Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் பரணி! தீபச்செல்வன்:

Featured Replies

முள்ளிவாய்க்கால் பரணி! தீபச்செல்வன்:-

கால்கள் எதுவுமற்ற  என் மகள்
தன் கால்களைக் குறித்து கேட்கும்போது
நான் என்ன சொல்வேன்?
அவர்கள் கூறினர்
யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென்று
ஒருவரும் கொல்லப்படவில்லை என்றனர்
யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்புதானே என்றனர்
அவர்கள் கூறினர்
 ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று
யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை 
ஒப்புக்கொள்கிறோம் என்றனர்
பின்னர் கூறினர் 
போராளிகளே மக்களைக் கொன்றனர் என்று
பின்னர் கூறினர் 


படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை 
ஏற்கிறோம் என்று
இறுதியில் யுத்தம் போராளிகளுக்கு எதிரானது என்றனர்
நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டு
மேலும் அதை தொடர்ந்தபடி
எல்லாவற்றையும் மறப்போம் என்றனர்
எதையும் பகிராமல் 


ஒருதாய் பிள்ளை என்றனர்

 தாயற்ற என் மகளுக்கு 
இதையெல்லாம் எப்படி விளக்குவேன்?
பழி வாங்கும் ஜனங்கள் என்றனர் 
ஒருபோது
மன்னிக்கத் தெரியாத ஜனங்கள் என்றனர் 


இன்னொருபோது

 

திரும்பாத இழப்பை


வெற்றி என்பவர்களே!
என் மகளைக் குறித்து
நான் கண்ணீர் சிந்துவது பழிவாங்குவதற்கா?
எனது ஆசை மகளே
இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவது? 
இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவது? 
காயங்களை மூடும்


இழப்புக்களை மறைக்கும்


தந்திரம் மிக்க வார்த்தை 


என்னிடமில்லை
மீளப் பெறமுடியாத கால்களை மறந்து


கால்களை பறித்த வெற்றியை
கொண்டாடச் சொல்கின்றனர்
அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர்
நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை கோருகிறோம்


மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்?


அது நம் குழந்தைகளை கருவிலேயே சிதறடித்தது


அப்பாவிகள் பதுங்கிய குழிகளில் 


குண்டுகளைப் பொழிந்தது


நிலத்துடன் லட்சம் மனிதர்களை 

தின்று செரித்தது
அது எலும்புக்கூடுகளினிடையே
நிணங்களினிடையே
குருதியினிடையே
கொடியசைத்து மகிழ்ந்தது
அவர்கள் சொல்லுவதைப் போல
அந்தக் கணங்களை மறந்துவிட முடியாது
அவர்கள் சொல்வதைப்போல


அந்தக் கணங்களை மன்னிக்க முடியாது
திட்டமிட்டு செய்யப்பட்டவைகள் 
மறக்கக்கூடியவையல்ல
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள் 
மனிக்கக்கூடியவையல்ல
ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும்
வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும்


புகைப்படங்களில் இருக்கும் 


இல்லாதவர்களைக் குறித்தும்
பெயர் பட்டியல்களிலிருக்கும் 
இல்லாதவர்களைக் குறித்தும்
என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே?
இரத்தமும் சதைகளும் படிந்த


பழைய பத்திரிகைகளை நீ விரித்துப் பார்க்காதபடி
மறைவாக வைத்துள்ளேன்
எல்லாவற்றையும் மறக்கும்படி சொல்கின்றனர்
என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள்
என் கால்களுக்கு என்ன ஆனது?
ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

என்தாயிற்கும் 
என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆனது?


எங்கள் பதுங்கு குழியில் யார் குண்டு வீதியது
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?
மாபெரும் இனக்கொலையில் ஏற்றப்பட்ட 


பற்கள் நிரம்பிய கொடியை
என் மகளுக்கு பரிசளிக்கும் 
இந்த நாட்களில் தொடங்கும் எதிர்காலம் 


எப்படியானதாய் இருக்கும்?
யுத்த வெற்றியின் பாடலைப் பாடிக் கொண்டே
இழப்பை மறக்கச் சொல்கின்றனர்
மேலுமொரு காயம் வேண்டாம் மகளே


மேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே
நாம் கேட்பதெல்லாம் 
அழிக்கப்பட்ட உயிர்களையல்ல
கொல்லப்பட்டவர்களை 
நினைவும் உரிமையை

நாம் கேட்பதெல்லாம்
குருதிக்குக் குருதியல்ல
அழிக்கப்பட்டவர்களுக்கு நீதி
நாம் கேட்பதெல்லாம் 
பழிக்குப் பழியல்ல
இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலம்

நாம் கேட்பதெல்லாம்
எவருடைய உரிமையையுமல்ல
எம்முடைய உரிமையை
எனதருமை மகளே!
நாம் கேட்பதெல்லாம் 
நீதியின் உண்மை
உண்மையின் நீதி
உண்மைகளை மறைத்து

எமது சடலங்களின்மீது
எமது குருதியினால் 
எழுதும் வீர வரலாறு
அழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாது
மகளே எம்முடைய நிலத்தை அபகரிபதற்காயும்
தம்முடைய அதிகாரத்தை பரப்புவதற்காயும்
எம்முடைய அரசை கலைப்பதற்காயும்
எம்மை பூண்டோடு துடைப்பதற்காயும்
உனது கால்களை பிடுங்கி
உன் தாயையும்
ஐந்து சகோதரர்களையும் கொன்றதை அறியும்போது
இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்?

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132293/language/ta-IN/--.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.