Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் அம்பயர் அசாத் ரவுப்பிற்கு 5 வருட தடை விதித்த பிசிசிஐ

Featured Replies

பாகிஸ்தான் அம்பயர் அசாத் ரவுப்பிற்கு 5 வருட தடை விதித்த பிசிசிஐ
 
 
  மும்பை: பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவுப் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு தங்களது போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

BCCI bans Pakistan umpire Asad Rauf for 5 years

அசாத் ரவுப் ஐபிஎல் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர். அப்போது, சூதாட்ட புக்கிகளிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்களை அவர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, அசாத் ரவுப் பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பிசிசிஐ அசாத் ரவுப்பை, 5 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஐபிஎல் உள்ளிட்ட பிசிசிஐ தொடர்பான எந்த ஒரு போட்டிகளிலும் அவரை நடுவராக பணியாற்ற இதன் மூலம் தடை உருவாகியுள்ளது. பிசிசிஐயின் ஊழல் தடுப்பு விதிமுறை பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
எனக்குத் தடை விதிப்பதற்கு பி.சி.சி.ஐக்கு அதிகாரம் இல்லை; 5 வருட தடை விதிக்கப்பட்ட பாக். நடுவர் அஸாத் ரவூப் கூறுகிறார்
2016-02-15 09:54:49

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான அஸாத் ரவூப்புக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி,ஐ) 5 வருட கால தடைவிதித்துள்ளது.

 

1487847.jpg

 

ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இத் தடை விதிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

 

ஆனால், தனக்கு தடை விதிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்கிறார் நடுவர் அஸாத் ரவூப்.

 

59 வயதான அஸாத் ரவூப் 2000 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர்.

 

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியொன்றின் மூலம்தான் அவரின் சர்வதேச கிரிக்கெட் நடுவர் வாழ்க்கை ஆரம்பமாகியது.

 

2006 ஆம் ஆண்டு ஐ.சி.சியின் சிறப்பு நடுவர் குழாமில் சேர்க்கப்பட்ட அஸாத் ரவூப் 49 டெஸ்ட் போட்டிகளிலும் 98 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 23 சர்வதேச இருபது 20 போட்டிகளிலும் நடுவராகக் கடமையாற்றியவர். 

 

ஆனால், சில வருடங்களுக்கு முன் பெரும் சர்ச்சைகளில் அவர் சிக்கிக் கொண்டார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இண்டியன் ப்றீமியர் லீக் போட்டிகளில் பரபரப்பை ஏற்படுத்திய “ஸ்பொட் பிக்ஸ்” சதி விவகாரத்தில் அஸாத் ரவூப் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 

 

இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதையடுத்து 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான நடுவர்களிலிருந்து அஸாத் ரவூப்பை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) நீக்கியது. 

 

1487842.jpgமும்பை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் நடுவர் அஸாத் ரவூப்பின் நலன்களைக் கருத்திற்கொண்டும், இவ்விளையாட்டின் நலன்களைக் கருத்திற்கொண்டும் ஐ.சி.சி.ஐ சம்பியன் கிண்ணப் போட்டிகளிலிருந்து அவரை வாபஸ் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக ஐ.சி.சி.ஐ அப்போது தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், அஸாத் ரவூப் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பி.சி.சி.ஐ. ஒழுக்காற்றுக்குழு அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது. 

 

2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத் தரகர்களிடம் இருந்து விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றதாகவும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

 

இதையடுத்து, பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் தலைமையில் ஜோதிராதித்ய சிந்தியா, நிரஞ்சன் ஷா ஆகியோர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

 

இறுதியாக, அஸாத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக இக்குழு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

 

“சூதாட்டப் புகாருக்கு ஆளான அஸாத் ரவூப் அது தொடர்பான விசாரணைக்காக ஆஜராகவில்லை.

