Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவிப்பாளர் போட்டியில் நாடளாவிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்!

Featured Replies

அறிவிப்பாளர் போட்டியில் நாடளாவிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்!
 
 
அறிவிப்பாளர் போட்டியில் நாடளாவிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்!
நாடளாவிய ரீதியிலே இலங்கை முழுவதுமாக ஊடகத்துறையினரால் நாடாளுமன்ற அனுசரணையுடன் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறப்பான அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்டது.
 
இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருமளவான மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள். அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 38 போட்டியாளர்களை ஊடகத்துறையினர் தெரிவு செய்து கொழும்பு இளைஞர் நாடாளுமன்றத்திற்கு குரல் பதிவினை பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள்.
 
அதனையடுத்து 1ம் 2ம் 3ம் போன்ற இடங்கள் தீர்மானிக்கப்பதற்காக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நடுவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களை தீர்மானித்திருந்தார்கள்.
 
அப்போட்டியில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவன் உமாசங்கர் சங்கீத் நாடளாவிய ரீதியில் முதலாவது சிறந்த அறிவிப்பாளராக தெரிவாகியுள்ளார்.
 
இது தொடர்பாக உமாசங்கர் சங்கீத் தெரிவிக்கையில்,
நடுவர்களின் மத்தியில் தீர்மானிக்கப்பட்ட குரல் தேர்வில் தகுதியும் குரலிற்கான அடிப்படை பண்புகளோடு நடாத்தப்பட்ட அந்த தெரிவில் பாடசாலை ரீதியில் வயதுக்கட்டுப்பாடு அல்லாத சிறார்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை நடாத்தப்பட்டது.
 
ஊடகத்தின் பலம் நவீன வசதிகள் கொண்ட இடங்களை விட அழகியல் உணர்வுகளுடன் கூடிய வளர்ச்சி பெற்ற நகரங்களில் உள்ள மாணவர்களின் தொனியினை விட, வட பகுதியில் உள்ள மாணவனாகிய நான் அகில இலங்கை தமிழ் மாணவர்களில் இத் தேர்வில் முதல் மாணவனாக தேர்வுசெய்யப்பட்டதை இட்டு பெரும் மகிழ்வடைகிறேன்.
 
நான் முதலில் இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது கல்லூரிக்கும் என்னை வளர்த்தெடுத்து ஊக்கிவித்த ஆசான்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் என்னுடன் இந்த வாய்ப்பினில் இணைந்து கொண்ட நண்பர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். எனவும் எமது நாட்டு ஜனாதியும் ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவருமாகிய மேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்றது. இதையிட்டு நான் பெரும்மகிழ்வடைகிறேன். 
 
நான் அநேகமான போட்டிகளில் பங்கெடுப்பது மிக மிக குறைவு ஆனால் நான் எனது முதல் பயணத்திலே இந்த நிலையை எட்டியதையடுத்து மிகவும் மகிழ்வடைகிறேன். நான் எனக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை தக்க வைத்துக்கொள்கிறேன். அதற்காக நான் முழு மூச்சாக எப்பொழுதும் செயற்படுவேன். இந்த தமிழ் உலகிலே தமிழிற்கான உச்சரிப்பு அந்த தொனிக்கென ஏ.ர் அப்துல் ஹமீர் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அவரளவில் இல்லாவிட்டாலும் அவரைப்போன்று வருவதற்காக முயற்சிப்பேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்காலத்தில் உயர்வடைய எனக்கு கடவுள் தந்த வாய்ப்பினையிட்டு உவகையடைகின்றேன் என தெரிவித்தார்.
 
                            uma%20sankar2.jpg
 
                            umasankar1.jpg
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.