Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைமை நீதிபதியின் ஆணைக்கு தடை விதித்த நீதிபதி கர்ணனின் உத்தரவால் சர்ச்சை

Featured Replies

தலைமை நீதிபதியின் ஆணைக்கு தடை விதித்த நீதிபதி கர்ணனின் உத்தரவால் சர்ச்சை

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

140909061118_supreme_court_india_624x351

 இந்திய உச்சநீதிமன்றம்

நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியமின் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு அலுவல்களை பட்டியலிட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் பானுமதி ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது.

இந்த விசாரணையின் இறுதியில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல்கள் ஒதுக்கப்பட வேண்டாம் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியா சாதி வெறி பிடித்த நாடு என குற்றம் சாட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், அதற்காக தான் வெட்கப்படுவதாகவும், தனது பிறப்புரிமையை விட்டுவிட்டு, சாதியில்லாத நாட்டிற்கு சென்றிட தயாராக உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும் அவர் அப்போது குற்றம் சாட்டினார்.

நீதிபதி சி.எஸ்.கர்ணன், தான் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை சக நீதிபதிகள் இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும், பல்வேறு வகைகளில் தனக்குத் தொந்தரவு அளிப்பதாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் அருகே அமர்ந்திருந்த இன்னொரு நீதிபதி அவரது காலணி இவர் மீது படுமாறு அமர்ந்திருந்தார் என்றும், குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது வேறொரு நீதிபதி, நாற்காலியொன்றில், நீதிபதி கர்ணனின் பெயரெழுதிய அட்டையினை கிழித்து காலடியில் போட்டு நசுக்கினார் என்றும், இன்னுமொரு சம்பவத்தில் பின்னாலிருந்த ஒரு நீதிபதி தனது நாற்காலியைப் பிடித்து ஆட்டினார் என்றும், நீதிமன்ற விழாக்களில் பங்கு பெற வாய்ப்பு அளிப்பதில்லை என்றும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் அந்த பட்டியல்களில் இடம்பெற்று வருகின்றன.

சுதந்திரமாக பல்வேறு முடிவுகளை தான் எடுப்பது பிடிக்காத சிலர் என் மீது வீண் குற்றங்களை சுமத்துவதாகவும் அவர் தெரிவித்து வந்துள்ளார்.

இதனிடையே நீதிபதி சி.எஸ் கர்ணனை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றிவிடவேண்டுமென வலியுறுத்தி சென்னை தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த ஆர்.கே.அகர்வால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி சதாசிவத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து நீதிபதி அகர்வால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் நீதிபதி சி.எஸ் கர்ணன் மனு செய்திருந்தார்.

இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை கூட நீதிபதி சி.எஸ்.கர்ணன், தாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் சக நீதிபதிகள் தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் பல்வேறு வகைகளில் தனக்குத் தொந்தரவு அளிப்பதாகவும் புகார் கூறியும், இதில் தனக்கு நீதி கோரியும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் மனுச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/india/2016/02/160215_justicekarnan

  • தொடங்கியவர்

'சாதிவெறி பிடித்த இந்தியாவில் இருக்க மாட்டேன்!' - சென்னை ஐகோர்ட் நீதிபதி பகீர்!

 

"சாதிவெறி பிடித்த நாடு இந்தியா... அந்த நாட்டில் நான் இருக்க கொஞ்சமும் விரும்பவில்லை..!'' என்று சொல்லி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்.

சமீபத்தில் கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவின் மீது  நீதிபதி கர்ணன் தடை விதித்தார். அத்தோடு நீதி பரிபாலனத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும்,  பணியிட மாற்றம் தொடர்பான ஆவணங்களுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளிக்க வேண்டும் என்றும்  அவருக்கு கர்ணன் நோட்டீஸ் அனுப்பினார்.

karnan_vc1.jpg


இந்த சம்பவம் இந்திய அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "இங்கே ஆதிக்க சாதியினர் அனைத்துத் துறையினிலும் அமர்ந்து கொண்டு சாதிய ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சாதிவெறி பிடித்த நாடாக மாறிக் கொண்டு வருகிறது. இந்த சாதி வெறி பிடித்த நாட்டில் நான் இருக்க விரும்பவில்லை!" என்று கூறினார்.

நீதிமன்றப் பணிகள் எதையும் நீதிபதி கர்ணனுக்குத் தரவேண்டாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் ஆர்டர் சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/59171-chennai-high-court-justice-karnan.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.