Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு

Featured Replies

நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு

 

நாங்கள் கிங் மேக்கராக இருப்போம், விஜயகாந்த் கிங்காக இருப்பார் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேசினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 

Makkalleadermutharasan.jpg

முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் போர். மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக பஞ்ச பாண்டவர்கள் என்று கூறினார்.
 

அடுத்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இப்படி ஒரு முடிவை நாம் எடுப்போம் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நாம் எடுப்போம் என்பதை விட விஜயகாந்த் இப்படியொரு முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்த முடிவை எடுத்ததன் மூலம் அவருக்கு எதிராக பரப்பப்பட்ட அவதூறுகளையெல்லாம் அவர் தவிடுபொடியாக்கி இருக்கிறார். கடந்த 3 மாத காலமாக தொடர்ந்து களங்கத்தை கற்பிக்க முயற்சித்தார்கள். பல்வேறு யூகங்களை செய்திகளாக்கினார்கள். மனஉளைச்சலை தரக்கூடிய அளவிற்கு தேமுதிகவுக்கு எதிராக, விஜயகாந்த்துக்கு எதிராக என்னவெல்லாம் எழுத முடியுமோ அவ்வளவு அவதூறுகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்தனையும் ஒரே முடிவில் தவிடுபொடியாக்கி இருக்கிறார் என்பதுதான் இந்த நொடியில் அவர் செய்திருக்கிற மிகப்பெரிய சாதனை. ஒரு வரலாறு.

ஒரு கயிரு இழுக்கும்போட்டி நடந்தது போல் இது நடந்தது. ஒருபுறம் பாரதிய ஜனதா, இன்னொரு புறம் திராவிட முன்னேற்றக் கழகம், இன்னொரு புறம் மக்கள் நலக்கூட்டணி. யார் பக்கம் கேப்டன் போவார் என்கிற யூகம் தொடர்ந்து மூன்று மாத காலமாக இங்கே விவாதிக்கப்பட்டு வந்தது. மக்கள் பக்கம்தான் இருப்பார் கேப்டன் விஜயகாந்த் என்கிற அடிப்படையிலேயே மக்கள் நலக்கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத்துள்ளார். இதை யாரும் எதிர்பார்த்திராத ஒரு திருப்புமுனை. காஞ்சிபுரம் அரசியல் மாநாட்டுக்கு பிறகு திருப்புமுனை மாநாடு என்று சொன்னார். அப்போது ஒரு செய்தியை அவர் சொன்னார். என் தொண்டர்கள் என்னை கிங் மேக்கராக பார்க்கவிரும்பவில்லை. கிங்காங்க பார்க்க விரும்புகிறார்கள் என்று சொன்னார். அப்போதே ஒன்று தெளிவாகிவிட்டது, இனி யாரையும் நான் முதலமைச்சராக்க மாட்டேன், நான்தான் தமிழகத்தின் முதல்வராவேன் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அப்போது திமுகவுக்கு ரூல்டு அவுட். ஏற்கனவே அதிமுகவை அப்புறப்படுத்துவதுதான் என்னுடைய ஒரே நோக்கம், ஆளும் கட்சியாக இருக்கிற அதிமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக எதையும் செய்வேன் என்று சொன்னார். காஞ்சி மாநாட்டிலே அந்த செய்தியை சொன்னார்.
 

Makkalleaderthiruma.jpg

அப்போது பேசியபோது வைகோ சொன்னார். இப்போது நாங்கள் நான்கு பேரும் கிங் மேக்கராகி விட்டாேம். உங்களை கிங்காக்க போகிறோம் என்று சொன்னார். ஆகவே, காஞ்சி மாநாட்டிலே ஒன்றை அவர் தெளிவுபடுத்தினார். மகளிர் மாநாட்டில் மிக அழகாக சொன்னார். இந்தந்த கட்சிகளோடு கூட்டணி இல்லை. திமுக, அதிமுக, பாமக. மிச்சம் இருப்பது பாரதிய ஜனதா, மக்கள் நலக் கூட்டணிதான். அந்த அறிவிப்பு மூலம் இன்னொன்றையும் சொன்னார். என்னுடைய தலைமையில் தனி அணி அமைப்பேன். என் தலைமையில் விஜயகாந்த் தலைமையில் தனி அணி அமையும். அதன் பிறகு பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார். அவர் சொன்ன சொல்லை காப்பாற்றக் கூடிய வகையிலே, விஜயகாந்த் தலைமையிலான அணியில் மக்கள் நலக்கூட்டணி ஒரு தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறது.

ஆகவே அவர் மிகத் தெளிவாகத்தான் ஆழமாக, கவனமாக சிந்தித்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்திருக்கிறார். சிலர் அவசரப்பட்டார்கள், அவரை தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் என்று. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஊசலாட்டம் இல்லாமல் நாளைய தமிழகத்தை பாதுகாக்க வேண்டும், தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும், அதற்கு இந்த அணிதான் சரியான அணி என முடிவவெடுத்து இன்றைக்கு மக்கள் நலக்கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத்து தமிழக அரசியலில் இது பிரேக்கிங் நியூஸ் அல்ல, இது ராக்கிங் நியூஸ். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இது அதிர்ச்சி தரும் செய்தி அல்ல, மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய செய்தி. அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் அதிமுகவுக்கும், இந்த அணிக்கும்தான் நேரடி போட்டி. அதிமுகவை அப்புறப்படுத்துவதான் இந்த அணியின் நோக்கம்" என்றார்.
 

makkalleaderramakrishnan.jpg

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில்  அதிமுகவுக்கும், மக்கள் நலக்கூட்டணி- தேமுதிகவுக்கும்தான் போட்டி. தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிகவை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
 

Makkalleadervaiko.jpg

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் முதலமைச்சர் ஆட்சி பீடத்தில் அமர்வார். தேமுதிகவுடனான கூட்டணியால் மக்கள் நலக்கூட்டணியின் நம்பிக்கை நிறைவேறி உள்ளது. தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கிங் மேக்கராக இருப்பார்கள், விஜயகாந்த் கிங்காக இருப்பார். மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

http://www.vikatan.com/news/politics/61103-makkal-nala-kootani-leaders-vijayakanth-king.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.