Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியர்களை அவமதித்தாரா மார்ட்டினா நவ்ரடிலோவா ?: ட்விட்டர் காரசாரம்!

Featured Replies

இந்தியர்களை அவமதித்தாரா மார்ட்டினா நவ்ரடிலோவா ?: ட்விட்டர் காரசாரம்!

 

ennis%20one%20two.jpgபிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரடிலோவா இந்தியாவையும் இந்திய அரசியல் சூழலையும் அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளார் என அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

ஜே.என்.யூ மற்றும் வேறு சில பல்கலைகழங்களில் வெடித்துள்ள மாணவர் போராட்டங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்து ஆளும் அரசை சாடும் வகையில் எழுதப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இரண்டு கட்டுரைகளை பிப்ரவரி 22 ஆம் தேதி மார்டினா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அதிலிருந்து இவர் கருத்துக்கு எதிரான காரசாரமான பதிவுகளை ட்விட்டரில் பலர் பதிவேற்றி இவரை வசைபாடி  வருகின்றனர். ‘டென்னிஸ் பற்றி மட்டும் பேசவும், இதை பற்றி பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது’ போன்றெல்லாம் பலரும் பின்னூட்டமிட இதற்கு பதிலளித்துளார் மார்டினா.

செகோஸ்லோவோக்கியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு கீழ் வாழ்ந்த தனக்கு கருத்துசுதந்திரம் கூட இல்லாமல் வாழ்வது எவ்வளவு வேதனை என்பது தெரியும் எனவும்மிரட்டலும் வன்முறையும் ஒரு போதும் வெற்றிபெறாது என்பதை தான் பதிவிட்டேன் எனவும் கூறியுள்ளார் மார்டினா.

இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்தநாட்டிற்கும் பொருந்தும் எனவும் கூறினார். மேலும் இந்தியாவில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தை பற்றியும், அதனை எதிர்க்கும் அரசை பற்றியும் தனக்கு முழுதாக தெரியாதென்றும் இந்தியர்கள் எதை செய்ய வேண்டும் எனவும்செய்ய கூடாதென்றும் தான் சொல்ல எத்தனிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர்  பட்டத்தை 18 தடவை வென்றவர் மார்டினா நவ்ரடிலோவா என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் போட்டிகளில் செக் குடியரசு வீராங்கனை மார்டினா நவ்ரடிலோவா தான் தமது முன்னுதாரணம் என்று இந்திய வீரர் லியாண்டர் பயஸ்குறிப்பிட்டிருக்கிறார்.

1965 இல் இருந்து 2005 வரை வாழ்ந்த டென்னிஸ் வீராங்கனைகளில் மிகச் சிறந்த வீராங்கனை மார்டினா என ‘டென்னிஸ்’ பத்திரிகை இவரை குறிப்பிட்டிருந்தது. அப்சல் குருவை தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் கருத்து கூறியதில் ஆரம்பித்த ஜே.என்.யூ விவகாரம், தேசத்துரோகம், மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் கைது என படிப்படியாக நகர்ந்து ஆளும் பி.ஜே.பி அரசில் பேச்சுரிமை கூட பறிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளைத் தாண்டி மெல்ல உலகளாவிய கவனத்தை பெற்று வருகிறது.

http://www.vikatan.com/news/sports/59943-tennis-legend-martina-navratilova-jnu-sedition.art

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.