Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷேன் வோர்ன், மெக்ராத் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Featured Replies

சாதனை பந்து வீச்சாளர்களான ஷேன் வோர்ன், மெக்ராத் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அரங்கில் முடிசூடா மன்னர்களாக நடைபோட்டு வரும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஷேன்வோர்ன் (37 வயது), மெக்ராத் (36 வயது). இருவரும் இணைந்து சுமார் 1200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை சமீபத்தில் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக இவர்கள் இருவரும் இத்தொடருடன் ஓய்வுபெறப்போவதாக புகழ்பெற்ற அவுஸ்திரேலிய `ரி.வி.' `சனல் நைன்' தகவல் வெளியிட்டுள்ளது.

பேர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டின்போது, விரைவில் ஓய்வு பெறப்போவதாக வோர்ன், சூசகமாக தெரிவித்தார். ஆனால், மெக்ராத்தும் தற்போது இணைந்துள்ளது அவுஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடுவரிசை துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் ஓய்வு பெற்றார். அவர் விலகிய அதிர்ச்சியிலிருந்த அணி மீள்வதற்குள் அடுத்த `குண்டு' வெடித்துவிட்டது. இது பற்றி அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைச் செய்தித் தொடர்பாளர் பீற்றர் யங் கூறுகையில், "இருவரும் மிகச் சிறந்த வீரர்கள். எதிர்காலத்தை நிர்ணயிப்பது அவர்களது சொந்த முடிவு. இதுபற்றி வேறு எதுவும் கூற முடியாது," என்றார்.

கிரிக்கெட் உலகில் சாதனை நாயகனாக வோர்ன் உலா வந்தபோதிலும், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் அவருக்கு ஓராண்டு போட்டிகளில் பங்கேற்கத் தடை கிடைத்தது. மேலும், சூதாடிகளுடன் தொடர்புகொண்டது, பாலியல் புகார் என பலவற்றில் மாட்டியுள்ளார்.

கடந்த ஆஷஸ் தொடரில் 40 விக்கெட் வீழ்த்தினார். வேகப் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் புரிந்த காலகட்டத்தில் சுழற்பந்து வீச்சை மீண்டும் பிரபலமாக்கிய பெருமை இவரையே சேரும்.

தனது ஓய்வு குறித்து முறையான அறிக்கையை ஷேன்வோர்ன் நேற்று வெளியிடவிருந்தார். மெக்ராத் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் தெரிவிப்பார். இவர்களது ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

மெக்ராத், சர்ச்சைகளில் அவ்வளவாக சிக்காதபோதும், பலமுறை காயங்களால் அவதிப்பட்டு வந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த மனைவியை கவனித்துக் கொள்வதற்காக சுமார் 10 மாதம் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார். சில மாதங்களுக்கு முன் கோலாலம்பூரில் நடந்த முத்தரப்பு தொடரில்தான் மீண்டும் பங்குகொண்டார்.

ஆஷஸ் தொடர் நிறைவடைந்தவுடன் `டாட்ஸ் ஆர்மி' என்று செல்லமாக அழைக்கப்படும் அவுஸ்திரேலிய அணி விரைவில் கலைந்துவிடும் என்ற பத்திரிகைகளின் கணிப்பு ஓரளவுக்கு சரியாக அமைந்துவிட்டது.

தற்போது அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் கில்கிறிஸ்ட், ஹைடன், லாங்கர் மட்டுமே. இதில் கில்கிறிஸ்ட் உலகக் கிண்ணப் போட்டி முடிந்தவுடன் ஓய்வுபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனினும், அவுஸ்திரேலிய அணிக்கு இதுபோன்ற ஒட்டு மொத்தமாக முன்னணி வீரர்கள் ஓய்வு பெறுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் 1980 களில் மார்ஷ், கிரேக் சப்பல் மற்றும் லில்லி அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர்.

ஷேன்வோர்ன், மெக்ராத் ஓய்வுபெறும் செய்திக்கு முன்னாள் வீரர்கள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்களின் கருத்துகள்:

அலன் போர்டர் (ஆஸி., முன்னாள் கப்டன்): "வோர்ன், மெக்ராத் முடிவு எனக்கு மிகுந்த அதிர்ச்சி தருகிறது. இம்முடிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. வோர்ன் தற்போது சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரிடம் சிறந்த திறமை இருப்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.

முதல் போட்டியில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய இவர், மேலும் 698 விக்கெட் வீழ்த்துவார் என யாரும் கணித்திருக்கமாட்டார்கள். பிராட்மனுடன், வோர்னை ஒப்பிடுவது கடினம்" என்றார்.

