Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்!

Featured Replies

“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்!

அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர்.

மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழகனும், அவருக்கு அடுத்ததாக துரைமுருகனும், ஆர்.எஸ்.பாரதியும் அமர்ந்திருந்தனர். வெளியே பந்தலில் இருந்தவர்களில் ஆறு பேர் வீதம் உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்கள் கருணாநிதியின் அறைக்கு முன் இருந்த ஓர் அறையில் காத்திருக்க வைக்கப்பட்டு, ஒவ்வொரு நபராக வரிசைப்படி உள்ளே அனுப்பப்பட்டனர். இவர்களை பூச்சி முருகன், கு.க.செல்வம், உசேன் உள்ளிட்டோர் வரிசைப்படுத்தி உள்ளே அனுப்பிவைத்தனர். விண்ணப்பம் செய்திருந்தவரின் விருப்பமனுவினை ஸ்டாலின் வைத்திருந்தார். வந்தவர் இருக்கையில் அமர்ந்தவுடன், கருணாநிதியிடம் இருந்தே கேள்விகள் தொடங்கின. அவர் கேட்ட முதல் கேள்வி, “எந்தச் சமூகம் நீ?”, அடுத்ததாக, “எவ்வளவு செலவு செய்ய முடியும்?” என இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டார். கொஞ்சம் புதுமுகமாக இருப்பவர்களிடம், “கட்சிக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன, என்ன பொறுப்பில் உள்ளீர்கள்?” என்ற கேள்விகளை எழுப்பினார். பலர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் விருப்பமனு அளித்து இருந்தனர். அவர்கள், “எனக்கு சீட் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்கள் மாவட்டச் செயலாளருக்குக் கொடுக்க வேண்டாம்” என்ற புகாரைப் பதிவுசெய்தனர்.

p5a.jpg

நேர்காணலில் மு.க.ஸ்டாலினும் சில கேள்விகள் கேட்டார். அன்பழகன் யாரிடமும் எந்தக் கேள்விகளையும் கேட்கவில்லை. முகம் தெரிந்த சிலரிடம் மட்டும் அவர்களின் குடும்ப நிலவரங்களைக் கேட்டார்.  துரைமுருகன் விருப்பமனு அளித்தவர்களிடம், “உங்களைப் பற்றித் தெரியாதா? உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்திடலாம்” என நையாண்டி செய்துகொண்டிருந்தார். ஆர்.எஸ்.பாரதி தனது நோட்பேடில் நேர்காணலுக்கு வந்தவர்கள் கூறும் செலவுத் தொகையை மட்டும் குறிப்பெடுத்தார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் கருணாநிதி, “எவ்வளவு செலவு செய்ய முடியும்? எனக் கேட்க.. அந்தப் பெண் “ஒண்ணரை ரூபாய்” என்று சொன்னதும், ஆச்சர்யம் அடைந்த கருணாநிதி, “ஒண்ணரை ரூபாயை வைத்து என்ன பண்ண முடியும்” என திருப்பிக் கேட்டார். “தலைவரே, நான் ஒண்ணரைக் கோடின்னு சொல்ல வந்தேன்” எனக் கூறியதும், கருணாநிதி உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

மற்றொரு நபர், “ரெண்டு கோடி செலவு செய்வேன்” என்றார். “இப்பவே அந்தத் தொகையைக் கட்ட முடியுமா?” என்று ஸ்டாலின் கேட்டவுடன், தனது டிரைவருக்கு செல்போனிலிருந்து மெசேஜ் செய்துள்ளார். டிரைவர் சூட்கேஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு அறை வாசலுக்கு வந்துவிட்டார். ஸ்டாலினிடம், “என் காரில்தான் சூட்கேஸில் பணத்தை வைத்திருந்தேன். டிரைவர் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்” எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பல ‘சி’க்களை என்னால் செலவழிக்க முடியும் என்று கூறுபவர்களிடம் துரைமுருகன், “உனக்கு ஏது இவ்வளவு பணம், என்ன தொழில் பண்ற?” என்ற கேள்விகளால் குடைந்து எடுத்தார். நேர்காணலுக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணியினரிடம் கருணாநிதி, “உங்க ஏரியாவில் நமக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு, காங்கிரஸ் கூட்டணி பற்றி மக்கள் பேச்சு எப்படி இருக்கு?’’ என்ற விவரங்களையும் கேட்டுக்கொண்டார். திருப்பத்தூர் தொகுதிக்கு விருப்பமனு அளித்த எஸ்.எஸ்.தென்னரசு மகள் இளவரசியைப் பார்த்த கருணாநிதி, “எப்படி இருக்க?” என குடும்ப நிலவரங்கள் குறித்தும் விசாரித்துள்ளார்.

