வாஷ் ஆகும் நிலைமைக்கு வந்துவிட்டது.

231911.jpg


ஆஸி மண்ணில் கடந்த 2014 -ம் ஆண்டில் இருந்து இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஏழு ஒருதின போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக,  இந்திய அணி விளையடியிருக்கிறது. அனைத்திலும் தோல்விதான். தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் 290 ரன்களுக்கு மேல் குவித்தும், இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

இந்நிலையில்,  இன்று நடைபெற்ற நான்காவது ஒருதின போட்டியில் டாஸ் வென்ற ஆஸி கேப்டன் ஸ்மித்,  முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். முதல் ஓவரை உமேஷ் யாதவ் மெய்டனாக வீசினார். அந்த ஒரு ஓவருக்கு பிறகு,  ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை நொறுக்கி தள்ளினர். இஷாந்த் ஷர்மா மட்டும் சுமாராக வீசி கொண்டிருந்தார். ஆனால் அவரையும் விட்டு வைக்காமல் மேக்ஸ்வெல் கடைசி ஓவரில் 18 ரன்கள் வெளுக்க, ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 400 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  348 ரன்களில் ஆஸ்திரேலியாவை நிறுத்தியதே பெரிய விஷயம் என திருப்திபட்டு கொண்டனர் இந்திய ரசிகர்கள்.

ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இணைந்து முதல் ஓவரில் இருந்தே விளாச  ஆரம்பிக்க,  இந்திய அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. எட்டு ஓவர்களில் இந்திய அணி 65 ரன்கள் எடுத்திருக்கும் போது ரோதித் ஷர்மா ஆட்டமிழந்தார். 25 பந்தில் 41 ரன்கள்  எடுத்து மிகப்பெரிய ரன் சேஸிங்குக்கு அடித்தளம் இட்டுத்தந்தார் ரோஹித் ஷர்மா. அதன் பின்னர் இணைந்த விராட் கோலி - தவான் ஜோடி,  ரன்ரேட்டை கருத்தில் கொண்டு, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், விக்கெட்டை பாதுகாத்தும் அற்புதமாக விளையாடியது. இந்த ஜோடி 212 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 74 பந்தில் 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது அடுத்தடுத்து தவான், கோலி அவுட்டாயினர். 277-1 என்ற நிலையில் இருந்து, 323 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

231903.jpg


விராட் கோலி இன்று விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது. வழக்கமாக  களமிறங்கியவுடன் முதல் பத்து பந்துகளில் பெரிய ஷாட்டுகள் விளையாடாமல், களத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு, பின்னர் தான் பெரிய இன்னிங்க்ஸ் விளையாடுவார் கோலி.  ஆனால் இன்றைய தினம்,  இறங்கிய முதல் பந்தில் இருந்தே வெளுத்து கட்டினார். விராட் கோலியின் அபார விளாசலில் பந்துகள் பவுண்டரிகளை நோக்கி ஓடின. பால்கனர் பந்துவீச்சில் ஒரு சிக்சரை விளாசி,  கெத்தாக சிரித்தார் விராட் கோலி.

அடங்காத காளை போல சீறிய கோலியைக் கண்டு ஆஸ்திரேலிய பவுலர்கள் அரண்டு போயினர். வழக்கமாக விட்டு கொடுக்காமல் போராடும் ஆஸ்திரேலியர்கள்,  விராட் கோலி - தவான் ஜோடி களத்தில் இருக்கும்போது சோர்ந்து போய் காணப்பட்டனர். தனது 27 வயதில் 25 சதமடித்து சாதனை புரிந்திருக்கிறார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் 21 ஆண்டுகள் ஒருதின போட்டி விளையாடி, 51 சதங்கள் எடுத்ததே இன்று வரை உலக சாதனையாக இருக்கிறது. விராட் கோலி கடந்த ஏழு வருடங்கள் கிரிக்கெட் விளையாடி, 162 ஒருதின போட்டிகளில் 25 சதம் விளாசியிருக்கிறார். இந்த தொடரில் மட்டும் இதுவரை இரண்டு சதமும், இரண்டு  அரை   சதமும் அடித்திருக்கிறார்.
 

231899.jpg


விராட் கோலியை பொறுத்தவரையில் சேஸிங்கில் கில்லி. கடந்த எட்டு வருடங்களில், இதுவரை ஐந்து முறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்திருக்கிறது இந்திய அணி. அதில் நான்கு போட்டிகளில் சதமடித்து வெற்றிக்கு வித்திட்டவர் விராட்கோலி.

இந்திய அணி சேஸிங் செய்யும்போது விராட் கோலியின் சராசரி 62.77. விராட் கோலி நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டால், இந்திய அணி எவ்வளவு ரன்களாக இருந்தாலும் சேஸ் செய்து விடும் என்பதுதான் வரலாறு. சேஸிங் சமயத்தில் விராட் கோலி,  அரிதாக சொற்ப ரன்களில் அவுட்டாகிவிட்டால், இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட் விழும்போதே மோசமான தோல்வி உறுதியாகியிருக்கும். இந்த போட்டியில் மிக மிக எளிதாக இந்தியா வெற்றி பெற்றிருக்க முடியும். எனினும் கேப்டன் தோனி மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் சொதப்பல், ரஹானேவுக்கு ஏற்பட்ட காயம் ஆகியவற்றின் காரணமாக துரதிஷ்டவசமாக இந்திய அணி தோல்வியை தழுவியிருக்கிறது.

இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தாலும், கடந்த நான்கு போட்டிகளும் நிலைத்து நின்று  தனி ஒருவனாக போராடி கொண்டிருக்கும் விராட் கோலிக்கு நம் வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்.

http://www.vikatan.com/news/sports/57902-virat-kholi-in-indian-chasing.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.