இயன்சப்பல் (ஆஸி., முன்னாள் வீரர்): "தங்களது `போர்மின்' உச்சத்தில் இருக்கும் போது வீரர்கள் ஓய்வு பெறுவது சிறந்தது. இவர்கள் எடுத்துள்ள இம்முடிவு சரியானதுதான். ஓய்வுபெற சரியான தருணம் இது" என்றார்.

www.thinakkural.com

  • தொடங்கியவர்

விக்கெட் மழைபொழிந்த வோர்ன் ஆஷஸுடன் ஓய்வு.

உலகின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷேன் வோர்ன் ஆஷஷ் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இதன்படி அவர் சிட்னியில் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆஷஷ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெறுகிறார்.

1992 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த வோர்ன் இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 992 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர். இதன்போது அவர் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளையும் 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 699 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதற்கமைய அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்கு இரண்டு சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் ஆகும்.

தனது ஓய்வு குறித்து 37 வயதான ஷேன் வோர்ன் ஊடகவியலாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடருடன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிகிறது. சர்வதேச கிரிக்கெட், உள்ளூர், கிரிக்கெட் என அனைத்து வகை போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் எனது வளர்ச்சி நம்ப முடியாத வகையில் அதிசயமாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு ஆஷஷ் தொடருடன் ஓய்வு பெறவிருந்தேன். ஆனால், அந்த தொடரில் அவுஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. தற்போது நாங்கள் ஏற்கனவே தொடரை வென்றுவிட்டோம். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எஞ்சி உள்ளன. அதில் 700 விக்கெட்டுகளை தொட்டு விடுவேன்.

அடிலெயிட்டில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி மறக்க முடியாது. அது நான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சிறந்த போட்டியாகும் என்றார்.

இதேபோன்று அவுஷ்திரேலியாவின் மற்றுமொரு வீரரான கிளென் மெக்ராத்தும் தனது ஓய்வு குறித்து இந்த ஆஷஷ் தொடர் முடிவுக்கு முன்னர் அறிவிப்பார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேவேளை ஷேன் வோர்னின் இந்த முடிவு குறித்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். வோர்னின் முடிவு எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வோர்ன் தற்போது சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரிடம் விஷேட திறமை இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். முதல் போட்டியில் 1 விக்கெட்டு மட்டுமே வீழ்த்திய இவர் கூடுதலாக 698 விக்கெட் வீழ்த்துவார் என யாரும் கணித்திருக்க மாட்டார்கள் என்றாலும் பிரெட்மனுடன் வோர்னை ஒப்பிடுவது கடினம் என்றார். இது தொடர்பாக அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான இயன் சப்பல் கூறியதாவது: ஆட்டத்தில் சோபிக்கும் நிலையிலேயே வீரர்கள் ஓய்வு பெறுவது சிறந்ததாகும். வோர்ன் எடுத்துள்ள இந்த முடிவு சரியானதுதான் ஓய்வு பெற சரியான தருணம் இது என்றார்.

ஏற்கனவே அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு முக்கிய வீரரான டேமியன் மார்டீன் இரண்டாவது ஆஷஷ் டெஸ்ட் போட்டியின் முடிவை அடுத்து திடீரென ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி முரளி வோர்னின் விக்கெட் பெறும் போராட்டம் ஆஷஷ் தொடருடன் முடிவடைகிறது. உலகின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முரளி 674 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார்.

இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகின்றேன்:- கிளென் மெக்ராத்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நோக்கம் எதுவும் இல்லை என்று அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் மறுப்புத் தெரிவித்தார்.

ஷேன் வோர்னுடன் இணைந்து அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு முன்னணி பந்துவீச்சாளரான கிளென் மெக்ராத்தும் ஓய்வு பெறும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையில் ஷேன் வோர்ன் தனது ஓய்வை நேற்று முன்தினம் அறிவித்தார். என்றாலும் தமக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என்று மெக்ராத் வானொலி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இச்செய்தி சுவாரஷ்யமாக உள்ளது. இவை எங்கிருந்து வெளிவருகின்றன என்று எனக்கு தெரியாது. தற்போதைக்கு எனது ஓய்வு குறித்து எதுவும் கூறமுடியாது. நான் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் தயாராகி வருகிறேன். பின்னர் ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது. அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவேன். நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகின்றேன் என்றார்.

www.virakesari.lk

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

பிந்திக்கிடைத்த செய்திகளின் படி 2007 பங்குனி மாதம் மேற்கிந்திய தீவுகளில் (West Indies) நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டியுடன் கிளென் மெக்ராத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலக கிண்ண போட்டிகளின் நேர அட்டவணை:-

http://www.cricinfo.com/wc2007/content/ser...mplate=schedule

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.