p5.jpg

காட்பாடி தொகுதி முறை வந்தபோது துரைமுருகனும் நேர்காணலில் கலந்துகொண்டார். அதேபோல், ஆர்.எஸ்.பாரதியும் ஆலந்தூர் தொகுதி நேர்காணலில் கலந்துகொண்டார். தலைவர்கள் தனக்கும் சீட், தனது வாரிசுக்கும் சீட் என வரக் கூடாது என தலைமை கடுமையாகக் கூறிவிட்டதால், ஐ.பழனிச்சாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் தங்களது வாரிசுகளைக் களம் இறக்க முடியாமல் போய்விட்டது. ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி அண்ணா நகர் தொகுதிக்கான நேர்காணலில் கலந்துகொண்டார்.  ஏழாம் தேதி இரவு சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற இருந்தது. கருணாநிதி சீக்கிரம் கிளம்பிய காரணத்தால் எட்டாம் தேதி காலை நடைபெற்றது. கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் மட்டுமே மனுசெய்து இருந்ததால், அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து, வேட்பாளர் அமரும் இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரிடம் துரைமுருகன், “எவ்வளவு செலவு செய்வீர்கள்?” எனக் கேட்க, “தேவைக்குத் தகுந்தவாறு செலவு செய்வேன்” என்று ஸ்டாலின் பதில் அளித்தார். துரைமுருகன் சிரித்துக்கொண்டே அருகில் இருந்த அன்பழகனிடம், “நீங்கள் ஏதும் கேள்வி கேளுங்கள்” எனக் கூற அன்பழகன், சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்


அசத்திய கருணாநிதி!

விருப்பமனு அளித்த மகன் மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடத்தி, தி.மு.க-வில் இன்னும் உட்கட்சி ஜனநாயகம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்ற பிம்பத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்திவிட்டார் கருணாநிதி. அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அறையில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க-வினரிடம் தொடங்கிய நேர்காணல், மார்ச் 8-ம் தேதி காலை ஸ்டாலினின் கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட சென்னை கிழக்கு மாவட்டத்தோடு நிறைவடைந்தது.

இடையில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை நான்கு நாட்கள் நேர்காணல் நடத்தப்படவில்லை. தி.மு.க-வில் குறுநில மன்னர்களாகச் செயல்படும் மாவட்டச் செயலாளர்களை மீறி நேர்காணலில் என்ன பேச முடியும் என்று தி.மு.க-வினர் புலம்பினர்.

எனவே, எந்த மாவட்டச் செயலாளரும் நேர்காணல் அறையில் அனுமதிக்கப்படவில்லை. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய நேர்காணல் மதியம் 12-30 மணி வரையும், பின்னர் 4-30 மணி முதல் 8.00 மணி வரையும் நடத்தப்பட்டது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த நேர்காணலில் ஸ்டாலின் மட்டும் ஒரே ஒரு நாள், உடல்நிலை சரியில்லாமல் வரவில்லை. ஆனால் கருணாநிதி அனைத்து நாட்களிலும் காலையும், மாலையும் தவறாமல் கலந்துகொண்டு அசத்திவிட்டார். தமிழகம் மற்றும் புதுவையில் 4,433 பேரிடம், நாள் ஒன்றுக்கு சராசரியாக 650 நபர்கள் வீதம் நேர்காணல் நடைபெற்றுள்ளது.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.