Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 4 கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு இடமில்லை: வைகோ உறுதி!

Featured Replies

மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 4 கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு இடமில்லை: வைகோ உறுதி!

 

makkal%20nala%20kootani%20campaign%20400புதுக்கோட்டை: மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை சேர்க்க மாட்டோம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.  இந்திய கம்யூ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, 'தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்டது. அரசியலில் நேர்மை, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இதை துவக்கினோம். ஆனால் தமிழகத்தின் பெரிய கட்சியாகவும், மூத்த தலைவராக உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதை ராஜதந்திரம் என்று கூறுகின்றனர்.

அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது மாட்டுச் சந்தை போன்று ஆகிவிட்டது. அரசியலை வியாபாரப் பொருள் ஆக்கிவிட்டனர். தி.மு.கவும், அ.தி.மு.கவும் தமிழகத்தை லஞ்ச, லாவண்யமிக்க மாநிலமாகவும், மதுபானம் ஆறாக ஓடும் மாநிலமாகவும் மாற்றிவிட்டனர்.

தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவிற்கு மாற்றாக, வெளிப்படைத்தன்மை கொண்ட கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் கூட்டணியில் இணைந்தால் வரவேற்போம். மத்தியில் கப்பல்துறை அமைச்சராக இருந்தும், கப்பல் வாங்காத, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்காத அமைச்சராக ஜி.கே.வாசன் விளங்குகிறார். அதனால் அவர் இக்கூட்டணிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது,“ மக்கள் நலக் கூட்டணி. இக்கூட்டணி ஒரே இரவில் உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. நீண்டநாள் நாங்கள் ஆலோசித்து உருவாக்கப்பட்ட கூட்டணி. அ.தி.மு.க மற்றும் தி.மு.கவிற்கு எதிரான மாற்று அரசியலை முன்வைத்து கலந்து பேசி உருவாக்கப்பட்டதுதான் இந்த கூட்டணி.

makkal%20nala%20kootani%20campaign%20600

அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணியில் எந்த கட்சி இணைந்தாலும் கலந்து பேச முடியாது. தூதுவர்கள் மூலம் மட்டுமே பேச முடியும். இணையும் கட்சிக்கு இத்தனை சீட்டு என கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.கவோ, தி.மு.கவோ அறிவிக்கும். அப்போதுதான் அந்த கட்சிக்கு எத்தனை சீட்டு கிடைத்துள்ளது என்பது தெரியும். மேலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில் தொகுதியை வழங்கிவிட்டு, மீதமுள்ள தொகுதிகளில், அந்த கட்சி தொண்டர்களின் உழைப்பினை சுரண்டும் செயலை அக்கட்சிகள் செய்கின்றன.

 1967-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அண்ணா தலைமையில், ராஜாஜி, காயிதேமில்லத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்  கட்சிகள் இணைந்து, காங்கிரஸ் கட்சியை வீழ்த்தினர். அந்த கூட்டணியைப் போல மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அ.தி.மு.க மற்றும் தி.மு.கவை வீழ்த்தப் போவது உறுதி” என்றார்.

“ கடந்த காலங்களில் தி.மு.கவோடும், அ.தி.மு.கவோடும் கூட்டணி வைத்து போட்டியிட்டது மார்க்சிஸ்ட். மக்களுக்கு நன்மைகள் செய்யும் என்ற எண்ணத்தில் அணி சேருகிறோம். ஆனால் அக்கட்சிகள் மக்களுக்கு எதிராக செயல்படும்போது, அக்கட்சிகள் ஊழல்கள் செய்யும்போது, அக்கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அக்கட்சிகளை எதிர்த்து போராட்டங்களை செய்துள்ளோம். மேலும் அவர்களை திருத்த முயற்சி செய்கிறோம். அவ்வாறு அ.தி.மு.க மற்றும் தி.மு.கவை திருத்த முயன்றும் முடியாததால்தான், மக்கள் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

makkal%20nala%20kootani%20campaign%20600

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் ஊழலால் ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெளிவுபடுத்தி உள்ளார். இரு கட்சியினருக்கும் கிரானைட் ஊழலில் பங்கு உள்ளது. ஊழல் பணம் அக்கட்சிகளின் நிர்வாகிகளுக்கு மடை மாற்றப்பட்டது. இந்த ஊழல் குறித்து ஜெயலலிதாவும், கருணாநிதியும் வாய்திறக்க வில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கு தி.மு.க காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை தமிழக அரசுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அதாவது தமிழகத்தில் குழந்தை பிறக்கும்போதே, அந்த குழந்தையின் தலையில் ரூ.60 ஆயிரம் கடன் விழுகிறது. தமிழகத்தில் ஊழல் செய்வதில் அ.தி.மு.கவும், தி.மு.கவும் ஒன்றாகவே உள்ளன” என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

இறுதியாக பேசிய வைகோ, “ தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்களின் பிரச்னைகளை முன்னெடுக்க 4 கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்டது. இந்த கூட்டியக்கம் தேர்தலுக்கு பின்பும் தொடரும். இந்த மக்கள் நலக் கூட்டியக்கத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 4 கட்சிகள் மட்டுமே இடம்பெறும். இந்த கூட்டியக்கத்தில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை.

ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க தவிர மற்ற கட்சிகள் சேரலாம். கூட்டணிக்கு வரும் கட்சிகளை பரந்த மனதோடு வரவேற்கிறோம். தி.மு.க, சட்டப்பேரவை கூட்டணிக்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு காரணம், அக்கட்சி கொள்கை குழப்பத்தில் சிக்கியுள்ளது.

makkal%20nala%20kootani%20campaign%20600

மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல்வாதிகள், ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மதுக்கடைகள் மூடப்படும். தமிழர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம். மக்கள் நலக் கூட்டணியை உடைக்க சில கட்சிகள் சதி செய்கின்றன. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததுபோல செய்திகளை பரப்புகின்றன. ஆனால் எங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என நாங்கள் விரும்பும், இதுவரை இடம்பெறாத த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதாக அறிக்கை விடுத்துள்ளார்.  ஜி.கே.வாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். கட்சிகள் எந்தெந்த தொகுதியை பிரித்துக் கொள்வது என்பது குறித்து பின்னர் முடிவு செய்து அறிவிப்போம்" என்றார்.

http://www.vikatan.com/news/politics/58927-no-more-parties-in-makkal-nala-koottiyakkam-vaiko.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.