Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்! கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்?

Featured Replies

தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்! கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்?

 
தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்!  கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்?

 

 
மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் சர்­வ­தேச பொறி­மு­றை­யினை நாடி­ய­போது அதனை தேசத்­து­ரோகம் எனவும் நாட்டைக் காட்­டிக்­கொ­டுக்கும் முயற்சி எனவும் முன்­னைய அர­சாங்கம் கடு­மை­யாக சாடி வந்­தது. 
 
எனினும், அந்த அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்து தற்­போது கூட்டு எதி­ர­ணி­யாக இயங்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது பாரா­ளு­மன்ற உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்து வரிந்­து­கட்டிக் கொண்டு சர்­வ­தே­சத்­தினை நாடப்­போ­கின்­றமை விசித்­திரமாக­வுள்­ளது.
 
நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தமது ஜன­நா­யக உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்தே ஜெனீ­வாவில் அமைந்­துள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தில்(Inter Parliamentary union – IPU) முறை­யிடப் போவ­தாக கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் அறி­வித்­துள்­ளனர்.
 
அடிப்­ப­டையில்இ எந்தத் தரப்­பா­வது தம்­மு­டைய உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாக உணர்ந்தால் அதற்கு விசா­ரணை கோரு­வதை தடுப்­பது நியாயம் இல்லை. அந்த வகையில் ஒரு­த­ரப்­பினர் தமக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தாகக் கரு­தினால், அதற்­காக உள்­நாட்டு பொறி­மு­றை­யி­னையோ அல்­லது ஏற்ற சர்­வ­தேச பொறி­மு­றை­க­ளையோ நாடு­வதில் தவறு கிடை­யாது.
 
போர்க் காலத்­திலும் அதன் பின்­னரும் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்­க­ளுக்கு பரி­காரம் தேடி தமிழ்த் தரப்­புக்கள் ஏற்­க­னவே ஐக்­கிய நாடுகள் சபையின் பொறி­மு­றையின் கீழ் விசா­ர­ணை­களைக் கோரி­வ­ரு­கின்­றன.
 
இவ் விசா­ர­ணை­க­ளுக்கு கடும் எதிர்ப்­பி­னையும் நிரா­க­ரிப்­பி­னையும் ஆட்­சியில் இருந்த போதுஇ மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் காட்­டி­வந்­தது. ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­தினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற குறைந்­த­பட்ச சிபா­ரி­சு­களை ஏனும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் நிரா­க­ரித்தே வந்­தது. இலங்­கையின் உள் விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச நடை­மு­றைகள் தலை­யி­டு­வது நாட்டின் இறை­மை­யினை மீறும் செய­லென்றே அவர்கள் குற்­றச்­சாட்டி வந்­தனர்.
 
இதன் மூலம் சிங்­கள சமூ­கத்தில் சர்­வ­தே­சத்­திற்கு எதி­ரான நிலைப்­பா­டுகள் கூர்­மை­ய­டையச் செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இதுஇ இன்றும் சிங்­கள மக்­க­ளிடம் சர்­வ­தேச அனு­ச­ர­ணை­யுடன் நல்­லி­ணக்­கத்­தினை கொண்டு செல்­வதைக் கடி­ன­மாக்­கி­யுள்­ளது.
 
இவ்­வா­றான அர­சியல் தொடர்ச்சி கார­ண­மா­கவும் மஹிந்த தரப்பின் விமர்­ச­னங்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்கும் வகை­யிலும் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டாலும் சர்­வ­தே­சத்­துடன் நாடு இணைந்து பய­ணிப்­பதில் சிக்­கல்கள் நீடிக்­கின்­றன. உள்­நாட்டில் மீறப்­பட்ட மனித உரிமை விட­யங்­களை விசா­ரணை செய்ய சர்­வ­தேச நீதி­ப­திகள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்டர் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வா­ரமும் தெரி­வித்­துள்ளார். இது சிங்­கள மக்­க­ளையும் தலை­மை­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது. உள்­நாட்டில் சர்­வ­தேச வழி­ந­டத்­தல்கள் இருப்­பதை நடை­முறை அர­சாங்­கத்தின் தோல்­விக்­கு­ரிய விட­ய­மா­கவே பிர­சா­ரப்­ப­டுத்தும் உத்­தியை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சார்ந்த கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரும் சிங்­கள கடும்­போக்­கு­வா­தி­களும் கொண்­டுள்­ளனர்.
 
உள்­நாட்டில் சர்­வ­தேசத் தலை­யீ­டுகள் காணப்­ப­டு­வது நாட்­டினை துண்­டா­டி­விடும். அது சிங்­கள மக்­க­ளுக்கு சாத­க­மற்ற நீதியைக் கொடுத்­து­விடும் என்ற அபிப்­பி­ரா­யங்­களை சிங்­கள மக்­க­ளி­டத்தில் கட்­டி­யெ­ழுப்­பி­யதில் ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் பங்கு அதி­க­மா­கவே இருந்­தது.
 
இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில், மஹிந்த ராஜபக் ஷ சார்பு அர­சியல் நிலைப்­பாட்­டுடன் அவரை மீண்டும் பத­விக்குக் கொண்டு வருவோம் என கங்­கணம் கட்டிச் செயற்­படும் உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜபக் ஷஇ உதய கம்­மன்­பிலஇ கெஹெ­லிய ரம்­புக்­வெல்லஇ ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோஇ டலஸ் அழகப்­பெ­ரும உள்­ளிட்ட தரப்­பி­னரே ஜெனீ­வாவில் உள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்­திற்கு சென்று தமது உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாக முறை­யி­ட­வுள்­ளதாக தெரி­வித்­துள்­ளனர்.
 
பாரா­ளு­மன்­றத்தின் உள்ளும் வெளி­யிலும் தமக்கு அர­சியல் ரீதி­யான அடக்கு முறை­களை நல்­லாட்சி அர­சாங்கம் முன்­வைக்­கின்­றது என்ற வாதமே இவர்­களின் குற்­றச்­சாட்­டாக உள்­ளது.
 
மேலும்இ தமது அணிக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி தரப்­பட வேண்டும் என்ற கோரிக்கைஇ பாரா­ளு­மன்ற ஒன்றிணைந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் அடக்கு முறைகள் இடம்­பெ­று­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டுக்கள் இவர்­க­ளி­டத்தில் பிர­தா­ன­மாக உள்­ளன. இதே­வேளைஇ உள்­ளூ­ராட்­சி­சபைத் தேர்­தல்கள் தொடர்பில் அர­சாங்கம் பின்­ன­டித்து வரு­கின்­ற­மை­யி­னையும் குற்­றச்­சாட்­டாக இவர்கள் உள்­ள­டக்­கு­கின்­றனர்.
அனைத்துப் பாரா­ளு­மன்ற ஒன்­றியம் ஐக்­கிய நாடுகள் சபைஇ சர்­வ­தேச அமைப்­புக்­க­ளுடன் இணைந்தே தொழிற்­ப­டு­கின்­றது. இது ஜன­நா­ய­கத்தை விரிவு படுத்­துதல்இ சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்­துதல், பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம்இ மனித உரி­மை­களின் நிலைத்­தகு நிலை­யினை ஏற்­ப­டுத்­துதல் என பாரா­ளு­மன்­றங்கள் சார்ந்து இயங்­கு­கின்­றன.
 
இந்த அமைப்­பிடம் கடந்த காலப்­ப­கு­தி­க­ளிலும் இலங்கை தொடர்பில் வேறு முறைப்­பா­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
 
அந்த வகையில்இ இலங்­கையில் கொல்­லப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம்இ நட­ராஜா ரவிராஜ்இ தி.மகேஸ்­வரன்இ டி.எம்.தஸா­நா­யக்கா ஆகியோர் தொடர்பில் நடை­பெற்­று­வரும் விசா­ர­ணை­களை இந்த அமைப்பு கண்­கா­ணிக்­கின்­றது.
இவ் விசா­ரணை பற்றி அர­சாங்கம் உரி­ய­வாறு வெளிப்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் இந்த அமைப்பு கோரி­வ­ரு­கின்­றது. எனினும்இ இலங்கை உரி­ய­வாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் படு­கொலை விட­யத்தில் அதிக கரி­ச­னைக்கு உரி­ய­தாக நட­வ­டிக்­கை­களை கடந்த ஆட்­சியில் எடுக்­க­வில்லை. தற்­போதே இது பற்­றிய கைது­களும் முன்­ந­கர்­வு­களும் நடை­பெ­று­கின்­றன.
 
அடுத்துஇ பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வி­ருந்த சரத் ­பொன்­சே­கா­விற்கு 30 மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட போது அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் மனித உரி­மைக்­குழு விசா­ர­ணை­களை அவ­தா­னித்தே வந்­தது. மர­ண­ம­டைந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ஜயலத் ஜய­வர்­த­னவே இம் முறைப்­பாட்­டினை அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒன்­றி­யத்­திற்குக் கொண்டு சென்­றி­ருந்தார். எனினும்இ அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்கம் சரத் ­பொன்­சேகா தொடர்­பான முறைப்­பாட்டை அனைத்துப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒன்­றியம் கவ­னத்தில் எடுக்­க­வில்லை என்றே கூறி­யது. ஆயினும்இ அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒன்­றியச் செய­லாளர் இன்ங்பேர்க் செக்வர்ஸ் அர­சாங்­கத்தின் அக்­கூற்றை மறுத்து தாம் முறைப்­பா­ட்டை ஏற்­றுள்­ள­தாகத் தெரி­வித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.
 
கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் முறை­யி­டப்­போ­வ­தாக முன்­வைக்கும் குற்­றச்­சாட்டில் பிர­தா­ன­மாக எதிர்க்­கட்சித் தலைவர் பதவி பற்­றிய விடயம் உள்­ளது. அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­றுக்­கொண்­டுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பிற்கு எதிர்க்­கட்சித் தலைவர் பொறுப்பு வழங்க முடி­யாது என்­பது ஏற்­க­னவே கூறப்­பட்டு விட்­டது. இவ்­வா­றான ஒரு நிலையில் அர­சியல் ரீதியில் எதிர்க்­கட்­சி­யி­ன­ராக தம்மைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி மஹிந்த தரப்­பினர் இயங்­கு­கின்­றனர்.
 
அவர்கள் பிர­தான எதிர்க்­கட்­சிக்­கு­ரிய அங்­கீ­கா­ரத்­தினைப் பெறு­வது வெகு­ஜன அர­சி­யலை திறம்­பட நடத்­து­வ­தற்­கான உத்­தி­யாக உணர்­கின்­றனர்.
 
பாரா­ளு­மன்ற நடை­முறை ரீதியில் தமக்கு எதிர்க்­கட்சித் தலைமை கிடைக்­க­வில்லை என்­பதை மறுத்து அவ்­வாறு தாம் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை கூட அர­சியல் பழி­வாங்கல் என சிங்­கள மக்­க­ளி­டத்தில் வியாக்­கி­யா­னப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.
 
அதன் மூலம் அர­சியல் அனு­தாபம் அதி­க­ரிக்கும் எனவும் நம்­பு­கின்­றனர். அதற்­காகப் பாடு­ப­டு­கின்­றனர்.
இந்த இடத்தில்இ மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­றுவோம் என்ற கோஷத்­துடன் களம் இறங்­கி­யுள்ள மஹிந்த தரப்­பினர்இ எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யி­னையும் இன்னும் ஒரு வகையில் இலக்கு வைத்து செயற்­ப­டு­கின்­றமை ஒரு முரண் நிலை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இவற்­றுக்கு அப்பால் தமிழ் மக்­க­ளுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் இழைக்­கப்­பட்ட யுத்தக் குற்­றங்கள்,சட்­டத்­திற்குப் புறம்­பான கொலைகள், வெள்­ளைவான் கடத்­தல்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களின் படு­கொ­லைகள் உள்­ளிட்ட பார­தூ­ர­மான மனித உரிமை குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தே­சத்­திடம் முறை­யி­டு­வதை கடந்த அர­சாங்கம் விரும்­ப­வில்லை. அதனை அனு­ம­திக்­கவும் இல்லை. தற்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யாகத் தம்மைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி தமது உரி­மைகள் நசுக்­கப்­ப­டு­வ­தாகக் குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­தி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்லஇ முன்­னைய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ராக இருந்­தவர்.
 
இவர் வெளி­யிட்டு வந்த கருத்­துக்­களில்இ உள்­நாட்டில் மீறப்­பட்ட மனித உரி­மை­க­ளுக்­காக சர்­வ­தேச முறை­யீ­டு­களை கடு­மை­யாக விமர்­சித்து வந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
 
உதா­ர­ணத்­திற்கு, கடந்த ஜூலை 2014 காலப்­ப­கு­தியில்இ மனித உரி­மைகள் மீறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை நிய­மிக்கும் ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கூட இவர் தெரி­வித்­தி­ருந்தார். கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல பத­வியில் இருக்­கும்­போது, அனைத்­து­லக விசா­ர­ணை­யினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் அந்த விசாரணைக்கு இடமளிப்பதால் நாட்டின் இறைமை பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவித்து வந்தவராவார். 
 
மேலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முன் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சாட்சியமளிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். காரணம், பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறைமையைப் பாதுகாப்போம் என்றே உறுதிப்பிரமாணம் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறாக சர்வதேசத்தின் பொறிமுறையினை தமிழ் மக்கள் விடயத்தில் நிராகரிக்கும் தரப்புக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரம் சர்வதேச அணுகுமுறை அவசியம் என்பது புதிரானது.
 
தமது உரிமைகள் மீறப்படுகின்றன எனக் கருதும் போது அதற்கு நிவாரணம் தேடி வெளியுலக அமைப்புக்களை நாடுவதற்கு முயற்சிக்கின்றனர்.
 
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற அமைப்பிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியுமாயின் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ள சமவாயங்களின் பிரகாரம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையினை நாடுவது தேசத்துரோகமாகவும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் முயற்சியாகவும் பார்க்கப்பட்டது எந்த வகையில் நியாயமாகும்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.