Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை'

Featured Replies

'அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை'

 

இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார்.

160214165605_reginold_cooray_512x288_bbc

 வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார்

தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட் குரே, வட-மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் தென்பகுதியிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கொண்டே முன்னெடுக்கப்பட்டு வந்தது என்று தெரிவித்த அவர், இவ்வாறான நடவடிக்கைகளை வட பகுதியைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

பொதுமக்களின் காணிகளை 6 மாதங்களுக்குள் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய வட-மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அதனை துரிததப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி எழுப்பப்படும் கேள்விகள் குறித்து பிபிசி அவரிடம் கேள்வி எழுப்பியது.

'அதில் தவறு இல்லை' என்று பதிலளித்த ரெஜினோல்ட் குரே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேல்மாகாணத்தில் தமிழர் ஆளுநாராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

தென் பகுதியில் முக்கிய பதவிகள் பலவற்றை தமிழர்கள் வகித்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160214_reginold_coore

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

'அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை'

 

இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார்.

160214165605_reginold_cooray_512x288_bbc

தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி எழுப்பப்படும் கேள்விகள் குறித்து பிபிசி அவரிடம் கேள்வி எழுப்பியது.

'அதில் தவறு இல்லை' என்று பதிலளித்த ரெஜினோல்ட் குரே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேல்மாகாணத்தில் தமிழர் ஆளுநாராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

தென் பகுதியில் முக்கிய பதவிகள் பலவற்றை தமிழர்கள் வகித்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் கூறினார்.

 

தென் பகுதியில் முக்கிய பதவிகள் பலவற்றை வகித்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியில் பேசி அங்கு கடமை செய்ய முடியுமா?? ஆனால் பெரும்பாண்மையாகத் தமிழர் வசிக்கும் பகுதியில், முக்கிய பதவிகள் வகிக்கும் சிங்களவர்களுக்குத் தமிழ் தெரியாது. தங்கள் தாய்மொழியில் பேசியே நிர்வாகம் செய்கின்றனர். அங்கு பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் இவர்களிடம் தங்கள் பிரச்சனைகளை, தேவைகளை நேரடியாகத் தெரிவிக்க முடியாது. ஒரு மொழிபெயர்ப்பாளர் அங்கு அவசியம். மொழிபெயர்ப்பாளர் தவறாக மொழிபெயர்த்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு பின்னர் அவதிப்படவேண்டிய அவலநிலைதான் உள்ளது.

 
பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக கண்டியாத்திரை மேற்கொண்ட  யே. ஆர். யெயவர்த்தன பின்னர் யாழ்ப்பாணத்தில் பிரசாரத்திற்கு வந்தபோது, "கண்டியாத்திரை போன்று செய்வீர்களா?" எனக் கேள்வி கேட்கப்பட்டது. "அன்றைய நிலையில் நான் இருந்தால் இன்றும் செய்வேன்" என்று அவர் கூறியதாகவும், அதனை மொழிபெயர்த்தவர், "இன்றும் செய்வேன்" என்று மொட்டையாக மொழிபெயர்த்ததாலேயே பெரும் களேபரங்கள் ஏற்பட்டதாகப் பின்னாளில் செய்திகள் தெரிவித்தன.   
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.