Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா

<p>இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன?</p>
 

 

புலம்பெயர் தமிழ் மக்களின் சமூகவெளியை இரண்டாவது தலைமுறையினர் கூடுதலாக நிரப்ப ஆரம்பித்துள்ளனர். இங்கு இரண்டாவது தலைமுறை என்பது 1983 க்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் பிள்ளைகளையே கூடுதலாகக் குறிக்கிறது. 1980 க்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் மூன்றாம் நான்காம் தலைமுறையினரும் உருவாகி விட்டனர். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களே புலம்பெயர் தமிழர் சமூகத்தின் பெரும்பான்மையினராக உள்ளனர். தமது பிள்ளைகளை முன்னேற்றுவது குறித்து பெற்றோர்களாகிய முதலாவது தலைமுறையினர் செலுத்திய, செலுத்தி வரும் அக்கறை மிகுந்த கவனத்துக்குரியது. இன்றைய பத்தி இரண்டாவது தலைமுறையின் வளர்ச்சியில், வெற்றியில் முதலாவது தலைமுறையின் பங்கைத் தொட்டுச் செல்வதோடு இரண்டாவது தலைமுறையின் அரசியல் பிரவேசத்தில் முதலாவது தலைமுறை வகித்த பாத்திரம் தொடர்பாக நல்லதோர் உதாரணத்தையும் பதிவு செய்கிறது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தவர்கள் அநேகமாக அரசியல் தஞ்சம் கோருபவர்களாகவே இருந்தார்கள். தாங்கள் திட்டமிட்டுப் புறப்பட்ட நாடுகளில் இவர்கள் எல்லோரும் போய்ச் சேர்ந்து விடவும் இல்லை. இவ்வளவு நீண்டகாலம் புலம்பெயர் நாடுகளில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கவேண்டி வரும் என்றும் இவர்கள் எண்ணியதுமில்லை. வந்த நாள் முதலாக இன்று வரை தங்கள் குடும்ப நலனுக்காக இவர்கள் கடுமையான உழைப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இது நல்ல வேலை அல்லது கூடாத வேலை என்ற பாகுபாடு காட்டாமல் ஊதியம் தரக்கூடிய எந்த வேலை என்றாலும் மறுக்காமல் சலிக்காமல் இவர்கள் உழைத்தார்கள். புலம்பெயர் நாடுகள் எல்லாவற்றிலும் தமிழர்கள் விசுவாசமான வேலையாட்கள் என்றும் கடினமான உழைப்பாளிகள் என்றும் நற்பெயர் கிடைத்தது.

ஆரம்பத்தில் வந்த கடன் அடைத்தல், சகோதரிகளின் திருமணச் சீதனத்துக்காக பணம் சேகரித்தல், சகோதர சகோதரிகளை வெளிநாட்டுக்குக் கூப்பிடுதல், யுத்தகாலத்தில் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக இவர்கள் தமது உழைப்பை நல்கினர். தாயகத்தின் தேவைகளுக்காகவும் இவர்கள் நிதிப் பங்களிப்பு செய்தார்கள். தாயகத்தில் குடும்பச்சுமை சற்றுக் குறைய வெளிநாடுகளில் தமது குடும்பத்தை அமைத்துக் கொண்டனர். குடும்ப இணைவுக்காக புலம்பெயர்ந்தவர்களும் சேர, புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றது. குடும்பத்தில் பிள்ளைகளும் வந்த சேர புதியதோர் தலைமுறை மெல்ல மெல்ல வளர்ந்து வந்து இன்றைய புலம்பெயர் தமிழ் சமூகத்தின் 1 மில்லியன் தொகையில் குறைந்தது காற்பங்கு எண்ணிக்கையினைக் கொண்டவர்களாக இரண்டாம் தலைமுறையினர் தலையெடுத்து விட்டனர்.

