Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்குள் காதல் மழை

Featured Replies

இந்த காதல் மழை 50 துளிகளாய் 
விழப்போகிறது 
ஒவ்வொரும் தனிரகம் 
கவிப்புயல் இனியவன்'s photo.

நீ 
சூரிய உதய நேரம் ....
பிறந்திருக்கிறாய் ....
உன்னை காணும் ....
போதெலாம் சூரியனை ....
கண்ட தாமரைபோல் ....
என் ....
இதயத்துக்குள்ளும் ....
மலர்வு ஏற்படுகிறது ....!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 01

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என்னை 
கவிஞனாக்கியது ...
கற்பனைகளல்ல...
உன் ஒவ்வொரு ....
அசைவுகளும் ....
நீ என்னோடு பேசிய ....
வார்த்தைகள் .....
உன் தோழியோடு....
பேசிய வார்த்தைகளும் ...!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 02
 

உன்னை 
நல்ல எண்ணத்தோடு ...
நினைக்கும்போது ....
கவிதை எழுதுகிறேன் ....
கொஞ்சம் ....
கெட்ட வார்த்தையால் ...
வர்ணிக்கப்போகிறேன்...
என் டயரியை வந்து பார் ...!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 03

  • தொடங்கியவர்

உனக்காக ...
மாஜவித்தை ....
கற்கப்போகிறேன்....
உன் தோளில் ஒருமறை ...
உட்கார பட்டாம் பூச்சியாய் ....
உன் மோதிரவிரலில் ...
நுழைய தங்க மோதிரமாய் ....
உருமாறப்போகிறேன்....!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 04

எந்த.... 
உடையில் நீ வந்தாலும் ....
அழகுதான் ....
உன்னை அணியவைத்து ...
ஆடைகள் ....
தம்மை அழகுபடுத்துகின்றன....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 05


 

  • தொடங்கியவர்

நிலவுக்கு ...
போக மாட்டேன் ...
நிலவாக நீயே....
இருக்கிறாயே ....!!!

பட்டாம் பூச்சிகள் ...
அழகில்லை ......
உன்னருகில் அவை ....
வரும்போதே ....
அழகாகின்றன -நீயோ 
பட்டாம் பூச்சிகளின் ...
இளவரசியாய் .....
இருக்கிறாயே   ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 06
கவிநாட்டியரசர்
கே இனியவன் 

  • தொடங்கியவர்

வானத்தில் ....
நட்சத்திரங்கள் ....
கண் சிமிட்டி முகிலை ....
காதலிக்கின்றன ....!!!

பூக்கள் கண் சிமிட்டி ...
தேனீக்களை ....
காதலிக்கின்றன ...!!!

நான் ...
உன்னை காதலிக்க ...
கண் சிமிட்ட மாட்டேன்....
என் கண்ணுக்குள் ....
நீ குடியிருக்கிறாயே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை 
தூறல் 07
 

  • தொடங்கியவர்

நீ 
கரும்பு .....
மிக சிறிய எறும்புக்கும் ...
மிக பெரிய யானைக்கும் ....
பிடிப்பதுபோல் -உன்னை 
எல்லோருக்கும் பிடிகிறது ....
ஒரே ஒரு முறை ...
என்னை நீ ....
பிடித்துவிடேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 08

  • தொடங்கியவர்

யார் வீட்டு 
திருமணத்துக்கும் போ ...
பெண் தோழியாய் .....
மட்டும் இருந்துவிடாதே ....
அந்த திருமணத்தை ....
நிறுத்திய குற்றதுக்குள் ....
விழுந்துவிடாதே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை 
தூறல் 09
 

நீ யார் ...?
எதை பார்த்தாலும் ....
எதை நினைத்தாலும் ....
எதை பேசினாலும் ....
நீயாக இருக்கும் நீ யார் ...?
கோயிலில் கும்பிட்டால் ...
விக்கிரகமாக நீ 
நீ என் கடவுளா ...?
மாஜக்காறியா ....?
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 10
 

  • தொடங்கியவர்

கிளியிடம் 
கொத்தும் பயிற்சி ....
எடுக்கப்போகிறேன் ...
உன்னை எப்படி ...
கொத்திக்கொண்டு ...
செல்லலாம் ...?
என்பதை அறிந்து கொள்ள....?

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 11
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

உன் கண்கள் ...
தானியக்கி நானே ....
தொலைக்காட்சி-நீ 
அசைகின்றபோதேலாம்
அசைகிறேன்....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 12
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ஒருவரை ஒருவர் ....
தெரியாமல் முட்டி ....
மன்னிப்பு கேட்டு ....
அதை மனதுக்குள் ...
சுமந்துகொண்டு ...
காதல் நினைவோடு ...
வாழ்வதெல்லாம் ....
சினிமாவில் தான் ....
நடக்கும் ......!!!
என்ன அதிசயம் ....
நமக்கும் நடக்கிறதே ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 13
கவிப்புயல் இனியவன்

உனக்கும் எனக்கும் ...
எத்தனை வேறுபாடுகள் ....
அழகால் அறிவால் பணத்தால் ...
ஒரே ஒரு ஒற்றுமை ....
உன்னிடமும் என்னிடமும் ...
காதல் கொண்ட இதயம் ...
இருக்கிறது ......!!!

^
எனக்குள் காதல் மழை 14
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நான் 
ஓடும்போது நெஞ்சை ...
பொத்தி ஓடுகிறேன் ....
மற்றவர்களுக்கு ......
வேண்டுமென்றால் ....
சட்டை பையில் இருக்கும் ....
பணம் விழாமல் இருக்க ...
என்று ஜோசிக்கட்டும் ....!!!

