Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவில்பட்டி 'கடலை மிட்டாய்' வைகோவுக்கு இனிப்பை தருமா?

Featured Replies

koilpatti.jpg

தமிழக அரசியல் களத்தில் வைகோ தவிர்க்க முடியாத நபராக இருந்தாலும் இதுவரை தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவி என்பது கனவாகவே இருந்து வந்துள்ளது.

வைகோ திமுகவில் இருந்த போது ஒரு முறைகூட சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து, மதிமுகவை தொடங்கியப் பிறகு கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கினார்.

எனினும், திமுக வேட்பாளர் ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலோடு இணைந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. அதிலும் அவர் வெற்றி பெறவில்லை.

அப்போது ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு  எதிராக வீசிய அலையை திமுகவும், மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸும் அறுவடை செய்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட மதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

இதையடுத்து 1998 ஆம் ஆண்டு அதிமுக அமைத்த மெகா கூட்டணியில் இணைந்த வைகோ சிவகாசி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைப் பொருத்தவரையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் இணைந்த வைகோ, பேரவைத் தொகுதிக்கு போட்டியிடவில்லை. மேலும், 2011 ஆம் ஆண்டு தேர்தலை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டார்.

தனக்கு கிடைத்த வாய்ய்ப்புகளை தொண்டர்களுக்கும், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் வழங்கியவர் வைகோ. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது நண்பர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்கு சிவகாசி தொகுதியில் வாய்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், தேமுதி, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வைகோ நடைபெறவிருக்கும் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தானே களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகராட்சியாக உள்ள கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் பிரதானமாக உள்ளது. சில பட்டாசு ஆலைகளும் உள்ளன. மேலும், சிறிய அளவிலான நூற்பு ஆலைகளும் உள்ளன.

நாடார்கள், நாயக்கர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், வைகோ தான் சார்ந்துள்ள நாயக்கர் வாக்குகள் தனக்கு கைக் கொடுக்கும் என நம்புகிறார்.

மேலும், சிவகாசி மக்களவை உறுப்பினராக இருந்த போது, அத்தொகுதியில் இணைந்திருந்த கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக கோவில்பட்டி நகரில் 3 ரயில்வே மேம்பாலங்களைக் கட்டியதில் பெரும்பங்காற்றினார். மேலும், தொகுதி முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசியை இலவசமாக அளித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

தற்போது கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் கே.ராமானுஜம்  கணேஷும், திமுக சார்பில் அ.சுப்பிரமணியனும் போட்டியிடுகின்றனர்.

கோவில்பட்டி கடலை மிட்டாய் வைகோவுக்கு இனிக்குமா? வைகோ தமிழக பேரவைக்குள் முதல் முறையாக அடி எடுத்து வைப்பாரா? பொருத்திருந்து பார்க்கலாம்.

http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/04/16/%E0%AE%95%E0%AF%8B%E0

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்பட்டியில் மட்டுமல்ல

எங்கும் அண்ணன் வைக்கோவால் வெல்லமுடியாது

கடைசி ஆணி அடிக் அவரே ஒப்புதல் தந்துள்ளார்..

பேசாமல் மேலவை உறுப்பினராக வந்து இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ பிரச்னை என்னவெனில், மழை பொழியப் போகிறது என்று தெரிந்து கொண்டே உப்பு விக்கப் போறேன் என்று கிளம்பி பதற வைப்பார். காத்து அடிக்குது என்று தெரிந்தே மா விக்க கிளப்புவார். இவ்வாறு குழப்பி, குழப்பியே தன்னையும், தன்னை நம்பி இருந்த பலரையும், ஈழத் தமிழர் உள்பட, இழக்கத் தொடங்கினார்.