பெற்றோர்களான முதலாம் தலைமுறையினர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த அக்கறை செலுத்தினர். தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதற்கு தம்மால் ஆன முயற்சிகள் எல்லாம் செய்தார்கள். தமது பிள்ளைகள் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்பதற்காக உலகெங்கும் தமிழ்ப் பாடசாலைகளை அமைத்தனர். தமது பிள்ளைகள் தமது மதத்தையும் பண்பாட்டையும் பேண வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளில் கோவில்களை அமைத்தனர். நடனம், இசை போன்ற கலைகளையும் தமது பிள்ளைகளுக்கு போதித்தனர். பிள்ளைகள் அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும் வழிதவறிப் போகக்கூடாது என்பதற்காகவும் மிகவும் கண்காணிப்புடன் பிள்ளைகளை வழிநடத்தினர். பிள்ளைகள் கேட்கும் அனைத்தையுமே அவர்கள் வழங்கினர்.

தமிழ் இரண்டாம் தலைமுறையினர் கல்வியில் வெற்றிகரமாக தம்மை நிலைறிறுத்தி நல்ல தொழில் வாய்ப்பைப் பெற்று வருகிறார்கள். இவர்கள் கல்வியில் அடைந்த முன்னேற்றத்துக்கு பெற்றோர்கள் கல்வியில் காட்டிய அக்கறையும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இரண்டாவது தலைமுறையினரின் திருமண விடயங்களிலும் பெற்றோர் கூடுதல் பாத்திரத்தை வகிக்க விரும்பினாலும் நடைமுறையில் பிள்ளைகளின் முடிவை அவர்களால் மீற முடியாததோர் நிலைமையே உள்ளது. அவ்வாறு பிள்ளைகளின் விருப்பத்தை மீறித் தமது விருப்பத்தை பெற்றோர் திணிக்க முயன்று நடைபெற்ற திருமணங்கள் நீடித்து நிலைக்கவில்லை என்பதுவும் பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. பிள்ளைகள் தமது விரும்பத்தின்படி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் நடைபெறும் திருமணங்களால் உருவாகும் குடும்பங்களிலும் பல நீடித்து நிலைக்காமல் போகும் நிலை தமது பிள்ளைகளின் எதிர்கால குடும்ப வாழ்க்கை தொடர்பான கவலைகளை பல பெற்றோருக்கு ஏற்படுத்தியுள்ளமையினையும் அவதானிக்க முடிகிறது.

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் தமக்காக படும் பாடுகள் தொடர்பான அனுதாபத்தையும் அதேவேளை அவர்களின் தம்மீதான அதீத ஈடுபாடு குறித்து ஒருவகைச் சலிப்புத்தன்மையும் காணக்கூடியதாய் உள்ளது. பெற்றோர்களிடம் ஒரு பக்கத்தில் மதிப்பும் மறுபக்கத்தில் ஒரு வகையான சீற்றமும் உள்ள பிள்ளைகள் பலர் உள்ளனர். பெற்றோர்களின் தம்மீதான கண்காணிப்பு ஒரு வகையான சமூகக் கட்டுப்பாடாக பரிணமித்திருப்பதை பல பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் அதிகமாக இருப்பதுவும் அவர்களுக்கு அநீதியாகத் தெரிகிறது. இருந்தபோதும் பொதுவாகப் பிள்ளைகள், பெற்றோர்களை புறக்கணித்து நிராகரிப்பது குறைவாகவே உள்ளது. பெற்றோர் பலரும் தம்மில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதனையும் காண முடிகிறது.

குடும்ப அரங்கத்துக்கு வெளியே இரண்டாவது தலைமுறையினர் தாம் வாழும் சமூகத்தின் அரசியலில் பங்கேற்பதனை முதலாம் தலைமுறைத் தமிழர் ஊக்குவித்தும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தும் உறுதுணையாக இருப்பது ஆரோக்கியமானதொரு விடயமாகப் படுகிறது. இதற்கு நல்லதொரு உதாரணத்தை நாம் ஒஸ்லோவில் காணமுடிந்தது. கடந்த வருடம் நோர்வேயில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஒஸ்லோவில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் கம்சாயினி, ஒஸ்லோவின் துணை முதல்வராகத் தெரிவாகியமை ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருந்நதது. இவரது இந்த வளர்ச்சிக்கு வழிசமைத்துக் கொடுத்தவர் முதலாம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவரே. இது ஊடகங்களில் பெரிதும் வெளியாகவில்லை.