 

1487843.jpgஎனினும், தனது முதல்கட்ட பதிலை கடந்த ஜனவரி 15 ஆம் திகதியும், எழுத்து பூர்வமான பதிலை கடந்த 8 ஆம் திகதியும் சமர்ப்பித்தார்.

 

இந்நிலையில் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குழுவின் அறிக்கை மற்றும் அஸாதின் பதில் அடிப்படையில், அஸாத் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.

 

இதனால், பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் நடுவராக செயல்படவோ, ஏனைய கிரிக்கெட் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவோ 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது'' என பி.சி.சி.ஐ. விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், தனக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு அஸாத் ரவூப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

"என் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என மும்பை நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், பிசிசிஐ எவ்வாறு எனக்கு தடை விதிக்கலாம். 

 

“ரவூப் மாதாந்தம் 30 லட்சம் ரூபா வருமானம் பெறுகிறார். அவர் ஜீன்ஸ், ரீசேர்ட், தொப்பி போன்ற சிறிய பரிசுப் பொருட்களைப் பெற்றது பெரிய விஷயம் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என அஸாத் ரவூப் கூறினார். 

 

விசாரணைக்காக எனது வழக்குரைஞருடன் பிசிசிஐ குழுவின் முன்பு ஆஜராவதாக கூறினேன்.

 

தனியாக வருமாறு கூறியதால் நான் அங்கு செல்லவில்லை. எனக்குத் தடை விதிப்பதற்கு பி.சி.சி.ஐக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இத்தடைக்கு எதிராக பிசிசிஐக்கு சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்புவேன்' என்று அஸாத் கூறினார்.

 

ஊழல் குற்றச்சாட்டுகள் தவிர, பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும் நடுவர் அஸாத் ரவூப் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

 

1487846.jpgஅஸாத் ரவூப் தன்னை திருமணம் செய்வதாக் கூறி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டபின் தன்னை ஏமாற்றினார் என மும்பை மொடலும் நடிகையுமான லீனா கபூர் 2012 ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது. பல புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

 

அஸாத் ரவூப் தன்னுடன் 15 தடவைகள் பாலியல்  உறவு வைத்துக் கொண்டதாக கூறிய லீனா கபூர், எங்கெங்கு அது நடந்தது என்பதையும் மும்பை பொலிஸாரிடம் அவர் தெரிவித்தார். “இலங்கையில் 3 நாட்கள் நான் ரவூப்புடன் இணைந்து ஒரே ஹோட்டல் அறையில், ஒரே கட்டிலில் தங்கியிருந்தேன்.

 

அப்போது நாங்கள் மிகுந்த உணர்ச்சிகரமான உறவை வைத்துக் கொண்டோம். பின்னர் நான் மும்பை திரும்பியதும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் என்னைப் பார்க்க வந்திருந்தார் ரவூப். 7 நாட்கள் என்னுடைய லோகந்த்வாலா குடியிருப்பில் என்னுடன் தங்கினார்.

 

அப்போது 6 முறை உறவு வைத்துக் கொண்டார். பின்னர் ஐபிஎல் போட்டிகளின்போது புனேவில் நான்கு நாட்களும், டெல்லியில் 2 நாட்களும் என்னுடன் தங்கியிருந்தார்.

 

இந்த 6 நாட்களிலும் ஆறு முறை உறவு வைத்துக் கொண்டார்” என லீனா  கபூர் தனது முறைப்பாட்டில் தெரிவித்தார். 

 

ஆனால், இக் குற்றச்சாட்டுகளை மறுத்த நடுவர் அஸாத் ரவூப், “லீனா கபூர் யார் என்றே எனக்குத் தெரியாது.

 

எனக்கு நிறைய பெண் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் பல புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துள்ளேன்.

 

இதைப் பயன்படுத்திக் கொண்டு லீனா என்னை பிளாக்மெயில் செய்ய முயற்சிக்கிறார், இதன் மூலம் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இடம்பெற அவர் முயற்சிக்கிறார்” எனக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=14878#sthash.LaM8BRGS.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.