Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை

Featured Replies

றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை

March 09, 2016

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான 137ஆவது வருடாந்த வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.  மூன்று நாள் தொடராக நடைபெறவுள்ள இப் போட்டியை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து கொழும்பு கொள்ளுப்பிட்டி பிளவர் வீதி ஊடாக ஆரம்பித்த சைக்கிள் மற்றும் நடை பவனி, டுப்ளிகேஷன் வீதி ஊடாக பம்பலப்பிட்டியை கடந்து பின்னர், பாடசாலையை சென்றடைந்தது.

cricket-bat-and-ball-on-grass

குறித்த பவனியின்போது, மாணவர்களின் பாண்ட் வாத்திய கச்சேரி உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன், கார் பவனியுடன் இணைந்து அலங்கார யானைகளின் ஊர்வலமும் இடம்பெற்றன. இதன்போது, இரு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=10397&cat=2

 

  • தொடங்கியவர்
ரஷ்மிக்கவின் சதத்துடன் பலமான நிலையில் பரி. தோமாவின் அணி
2016-03-10 22:21:26

(நெவில் அன்தனி)

 

15458_15438_newsthumb_Untitled-6.jpgறோயல் கல்லூரிக்கு எதிராக எஸ். எஸ். சி. மைதானத்தில் இன்று ஆரம்பமான 137ஆவது நீலவர்ணங்களின் சமர் என்றழைக்கப்படும் மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டியில் கல்கிசை பரி. தோமாவின் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பரி. தோமாவின் கல்லூரி 5 விக்கெட்களை இழந்து 350 ஒட்டங்களைப் பெற்றிருந்தபோது அதன் முதலாவது இன்னிங்ஸை  நிறுத்திக்கொண்டது.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி விக்கெட் இழப்பின்றி ஒரு ஓட்டம் பெற்றிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 

ரஷ்மிக்க ஓப்பாத்த, யொஹான் மெண்டிஸ் ஆகிய முதலாவது விக்கட்டில் 197 ஓட்டங்களைப் பகிர்ந்து பரி. தோமாவின் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

 

ரஷ்மிக்க ஓப்பாத்த அபாரமாக துடுப்பெடுத்தாடி  124 ஓட்டங்களைப் பெற்றதுடன் யொஹான் மெண்டிஸ் 64 ஓட்டங்களைப் பெற்றார்.

 

மத்திய வரிசையில் அணித் தலைவர் சச்சித்த ஜயதிலக்க (50 ஆ.இ.), யொஹான் பெரேரா (38), ரவிந்து கொடிதுவக்கு (35) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச துடுப்பாட்டப் பங்களிப்பை பரி. தோமாவின் அணிக்கு வழங்கினர்.

 

றோயல் பந்துவீச்சில் எவரும் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு பிரகாசிக்கவில்லை. நால்வர் ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

 

இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மைதானம் விரிப்புகளினால் மறைக்கப்பட்டது. மைதானம் ஈரலிப்புத் தன்மையாக இருந்தால் நாளைய இரண்டாம் நாள் ஆட்டம் சற்று தாமதப்படலாம் எனக் கருதப்படுகின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15458#sthash.shNO36u7.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

புனித அந்தோணியாரா? இது அந்தோணியாருக்கே அடுக்குமா?

இவர்கள் பரி தோமாவின் கல்லூரியினர்.

சும்மா இருக்கிற நேரத்தில உதயனில் Proof reading செய்ய போகலாமா என்று நானே (இந்த அரைகுறை தமிழறிவுடன்) பல தடவைகள் யோசித்திருப்பேன். 

புனித அந்தோணியாரா? இது அந்தோணியாருக்கே அடுக்குமா?

இவர்கள் பரி தோமாவின் கல்லூரியினர்.

அது சரி கோசான் அந்தோனியாருக்கு பகிடி விளங்காதுதான்.
அதுக்காக அந்தோனியாரை கள்ளத்தோணி கணக்கில அந்தோணியாராக்குவது நல்லாயில்லை.

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

உங்க குசும்புத்தனத்துக்கு அளவே இல்லையா.  ஒத்துக்கிறேன் நீங்க தமிழ் ஸ்பெலிங்கில வல்லவர்தான்.

  • தொடங்கியவர்

கொழும்பு றோயல் கல்லூரி 04 விக்கட்டுக்களால் வெற்றி

கொழும்பு றோயல் கல்லூரி 04 விக்கட்டுக்களால் வெற்றி

March 12, 2016  06:52 pm

Bookmark and Share
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ செயிண்ட் தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 137வது நீலப் போர் கிரிக்கட் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரி அணி 04 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் தோமஸ் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 350 ஓட்டங்களை பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு றோயல் கல்லூரி அணி 09 விக்கட்டுக்களை இழந்து 328 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் தோமஸ் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு றோயல் கல்லூரி அணி 06 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.