Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்க வட மாகாண சபைக்கு உரிமை உண்டு'

Featured Replies

 
'சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்க வட மாகாண சபைக்கு உரிமை உண்டு'
 
 

article_1422368846-Mano-ganesan.jpg-சொர்ணகுமார் சொரூபன்

'சமஸ்டி கோரிக்கையை முன்வைத்து பிரேரணை நிறைவேற்றுவதற்கு வடக்கு மாகாண சபைக்கு முழுமையான உரிமை உள்ளது. இதனை தவறு என்று கூற தெற்கில் யாருக்கும் உரிமை இல்லை' என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நல்லூரில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் 
கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சமஸ்டி பிரேரணை தொடர்பாக தெற்கில் பல இனவாத பேச்சுக்கள் இருந்தாலும் கூட, அதனை ஏன் சபை நிறைவேற்ற வேண்டும் என்பது பற்றிய விளக்கத்தை சிங்கள மக்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விளக்கி உள்ளார். அதற்காக அவர் சமஸ்டியை ஏற்றுவிட்டார் என்று அர்த்தம் அல்ல. 

சபை முன்வைத்துள்ள விடயத்தை அவர் பேச முனைகிறார் என்பதை அவர் காலியில்  இடம்பெற்ற மேதின கூட்டதில் தெளிவாக தெரிவித்துள்ளார்.

நாட்டை நாம் உடைக்கபோவதில்லை என்று கூறி, இணைந்த நாட்டுக்குள் சமஸ்டியான அதிகார பகிர்வை வடக்கு மாகாண சபையினர் கேட்டுள்ளனர். ஆகவே, தெற்கில் உள்ளவர்களுக்கு  ஒற்றையாட்சி முறைமையினை முன்வைக்க உரிமை உண்டானால் வடக்கில் உள்ளவர்கள் சமஸ்டிக்கு குரல் கொடுக்க உரிமை உள்ளது.

அரசியல் அமைப்பு என்பது மக்களால் உருவாக்கப்படுவது. அது மதம் சார்ந்த நூல் அல்ல. இதுவரையில் அரசியல் அமைப்பு மாற்றப்பட்டு வந்திருக்கிறது. தற்போது அரசியல் அமைப்பு மாற்றத்துக்காக நாடாளுமன்றம் ஒன்றிணைந்து அனைத்து தரப்பு உறுப்பினர்களுடன் கூடி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தமது கருத்தை முன்வைத்து அரசியல் அமைப்பை உருவாக்கம் செய்வது வடக்கு மாகாண சபைக்கு மட்டுமல்ல அனைத்து சபைகளுக்கும் உரிமை உள்ளது.

மேலும், இராணுவ மயப்படுத்தல் புதிய இடத்தை கைப்பேற்றல்  போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. இவற்றை செய்ய வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. அதில்  ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக உள்ளனர். ஆனால், மேல்மட்டத்தில் உள்ளவர்கள் மாறியும் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் இன்னமும் அந்த மனநிலைக்கு வரவில்லை.

சிலர், இவ்விடயத்தில் தான்தோன்றிதனமாக செயற்படுவது உண்மை. இதற்கு ஜனநாயக ரீதியான சாத்வீக போராட்டத்தில் ஈடுபடுங்கள், அழுத்தங்கள் மேற்கொள்ளுங்கள்.

அண்மையில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், பரவிப்பாஞ்சான் அதி உயர் பாதுப்பு வலயத்துக்குள் சென்றது பற்றி தெற்கில் பல விமர்சன பேச்சுகள் எழுந்தன. புலிகளின் எறிகணையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்படியாயின் இங்கு புலிகள் இல்லை. எறிகணைகள் இல்லை என்றால் அதி உயர் பாதுகாப்பு  வலயங்கள் தேவையில்லலை.

பிரச்சினைகளுக்கான அழுத்தம், அரசுடனான பேச்சு இரண்டும் சமாந்தரமாக இருக்கவேண்டும் எமது போராட்டங்கள் உரிமைக்காக ஆரம்பிக்கபட்டது. அடுத்த கட்டம் பற்றி கலந்து பேச வேண்டும். எமக்குள்ள எதிர்கால சவால்கள்; என்ன என்று பேச வேண்டும். எமக்கு உள்ள வளங்கள் பற்றி அறிந்து முன்னோக்கி செல்ல வேண்டும்' என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/171757#sthash.FanIXlBN.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.