Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 – திரை விமர்சனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாக தமிழில் வெளிவந்திருக்கும் டைம்மிஷின் சப்ஜெக்ட் திரைப்படம் !

ஈராஸ், ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனங்களின் பங்களிப்புடன விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகள்…

கதைப்படி, இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் இரண்டாமவரான சையின்டிஸ் டாக்டர் சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக் கெடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தபட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் அந்த கடிகாரத்தை அடையத் துடிக்கும். சயின்டிஸ்ட் சூர்யாவின் முரட்டு உடன்பிறப்பு ஆத்ரேயா எனும் வில்லன் சூர்யா, அதற்காக தம்பி சூர்யாவையும் அவரது குடும்பத்தையும், குழந்தையையும் அழித்து அடைய துடிக்கிறார்.

அவரது அதிரடி முயற்சியில், தப்பி பிழைக்கின்றன… குழந்தையும், அந்த டைம் மிஷினும். குழந்தை வளர்ந்து ஆளாகி பெரிய சூர்யாவாகி, டைம்மிஷின் உதவியுடன் பெரியப்பாவை பழி தீர்த்ததாரா? இழந்த பெற்றோரை அக்காலகட்டத்திற்கு சென்று மீட்டெடுத்ததாரா? அல்லது , பெரியப்பா சூர்யா முந்திக் கொண்டு தம்பியின் கண்டுபிடிப்பான டைம் மிஷினை கைப்பற்றி தம்பி குடும்பத்தில் எஞ்சிய தம்பி மகனை கொன்றாரா ? வென்றாரா .? என்னும் திக் திக் திக் கதையுடன் லவ், ஆக்ஷன், சென்டிமெண்ட் , எல்லாம் சுலந்து ‘ 24 ‘ படத்தை 2.45 மணி நேரத்திற்கு செம விருந்தாக படைத்திருக்கிறார்கள். சில இடங்களில் (ஒரே காட்சிகள் 2 -3 முறை வெவ்வேறு ரூபத்தில் வரும் இடங்களில் …) படுத்தியும் எடுத்திருக்கிறார்கள்!

சூர்யா, டாக்டர் சேதுராமன் எனும் சைன்டிஸ் அப்பாவாக, வாட்ச் மெக்கானிக் மணியாக மகனாக, வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா ஆத்ரேயாவாக.. இந்தமூன்று கேரக்டர்களில் முன்னணியில் இருப்பது வில்லன்’ கம் ‘பெரியப்பா சூர்யாவின் இளம் வயது கெட்-அப்பும் 26 வருடங்களுக்கு பிந்தைய முதிய வயது கெட்-அப்பும் தான். அப்பப்பா, பெரியப்பா என்ன குரூரமப்பா? எனும் அளவில் அந்த கேரக்டரில் அலறவிட்டிருக்கிறார் மனிதர்.

“இந்த உலகத்திலயே ஒரே ஆள… இரண்டு முறை கொலை செய்த முதல் ஆள் நான் தான்… “எனும் கொக்கரிப்பில் ஆகட்டும், சையின்டிஸ் டாக்டர் வீட்டு வாட்ச்மேனைப் பார்த்து ‘இந்த முறை உன்னை கொல்லாமல் விட்டதும் நல்லது தான்… ‘எனும் நக்கல், நையாண்டியில் ஆகட்டும்… சகலத்திலும், சகட்டுமேனிக்கு புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர்.

அதற்காக, சையின்டீஸ் அப்பாவும், அவரது வாட்ச்மெக்கானிக் பிள்ளை சூர்யாவும் சரியில்லையா? என கேட்டு வாதம் செய்யக் கூடாது. அவர் களும், அவரவரது பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி நித்யா மேனன், சமந்தா மற்றும் டைம் மிஷினுடன் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் என்றாலும் நம்மை அதிகம் கவருபவர் வீல்சேரில் அமர்ந்தபடியே வில்லத்தனம் செய்யும் பெரியப்பா சூர்யாவும், அவரது இளம் மற்றும் முதிய வயது கெட்-அப் புகளும் தான்.
24
கதாநாயகி சமந்தா சமத்தா வந்து போகிறார். ஆடுகிறார், பாடுகிறார். ஆனால், அஞ்சான் அளவுக்கு சூர்யாவுக்கு எடுப்பாயில்லை! அதே நேரம், சூர்யாவின் மாமன் மகள் தான் சமந்தா என்னும் எதிர்பாரா ட்விஸ்ட் ஹாஸ்யம்!

