Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்!

Featured Replies

அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்!
 
 
அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்!
முன்னைய அரசு வடக்கு மக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக கோடிக்கணக்கான பொருள்களை வாரி வழங்கியபோதும் அன்று அம்மக்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. ஆனால், அம்மக்களுக்கு எவ்வித பொருட்களையும் பகிர்ந்தளிக்காத நான் இன்று வடக்கிற்கு செல்லும்போது மிக மகிழ்ச்சியுடனும் அன்புடனும் அவர்கள் வரவேற்கின்றார்கள். இதற்கு காரணம் யாதெனில் இதயத் துடிப்பை இனங்கண்டு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 
 
நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 'சாகித்திய கலாரச விந்தனய' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். 
 
இவ்விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி,
நல்லிணக்கம் தொடர்பான செய்தி இன்று வடக்கை விடவும் தெற்கிற்கு கொண்டுசெல்லும் தேவைப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்தார். வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வேலைத்திட்டத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தல் தெற்கு மக்களின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
இந்நாட்டின் நல்லிணக்க கொள்கையை பலப்படுத்துவதற்காக இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரால் இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இதற்காக ஒன்றுபடுமாறும் கோரிக்கை விடுத்தார். 
 
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் மேற்கொள்ள முடியாது எனவும், மதத் தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள் அனைவரும் தேசத்தின் எதிர்காலத்திற்காக இக்கடமையைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 
 
மேலும் இந்நாட்டை மகிழ்ச்சியாக வாழும் மக்களைக்கொண்ட ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய சொற்களை யதார்த்தமாக்குதல் வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வார்த்தைகளை இன்று சிலர் கொச்சைப்படுத்தி அவமரியாதை செய்தாலும் நாட்டின் எதிர்காலமானது நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
சபாநாயகர் கரு ஜயசூரிய, வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நவீனன் said:
அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்!
 
 
அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்!
 
 
இந்நாட்டின் நல்லிணக்க கொள்கையை பலப்படுத்துவதற்காக இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரால்
 
 
 

யாழ்கள இலக்கியவாதிகள் ,கருத்தாளர்கள் ,திண்ணையாளர்கள் எல்லாம் சிறிலங்கா சனாதிபதியின் விருப்பை நடை முறை படுத்துகிறோம் என்று சனதிபதியிடம் சொல்லுங்கோ...."யாப்பாபட்டுவா"என்று யாழ்களத்தை சிங்கள மொழியில் மொழிபெய‌ர்த்து வெளியிடலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.