Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காசி ஆனந்தன் ஆனந்த விகடனுக்கு எழுதிய பாலா அண்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் ஆனந்த விகடனுக்கு எழுதிய பாலா அண்ணா

http://www.tamilnaatham.com/pdf_files/vikatan_2006_12_23.pdf

கவிஞர் காசி ஆனந்தன்

"இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களிலும் தளராத நம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் தலைவர் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டுவியந்த அபூர்வமான குணாம்சம்!" என்று சொல்வார் ஆன்டன் பாலசிங்கம். பாலாவுக்கும் இது பொருந்தும்.

போர்க்களத்தில் உலாவந்த ஒரு தத்துவப் போர் வீரர், அரசியல் மேதை, இதழியலாளர்,மதியுரைஞர் என்று பாலா வுக்குப் பன்முகம் உண்டு. ஆனால், அவரைப் போராளி என்றே நான் அழைப்பேன். அதைத் தான் அவர் விரும்புவார். ஏனென்றால், பாலா, ஒரு போராளியாகவே, போராளிகள் கூடவே வாழ்ந்தார்.

தலைவர்களைச் சந்தித்த தலைவர்களில் ஒருவராய் அவர் பார்க்கப்படுகிறார். ஆனால், மக்களைச் சந்தித்த மக்களில் ஒருவராகத்தான் நான் அவரைப் பார்க்கிறேன். மக்கள் அவரை நேசித்தார்கள். 'பாலா அண்ணன்' என்ற சொல் மக்கள் நெஞ்செல்லாம் மந்திரமாயிற்று. தலைவர் பிரபாகரனுக்கு பாலா தாயாகவும் இருந்தார், பிள்ளையாகவும் இருந்தார். வரலாற்றில் தலைவர் பிரபாகரனைச் சரியாக அடையாளம் கண்டு வளர்த்தவர் அவர். சின்னஞ் சிறுவர்களாய், இதழ் அவிழா முகைகளாய், முற்றிவளராத பிறை நிலவுகளாய் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தொடக்க காலத்தில், பாலாதான் அவர்களிடையே சிந்தனையை வளர்த்து, அரசியல் அறிவு பெருக்கி, அவர்களைப் புடம் போட்டு எடுத்த சீரிய ஆசானாக விளங்கினார்.

ஒற்றைக் கைத்துப்பாக்கி யோடு புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட காலம் என் நினைவுக்கு வருகிறது. இன்று, வெட்டவெளி வானைத் தொட்டு நிற்கும், விரிந்து கிளை பரப்பிய ஆலமரமாய் புலிகள் இயக்கம். பாலாதான் அதன் வேர். தமிழீ ழம் என்றென்றும் அந்தத் தலைவனை மறப்பதற்கில்லை!

1979ல் பாலா சென்னைக்கு வந்தார். புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான இளங்குமரன் என்கிற பேபி சுப்ரமணியம்தான், லண்டனில் இருந்து வந்த பாலாவை சென்னையில் வைத்து தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சின்னஞ் சிறுவர்களான போராளிகளுக்குப் பாலா அரசியல் வகுப்பு களை நடத்தத் தொடங்கிய காலம் அது. சேகுவேரா,மாசேதுங், லெனின், ஹோசிமின், பிடல்காஸ்ட்ரோ போன்ற வீரத் தலைவர்களின் வரலாற்றைப் பாலா தலைவருக்கு எடுத்துரைத்தார். உலக அரசியல் வரலாற்றைப் போராளிகளோடு அவர் பகிர்ந்துகொண்ட தருணங்களில் தான், பல நூறு இளைஞர்களின் விடுதலை உணர்வு புலிகளின்பால் திடகாத்திரப்பட்டது.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பாலாவும், அடேலும், நானும் வல்வெட்டித் துறையில் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம். 1990&ல் எமது இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்குமான போர் மீண்டும் துவங்கியது. தலைவர் பிரபாகரன் என்னை அழைத்து, தமிழ்நாட்டுக்குச் சென்று இந்திய அரசுக்கும் தமிழீழ மக்களுக்குமான உறவை வலுப்படுத்துவதற்கான சில முயற்சிகளில் நீங்கள் பயன்பட வேண்டும் என்றார். வல்வெட்டித்துறையிலிருந்து எங்கள் படகு கடலில் இறங்குவதற்கு முன்பு... பாலாவுடன்தான் என் கடைசி விருந்து. எத்தனை துன்பம் இருந்தாலும் வெளிக்காட்டாமல், தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக மாற்றும் திறமை பாலாவுக்கு உண்டு. அன்றும், அப்படித்தான் கலகலப்பாகவே பேசினார்.

தமிழீழ கடற்பரப்பில் சிங்கள ராணுவம், போராளிகளையும் மக்கள் படகுகளையும் தேடித்தேடி அழித்துவந்த கொடூரமான காலம் அது. பாலா என்னிடம் சொன்னார்... "கடற்பயணம் என்பது அடுத்த கரைக்குப் போய்ச் சேருகிற வரை, உயிர் உத்தரவாதம் இல்லாத பயணம் என்பது எனக்கும் தெரியும். ஆனால், போராட்ட வாழ்வில் தரையிலும், வானிலும், கடலிலும் நாம் இப்படி நெருப்பின் மேல்தான் தினம்தினம் நடந்துகொண்டு இருக்க வேண்டும். நமது பயணம் சுதந்திரத் தமிழீழத்துக்கானது. திடமாகப் போய் வாருங்கள்" என்று அனுப்பிவைத்தார். இப்போது, அவர் எமது 'தேசத்தின் குரல்!'

கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் ஓடிக் கழிந்துவிட்டன. என்னுடைய கடவுச் சீட்டு முடக்கப்பட்டு நான் தமிழகத்திலிருந்து வெளியேற முடியாத சூழல். இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதன் விளை வாக, பாலா தமிழகத்துக்கு வர முடியாத சூழல். நீண்ட நெடுங்காலமாய் சுகவீனப் பட்டிருந்த பாலாவை என்னால் சந்திக்கவே முடியவில்லை. காலம், என்னையும் பாலாவையும் துண்டாடிப் பிரித்ததும் நெருப்பாற்றில் நீந்தத்தானோ?!

ஆனந்தவிகடன்

இணைப்பிற்கு நன்றி சொல்லாமல் போக மனம் வரவில்லை..

நன்றி கந்தப்பு மற்றும் ஆளவந்தானுக்கு

விரிவான பதிவுக்கு -நன்றி ஆளவந்தான்!

நன்றி -இணைப்பினை - முதலில் தந்த - கந்தப்புவுக்கும்!

Edited by வர்ணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.