Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் ராஜபக்ச அடுத்த வராம் கைதுசெய்யப்படலாம் ; மஹிந்த தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(2ம் இணைப்பு)

நாமல் ராஜபக்ச அடுத்த வராம் கைதுசெய்யப்படலாம் ; மஹிந்த தகவல்

[ Monday,15 February 2016, 03:34:35 ]   
mahinda.jpg

தனது மகன் நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைதுசெய்யப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை - ரன்வெல் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனது குடும்பத்தை தண்டிக்கவும் ஆதரவாளர்களை பழிவாங்கவுமே நிதிக்குற்றப்புலானாய்வை அலரிமாளிகையில் இயக்கி வருகின்றனர் எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

புலனாய்வு பிரிவிற்கான பொலிஸ் மா அதிபராக ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிதிக்குற்றப்புலனாய்வு விசாரணைப்பட்டியலில் தனது குடும்ப உறுப்பினர்களே முன்னணியிலுள்ளதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றில் தெரிவித்துவிட்டு அடுத்த வாரமளவில் குறித்த நபர் ஒருவரை கைதுசெய்யும் நிலைமை காணப்படுவதாகவும் அது தனது மகன் நாமல் ராஜபக்சவாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யானையின் வாளில் தொங்கிக்கொண்டு சொர்க்கம் செல்ல முயற்சிப்பதாக தெரிவித்த மஹிந்த, ஆனால் மக்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பிற்கும் நீதிமுறைக்கும் முரணானது என குறிப்பிட்ட அவர், இந்த நடைமுறையானது உலகில் எந்தவொரு நாட்டிலும் கையாளப்படாத முறை எனவும் கூறியுள்ளார்.

1ஆம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் கொலை மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படலாம் என்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் அதற்குரிய அறை தயாராக இருப்பதாகவும் பொலிஸ் திணைக்கள தகவல்கள் கூறுகின்றன.

திம்பிரிகஸ்யாய பகுதியில் உள்ள நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் பல மில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான சரியான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் நிதிமோசடி குற்றப்பிரிவு கூறியுள்ளது.

அதேவேளை ரக்பி வீரர் வசீம் கொலை தொடர்பாகவும் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை நாமல் ராஜபக்சவிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார்கள் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் அவருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும்  சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சி.எஸ்.என் தொலைக்காட்சி விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/18780

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.