அநேகமாக இந்த முறை பலர் மூக்கு உடைபட போகுது போல. பாக்கலாம் என்ன  நடக்கிறதென்று ? எதுவும் நடக்கலாம் . ஜாதி அரசியலை முன்னெடுத்தால் கண்டிப்பாக வெல்வார். ஆனால் செய்யமாட்டார்.  அந்த நம்பிக்கை தான் எத்தனை முறை தோற்றாலும் வைகோ எனும் நபர் பலரின் விருப்ப நாயகன் ஆக இருப்பது .தன்னலம் மறந்து பல தியாகம் செய்து இன்னும் பலர் அவர் கட்சியில் இருப்பது . ஹாட்ஸ் அப் . ஆனா இவர் தோற்றால் அதற்கு ஒரே காரணம் நாம் தமிழர் கட்சியாக மட்டுமே இருக்கும் . அதிமுக வாக்கை திமுக வாக்கை  தேதிமுக வாக்கை பலர் பிரிக்கலாம் . மதிமுக வாக்கை ( இருப்பதே கொசுருதான் . அதிலும் ) பிரிப்பது ஒரே கட்சி  தமிழர் மட்டுமே 

  • தொடங்கியவர்

கோவில்பட்டியை வைகோ தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

வைகோ. | படம்: ஞானவேல் முருகன்.

வைகோ. | படம்: ஞானவேல் முருகன்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே வைகோ இம்முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டது.

தொண்டர்கள் குழப்பம்

சமீபத்தில் கோவில்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய, தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ், தங்கள் கூட்டணி வென்றால் விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர் என அறிவித்தார்.

இதற்கு வைகோ மறுநாளே மறுப்பு தெரிவித்தார். தனக்கு எந்த பதவி மீதும் விருப்பம் கிடையாது என, அவர் விளக்கம் அளித்திருந்தார். இதனால் வைகோ தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லையா என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது.

கட்சி நிர்வாகிகளிடமும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே கடைசி வரை கூறி வந்தார்.

இருப்பினும் அவரது நடவடிக்கைகள் கோவில்பட்டி தொகுதியையே சுற்றி வந்ததால், இந்த தொகுதியில் அவர் போட்டியிடலாம் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதை மெய்ப்பிக்கும் வகையில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின்

வைகோ சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட அதிக நாட்டம் காட்டுவதில்லை. மக்களவைத் தேர்தலில் தான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். கடந்த 1994-ம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய பிறகு 1996-ல் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மதிமுக தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் வைகோ முதல் முறையாக சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, திமுகவின் கே. ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதன்பின் சட்டப்பேரவை தேர்தல்களில் வைகோ போட்டியிடவே இல்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டியிடுகிறார்.

கோவில்பட்டி ஏன்?

வைகோ கோவில்பட்டி தொகுதியை தேர்வு செய்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. தனது சொந்த ஊரான கலிங்கப் பட்டிக்கு அருகே இருப்பதால் கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு வைகோ நன்கு அறிமுகமானவர். எப்படியும் மாதத்தில் இருமுறை அவர் கோவில்பட்டிக்கு ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார். எனவே, மக்களிடம் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து வருகிறார். மேலும், வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாய வாக்குகள் இத்தொகுதியில் அதிகம். அவரது உறவினர்கள் அதிகம் பேர் இத்தொகுதியில் உள்ளனர். மதிமுகவுக்கு என கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் அவர் கோவில்பட்டியை தேர்வு செய்வதற்கு ஒரு காரணம்.

1996 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் 31,828 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுக்கும் இங்கு குறிப்பிட்ட சதவீத வாக்கு உள்ளது.

கோவில்பட்டி தொகுதி 2008-க்கு முன்பு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்குள் தான் இருந்தது. வைகோ சிவகாசி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது கோவில்பட்டியில் பல திட்டங்களை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் தனக்கு கைகொடுக்கும் என அவர் உறுதியாக நம்புவதால் தான் இம்முறை கோவில்பட்டி தொகுதியை தேர்வு செய்ததாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

பெரும் சவால்

ஆனால், இந்த முறை பலமுனை போட்டி இருப்பதால் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி என்பது சவாலாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமானுஜம் கணேஷ் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். அவருக்கும் தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. மேலும், ஆளும் கட்சி என்ற பலமும் உள்ளது.

இதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியன் இந்த தொகுதியின் மற்றொரு மெஜாரிட்டி சமுதாயமான தேவர் இனத்தை சேர்ந்தவர். இவருக்கும் தொகுதியில் நல்ல மதிப்பு இருக்கிறது. இவர்கள் இருவருமே வைகோவுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாய வாக்குகள் இத்தொகுதியில் அதிகம். மதிமுகவுக்கு என கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் கோவில்பட்டியை தேர்வு செய்வதற்கு ஒரு காரணம்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%A

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.