அப்பா சூர்யாவின் ஜோடியாக, மகன் சூர்யாவின் அம்மாவாக, மற்றொரு நாயகி நித்யா மேனன் கொஞ்சம் நேரமே வந்து போனாலும், திரும்ப வந்தாலும் திருப்தி.

வளர்ப்பு அம்மாவாக சரண்யா, வழக்கம் போலவே செம வள.. வள…ப்பு!

சத்யன், அப்புக்குட்டி, சார்லி, கிரீஷ்கர்னாட், பேபி விதி, வில்லனின் உதவியாளராக வரும் மித்ரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

ஏ ஆர் .ரஹ்மானின் இசையில், ‘ஆளப்பிறந்தவன் ஆராரோ…’, ‘மாயமில்லை மந்திரமில்லை….’, ‘அரசியே அடிமையே அழகியே…’ உள்ளிட்ட பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை பிரமாதம். பிரவின்புடியின் படத்தொகுப்பில் திரும்ப திரும்ப வரும் சில காட்சிகளும், நான் ஒரு வாட்ச்மெக்கானிக்காக்கும்… எனும் டயலாக் சீன்களும் சற்றே பொறுமையை சோதிக்கின்றன.

எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஓவியப் பதிவு! படத்தை படு பிரமாண்டமாக காட்டுவது இவரது ஒவியப்பதிவும், சி.ஜி வேலைப்பாடுகளும் தான். அதிலும் சூர்யா – சமந்தா, சம்பந்தப்பட்ட அந்த ஆரம்ப காட்சிகளில் மழை துளிகளை அப்படியே பாதியில் பிரீஸ் செய்வது, டைம்மிஷின் ஆய்வு கூட மிரட்டல்கள், பாடல் காட்சி வெளிநாட்டு லொகேஷன்கள் எல்லாம் ஹை லுக் கலக்கல்கள்!

இமாஜினோ ரொமான் ஸோ பீலியா, வியாதி, கால்தரையில பட்டாச்சு… கைய எடுங்க…. எனும்அஞ்சான் டயலாக்… டைம்மிஷன் சாவி சூர்யா கைக்கு கிடைத்து டைம் மிஷினை கையில் கட்டி சத்யனை கலாய்க்கும் இடம், அம்மாசரண்யாவைமழை க்காக குடை எடுத்துப் போக சொல்லும் இடங்களுக்காக இயக்குனர் ‘யாவரும் நலம்’ விக்ரம் கே.குமாரைப் பாராட்டலாம். அதே நேரம், டைம்மிஷின், பெரும்பாலும் இப்படத்தில் 26 வருடங்கள்… பின்னோக்கி போக மட்டுமே பயன்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

இவை, எல்லாவற்றுக்கும் மேல் டைம்மிஷின், இழந்ததை மீட்டெடுப்பு… – இத்யாதி, இத்யாதிகளை… இங்கிலீஷ் படம் பார்க்கும் ரசிகர்கள் நம்புவார்கள். வெகுஜன ரசிகர்களை வெகுவாக சென்றடையுமா ”24 ” என்பது கேள்விக்குறியே!

எனவே, 2.44மணி நேர, சூர்யாவின் “24 ” – ‘ஏ’ சென்டர் ரசிகர்களுக்கு “2 புள்”ஓ.கே… .பிற ‘பி & சி’ரசிகர்களுக்கு.?! சற்று சந்தேகம்தான்!”24 ‘ – ‘2..44” மணி நேரம் கொஞ்சம் ஒவர்!

http://lankapuri.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.