Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல்

Featured Replies

வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல்

"புலி பசித்தாலும் புல்லுண்ணாது"

இது வெறும் மொழியல்ல. மூதாதயர் அனுபவத்தில் உரைத்த முதுமொழி, சாவைக்கூட சந்திப்போம், சரணடைய மாட்டோம். இது வேங்கை மொழி. வரலாற்றில் நடந்த மொழி. வாகரையிலும் அது தான் நடக்கிறது.

நிகழ்காலத்தில் நிலவுகின்ற நிகழ்ச்சி நிரல் என்ன? ஊடகங்களில் உலா வரும் செய்திகள் பதில் சொல்லும். இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உரைக்கின்றார் 'இன்னும் இரண்டு மாதங்களில் கிழக்கில் புலிகளை முடக்கி விடுவோம்" என்று. இந்த வசனங்கள் களத்தில் நிற்கும் நாங்கள் அடிக்கடி அறிபவை தான். சரத்போன்சேகா சொல்வதை படை சாதித்து காட்ட தயாரா அன்பது தான் கேள்வி? இல்லை என்பதே பதில். ஏன் தெரியுமா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடுமா? நிச்சயமாக இல்லை. வாகரையை அண்மித்து களமுனைகளில் நிற்கும் படைகள் இப்போது சூடு கண்ட பூனைகள்தான். அவர்களுக்கு தானே இங்கே களத்தில் புலிகள் காட்டிய வேகமும் வீரமும் தெரியும். கொழும்பிலே இருக்கும் இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் எத்தனை தடவைகள் சொல்லி இருப்பார்கள் வாகரையில் புலிகள் பலவீனமடைந்து இருக்கின்றார்கள் என்று?. அவர்கள் கூறிய பின்பு எத்தனை தடவைகள் இராணுவ முனேற்ற முற்சி நடந்திருக்கிறது? எங்கிருந்து படை நகர்வை மேற்கொண்டார்களோ அங்கிருந்துகொண்டு தான் இன்றும் அறிக்கைகள் வெளியிடுகின்றார்கள்.

சிங்கள மக்களின் சிந்தனைப்போக்குகளை சமாளிப்பதற்காக களமுனைத் தகவல்களை ஊடகங்களில் அப்படியே தலைகீழாக மாற்றி வெளியிடுகிறது சிங்கள அரசு. அதே நேரம் முனேற்ற அராணுவ நடவடிக்கைகள் தோல்வியயைத் தழுவியவுடன் அப்படியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்ட தாக்குதலிற்கு அதிரான சமராக சிங்கள அரசு காட்ட முனைகிறது. ஆனாலும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது கடினமல்லவா? சம்பவங்கள் சாட்சியாகின்றது. வாகரையை முழுமையாய் விழுங்கி ஏப்பமிடலாம் என்ற கனவோடு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முப்படைகளின் பாரிய ஒருங்கிணைப்போடு பனிச்சங்கேணி வழியாக முன்னேறிய படைகளிற்கு நடந்தது என்ன? புலிகளின் பகுதி நோக்கி முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் இராணுவத்தினரதும் ஒட்டுக்குழுக்களினதும் சடலங்கள் எங்கள் பகுதிக்குள் எப்படி இருக்க முடியும்? காயமடைந்த நிலையில் எம்மால் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி உண்மையை உரைக்கவில்லையா?

அது போலவே கட்டுமுறிவுக்குளம் பகுதியூடான முன்னேற்ற முயற்சி முறியடிப்புச்சமரும் முக்கியமானது.

இந்த பகுதிக்குள் முன்னேறுவது கடினம் என்ற களமுனை இராணுவத் தளபதிகளின் தகவல்களை நிராகரித்து இராணுவத்தினரை வழுக்கட்டாயமாக முன்னேறச் செய்ததன் பயன் என்ன? அந்தச் சமரில் அறுபதிற்க்கும் மேற்பட்ட படைகள் கொல்லப்பட்டு நூற்றி ஐம்பதிற்க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானார்கள். எமது தரப்பில் லெப். கேணல் விடுதலை அவர்கள் உட்பட நான்கு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர். இந்த உண்மைகள் சிங்கள் மக்களை சென்றடைவதை சிறீ லங்கா அரசு இலாவகமாக தடுத்து விடுகின்றது.

அது போலவே கடந்த டிசம்பர் மாதத்தில் மீண்டும் மகிந்தபுர மற்றும் பனிச்சங்கேணி பகுதிகளூடாக சிங்கள படைகள் மேற்கொண்ட பாரிய இராணுவ முயற்சிக்கு நாம் கொடுத்த பதிலடி தாக்கங்களை சிங்கள அரசு இருட்டடிப்புச் செய்ய முயற்சித்தது. மாறாக எம்மால் கைப்பற்றபட்ட இராணுவச் சடலங்கள் உண்மையை உலகிற்கு உரைத்தது. இந்த நான்கு சமர்களிலும் துல்லியமான கணிப்பீட்டின் அடிப்படையில் நானூறூ வரையான படையினர் கொல்லப்பட்டனர். அதே தொகையினர் காயமடைந்து களத்தில் இருந்து அப்புறபடுத்தப்பட்டிருக்கிற

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் கரிசல். அருமையான பதிவு. எங்கிருந்து இந்தக்கட்டுரையினை இணைத்தீர்கள் என்று குறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

போரட்டத்தைக் கொச்சைப்படுத்தி எம்மை பலவீனப்படுத்த நினைக்கும் வெத்து வேட்டுகளுகளுக்கு இக் கட்டுரை ஒரு நெத்தியடி. நிறை குடம் தழும்பது அருமையானதோர் இணைப்பு இணைத்தவருக்கு என் நன்றிகள். இவ் விணைப்பை பெற்ற தளத்தை அறிமுகப்படுத்துங்கள்

இது வரலாறு :

சந்திரிகா : மாமா என்ன நடக்கிறது வன்னியில?

மாமா : பயப்படாதே மருமோளே இன்னும் ஒரு கிலோ மீட்டர் தான் பாக்கி. முக்கால் வாசி புலி குளோஸ்

சந்திரிகா : மாமா என்ன நடக்கிறது வன்னியில?

மாமா : மருமோளே இதோ முல்லை தீவு தெரியுது. புலி எல்லாம் பலி.

சந்திரிகா : மாமே (மொகத உனே வன்னியே) என்ன நடக்கிறது வன்னியில?

மாமா : ஐயோ மருமோளே என் கோவணத்த காணயில்லை. தமிழிச்சியிட சேலைய சுத்திக் கொண்டு தான் கொழம்பட ஓடி வாரேன். கொழபட வந்து அடியின்ட அகலத்த சொல்லுறன்.

மறந்து விட மாட்டோம். சரித்திரம் திரும்பும் விரைவில் எம் புலிகள் சாதனை படைப்பர். அன்று ஈழத்தில் சிங்களம் எக்காளமிட இருக்காது.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.