Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அணியை கட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பயிற்றுநர் கிறஹம் ஃபோர்ட் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால

Featured Replies

இலங்கை அணியை கட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பயிற்றுநர் கிறஹம் ஃபோர்ட் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால
 

 

சர்­வ­தேச கிரிக்கெட் பயிற்­று­நர்கள் பன்­னி­ரு­வ­ருடன் நடத்­திய கலந்­தா­லோ­ச­னை­களின் பின்னர் அதி­சி­றந்­த­வரை தெரிவு செய்­த­தாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்று­ந­ராக கிறஹம் போர்ட் ஃபோர்ட் நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து கருத்து வெளி­யிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

 

1461628.jpg

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் கேட்­போர்­ கூ­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டான சந்­திப்பில் பேசி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

எழுச்­சியை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருக்கும் எமது கிரிக்கெட் அணியை மீளக் கட்­டி­யெ­ழுப்பும் ஆற்றல் உலகத் தர­மிக்க பயிற்றுநர் கிறஹம் ஃபோர்­டிடம் இருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட் டார்.

 

தொடர்ந்து பேசிய திலங்க சும­தி­பால, ‘‘இலங்கை கிரிக்கெட் அணி முதன்­மை­யான அணி­யாக வர­வேண்டும் என்­பதே எமது நோக்கம்.

 

இதனைக் கருத்தில் கொண்டே கிறஹம் போர்ட்  ஃபோர்டை, 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் வரை­யான 45 மாதங்­களுக்கு ஒப்­பந்தம் செய்­துள்ளோம்.

 

கிறஹம் போர்ட் ஃபோர்டை மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்­று­ந­ராக நிய­மிப்­ப­தற்கு குமார் சங்­கக்­கார (இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்) பெரிதும் உத­வினார்.

 

அதே­போன்று சபையின் உதவித் தலை­வர்­க­ளான ஜயன்த தர்மதாச, கே. மதி­வாணன் ஆகி­யோரும் பங்­காற்­றி­யி­ருந்­தனர். விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ரவும் இவ் ­விட­யத்தில் ஆர்வம் செலுத்­தி­யி­ருந்தார்.

 

அவ­ருக்கு மூன்று வருட பதவிக் காலம் வழங்­கி­யி­ருந்தால் அதற்­கான ஒப்­பந்தம் 2019 ஜன­வரி 31 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டைந்­தி­ருக்கும். ஆனால், அவ் வருடம் இங்­கி­லாந்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடை­பெ­ற­வி­ருப்­பதால் அவ­ரது பத­விக்­காலத்தை 45 மாத­கங்­க­ளாக்­கினோம்.

 

உலகக் கிண்ணப் போட்­டி­களில் வெற்­றி­ பெற்று கிறஹம் போர்ட் ஃபோர்டின் பதவிக் காலத்தை மேலும் நீடிப்போம்’’ என்றார்.

 

இரு­பது 20 அணித் தலைவர்லசித் மாலிங்க


இலங்­கையின் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக லசித் மாலிங்­கவை நிய­மிப்­ப­தாக அவர் மேலும் கூறினார். 

 

கிரிக்கெட் தெரி­வா­ளர்­க­ளுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தையின்­போது இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் ஏஞ்­சலோ மெத்யூஸ் உதவி அணித் தலை­வ­ராக பதவி வகிப்பார் எனவும் அவர் கூறினார். 

 

இவர்கள் இரு­வ­ருக்கும் தினேஷ் சந்­திமால் ஒத்­துழைப்பு வழங்­குவார் எனக் குறிப்பிட்ட அவர், மாலிங்கவும் மெத்யூஸும் உபாதைக்குள்ளாகியிருப்பதால் இந்தியாவுடான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் தினேஷ் சந்திமால் அணித் தலைவராக செயற்படுவார் என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14616#sthash.3GBvL2F4.dpuf
  • தொடங்கியவர்
இலங்கை கிரிக்கெட் அணியை மீளக்கட்டியெழுப்புவது கடும் சவால்மிக்க பணி என்கிறார் கிறஹம் ஃபோர்ட்
2016-02-03 10:11:15

(நெவில் அன்­தனி)

 

இலங்கை கிரிக்கெட் விளை­யாட்டை மீளக்­கட்­டி­யெ­ழுப்பும் பணி­யா­னது கடும் சவால்மிக்­கது. இதனை முன்­னிட்டு கடு­மையாக உழைக்­க­வேண்டும். வீரர்கள் மத்­தியில் மிகு­தி­யான திறமை இருக்­கின்­றது. 

 

1460827.jpg

 

அதே­வேளை வீரர்­களின் செயற்­றி­னையும் மனோ­ப­லத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வது அவ­சி­ய­மா கும் என இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநர் கிற ஹம் போர்ட் கூறினார்.

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுப் பகல் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொண்டு பேசிய கிறஹம் ஃபோர்ட் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்­று­ந­ராக 2012இல் முதல் தட­வை­யாக நிய­மிக்­கப்­பட்ட கிறஹம் ஃபோர்ட் 2014 இல் அப் பத­வி­யி­லி­ருந்து விலகி சரே பிராந்­திய கிரிக்கெட் அணியின் பயிற்­று­ந­ரானார்.

 

இப்­போது திலங்க சும­தி­பால தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் இலங்­கையின் கிரிக்கெட் பயிற்­று­ந­ராக கிறஹம் ஃபோர்ட் மீண்டும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

 

இலங்கை அணி மீளக்­கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வதன் அவ­சியம் குறித்து கருத்து வெளி­யிட்ட கிறஹம் ஃபோர்ட், பொறுமை அவ­சியம் என்றார்.

 

‘‘இலங்கை கிரிக்கெட் அணி எழுச்­சியை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருக்கும் காலம் இது. காலத்­துக்கு காலம் ஒவ்­வொரு அணியும் இந்த நிலையை எதிர்­கொள்­வது இயல்பு. மீண்டும் எழுச்சி அடை­வ­தற்கு சில காலம் செல்­லலாம். ஒவ்­வொரு விட­யத்­தையும் கவ­ன­மாக ஆராய்ந்து தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்டும்.

 

இதனை முன்­னிட்டு பயிற்­று­நர்­களும் வீரர்­களும் பொறுமை காக்­க­வேண்டும். எழுச்­சியை நோக்கி நகரும் இக் காலப்­ப­கு­தி­யா­னது சவால்­மிக்­கது.

 

இந்தச் சவாலை எதிர்­கொண்டு அதில் வெற்­றி­கொள்ளும் வகையில் வீரர்­க­ளுடன் சுறு­சு­றுப்­பாக செயற்­ப­ட­வுள்ளேன்’’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

இலங்கை கிரிக்கட் வீரர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வம் தாராளமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனுபவமற்ற வீரர்களை முதலில் அனுபவசாலிகளாக்க வேண்டும் எனவும் கூறினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14608#sthash.nEHYgh1g.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.