நீ 
அப்படி நினைத்துவிடாதே ...
உனக்கு தெரியும் நெஞ்சில் ...
இருப்பது நீ ....!!!

^
எனக்குள் காதல் மழை 15
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ஒரு கவிஞன் 
தலையில் இருந்து 
பாதம் வரை வர்ணித்து ....
கவிதை எழுதுவான் ....
உன்னை எங்கிருந்து ...
ஆரம்பிப்பது ...?
திகைத்து நிற்கிறேன் 
நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

^
எனக்குள் காதல் மழை 16
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

என்ன கொடுமை ....
உன் உதட்டை முத்தமிட ...
வாய்ப்பில்லாமல் ....
கீழே விழுந்துவிட்டதே ....
ஐஸ்கிறீம் .....!!!

எல்லாவற்றுக்கும்....
கொடுப்பனவு இருக்கணும்....
உன்னை முத்தமிடுவதற்கு .....
ஐஸ்கிறீம் .....
கொடுத்துவைக்கவில்லை ...!!!

  ^
எனக்குள் காதல் மழை 17
கவிப்புயல் இனியவன்
  

  • தொடங்கியவர்

எனக்கு ஒரு 
குறி சோதிடம் சொல் ....
உன்னை ஒருத்தி ....
காதலிக்கிறாள் ...
என்று நீயே சொல் ....!!!

அப்போதிலிருந்து ....
சோதிடத்தை நம்புகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 18
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

நீ 

தோழியோடு பேசும்போது ....

அத்தனை அழகாய் இருகிறாய் ...

ஒருமுறை ....

என்னோடு பேசிப்பார் ...

இன்னும் அழகாய் இருப்பாய் ....

காதலோடு யார் பேசினாலும் ...

அழகுதான் - நீ 

இரட்டை அழகு பெறுவாய் ....!!!

 

^

எனக்குள் காதல் மழை 19

கவிப்புயல் இனியவன்

உன்னிடம் 
இருக்கும் புன் (நகையை )
என்னிடம் அடகு வை ....
நான் உனக்கு வட்டி ...
தருகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 20
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

அது சரி 
கண்ணாடியை பார்த்து,,, 
என்ன பேசுகிறாய்,,,,? 

என்னோடு தானே,,, 
பேசுகிறாய்,,,, 
அப்படி என்னதான் ,,, 
பேசுகிறாய்,,,,? 

எனக்குள் காதல் மழை 
கே இனியவன்

காதலித்தவர்களே 
கரம் பிடித்தால் 
கவிஞர்கள் தோன்ற 
வாய்ப்பில்லை,,,,, 

காதல் தோல்வி,,,, 
மட்டுமே கவிதைகள்,,, 
தோன்ற காரணமும்,,, 
இல்லை,,,,!

  • தொடங்கியவர்

உனக்காக ,,,, 
ஆயிரம் உறவுகள் 
காத்திருக்கலாம்.... 
எனக்காக,,,, 
காத்திருக்கும் ஒரே உறவு,,, 
நீ மட்டுமே... 
காத்திருப்பேன் என் 
மூச்சு உள்ள வரை,,,,,!!

அவளிடம்... 
ஆயிரம் முறை கேட்டேன்,,,, 
காதல் கேட்டேன்,,, 
இதயம் முழுக்க காதலை 
சுமந்துகொண்டு உதட்டால் 
மறுத்துக்கொண்டிருக்கிறாள்,,, 
என்றோ ஒரு நாள்,,, 
புரிவாள்,,,, 
அது கல்லறையாக கூட,,, 
இருக்கலாம்,,,,

உன்னை பிடிக்க .... 
ஆயிரம் காரணம் இருக்கும்... 
சந்தர்ப்பதில் எந்த காரணத்தை... 
சொல்வேன்.... 
அப்படி ஒருகாரணத்தை,,,, 
சொன்னால் இவ்வளவுதானா....? 
என்றதுபோல் இருக்குமே,,,, 
காரணம் மட்டும் கேட்டு ... 
உன் மேல்வைத்த காதலை,,, 
குறைத்து மதிப்பிடாதே,,,,!

  • தொடங்கியவர்

பொம்மை கடைக்குள்....
சென்று விடாதே,,,,
இந்தபொம்மைதான்....
வேண்டும் என்று,,,
உன்னை கொண்டு....
சென்று விடுவார்கள்.....!!!

&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்

நீ 
ஒருமுறை ...
பாட்டி வடை சுட்ட...
கதையில் பாட்டியாக மாறு....
கதையையே மாற்றிவிடுகிறேன்...
காக்காவாக வந்து ...
உன்னை தூக்கிச்செல்கிறேன்...
&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

மோனோலிஸா...
ஒவியம் எப்படி...
வைத்த்தாலும்...
எம்மை பார்ப்பது...
போல் தான் இருக்கும்...
உன் புகைப்ப்டமும்...
எங்கு வைத்தாலும்...
என்னையே பார்க்கிறாய்....!

&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்

மின் காந்த அலையை...
கணிக்கும் அறிவியல்...
உன் கண் காந்த அலையை...
எப்போது கணிக்குமோ....?

&
எனக்குள் காதல் மழை
கே இனியவன்

இன்று....
கிரக தோஸமாம்....
சுவாமியின் கதவு..
மூடப்பட்டிருக்குமாம்...
உனக்கு எப்போது...
கிரக தோஸம்....
என் இதயத்தில்...
உன்னை வைத்து...
மூடனும்.....!

&
எனக்குள் காதல் மழை
கே இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.