2003 ஆம் ஆண்டில் தொழிற்கட்சி சார்பில் பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) என்ற முதலாம் தலைமுறை அரசியல் செயற்பாட்டாளருக்கு தொழிற்கட்சி சார்பில் ஒஸ்லோ மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அவரது வெற்றிக்காக ஒஸ்லோ வாழ் தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி உழைத்தனர். தமிழர் ஒருவர் ஒஸ்லோ மாநகரசபையின் உறுப்பினராக வரவேண்டும் என்பதற்காகக் கட்சி வேறுபாடுகள் தாண்டி வாக்களித்தனர். அவரும் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் தொழிற்கட்சி அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க முன்வந்தது. அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து மாநகரசபை உறுப்பினராக வந்திருக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக இளைய தலைமுறை ஒருவரை மாநகரசபை உறுப்பினராக்க வேண்டும் என்றும், எமது இரண்டாவது தலைமுறை அரசியலில் பிரகாசிக்க வேண்டும் என்றும் கருதிய அவர் தேடியலைந்து தெரிந்தெடுத்துக் கட்சிக்கு சிபாரிசு செய்தவரே கம்சாயினி.

<p>இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன?</p>

கம்சாயினிக்கு 2007 ஆம் ஆண்டு தொழிற் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பாஸ்கரன் பெற்றுக் கொடுத்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை இளைய தலைமுறையினருக்காக விட்டுக் கொடுக்கும் தொலைநோக்கும் பரந்த மனப்பான்மையும் பாஸ்கரனிடம் இருந்தமை முக்கியமானதொரு விடயம். 2007 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ் மக்கள் திரண்டு வாக்களித்து கம்சாயினியைத் தெரிவு செய்தனர். பின்னர் 2011 ஆம் ஆண்டிலும் தமிழ் மக்களின் வாக்கே கம்சாயினியை மாநகரசபை உறுப்பினராக்கியது. இவ்வாறு முதலாவது தலைமுறைத் தமிழர்கள் கொடுத்த ஆதரவும் ஊக்குவிப்பும் அரசியலில் கம்சாயினிக்குத் தந்த பிரதிநிதித்துவ அந்தஸ்துடன் அவரது உழைப்பும் திறமையும் இணைய இன்று இளைய வயதில் அவர் ஒஸ்லோவின் துணை முதல்வராகியிருக்கிறார்.

புலம்பெயர் தமிழர் சமூகம் மீதான அவதானிப்பை மேற்கொள்ளும் போது முன்மாதிரியான பல பெற்றோரும் பாஸ்கரன் போன்ற முன்மாதிரியான அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்களும் இருந்து வருவது புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினர் வெற்றிகரமான தடங்களைப் பதிப்பதற்குத் துணை செய்கிறது என்றே கூறவேண்டும்!

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=4e3a6e91-c5f6-4886-b43d-157748965e08

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2016 at 8:44 PM, கிருபன் said:

 

நல்ல பதிவு

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா

 
<p>இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன?</p>பாஸ்கரனின்

பாஸ்கரனின் பங்களிப்பு தலைமுறைகளிக்கிடையிலான ஆக்கபூர்வமான  அஞ்சல் ஓட்டத்துக்கு எடுத்துக்காட்டு. பாஸ்கரனுக்கு என் வாழ்த்துக்கள்.

<p>இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன?</p>

கம்சாயினியை சின்ன வயசில் பார்த்திருக்கிறேன் ஆற்ற்லும் துணிவுமுள்ளவர் கம்சாயினிக்கும் கட்டுரை ஆசிரியர் சர்வேக்கும்  எனது நல் வாழ்த்துக்கள்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.