Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 நாட்கள், 10 லட்சம் தலைப்புகள், ஒருகோடி புத்தகங்கள்; துவங்கியது சென்னை புத்தக கண்காட்சி!

Featured Replies

10 நாட்கள், 10 லட்சம் தலைப்புகள், ஒருகோடி புத்தகங்கள்; துவங்கியது சென்னை புத்தக கண்காட்சி!

bookfair50011.jpg

சென்னை; தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 39 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவுத்திடலில் இன்று துவங்குகிறது. இதில் விகடனின் புதிய இலக்கிய வெளியீடான தடம் இதழுக்கென பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். கோடிக்கணக்கான புத்தகங்களில் தங்கள் அறிவுப்பசிக்கு உகந்த புத்தகங்களை ஒரே இடத்தில் தேடி வாங்கிச்செல்வது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும். தமிழகம் முழுவதிலிருந்தும் வாசகர்கள் இந்த புத்தக திருவிழாவிற்கு திரண்டுவருவர்.

vikatanbookfair1.jpg

ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தின் முதல்வாரத்தில் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தால் தள்ளிப்போனது. 39–வது ஆண்டாக இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது.

கண்காட்சியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தொடங்கிவைக்கிறார். 39-வது புத்தகக் காட்சியை ஒட்டி சிறப்பு தபால் உறை வெளியிடப்படுகிறது. இதை சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிடுகிறார். இன்று துவங்கும் புத்தக கண்காட்சி 13–ந்தேதி வரை  10 நாட்கள் நடக்கிறது.

gandhikannadasan2502.jpgஇதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன், ‘ 39–வது சென்னை புத்தகக் கண்காட்சி, சென்னை தீவுத்திடலில்  1 ம் தேதி துவங்கி வரும் 13–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த பதிப்பாளர்களில் பலர் கலந்து கொள்கின்றனர். 700 அரங்குகள் அமைக்கப்பட்டு 10 லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், கன்னட நூல் அரங்குகள் இடம் பெறுகின்றன. தமிழ் மொழி எழுத்தாளர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள எழுத்தாளர்களும் கவுரவிக்கப்படுகின்றனர்.  சிங்கப்பூர் அரசின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழ் எழுத்தாளர் குழு அரங்கும் அமைக்கப்படுகிறது. அப்துல் கலாமின் அரிய புகைப்படங்கள், இதுவரை வெளிவராத கவிதைகள் அடங்கிய சிறப்பு அரங்கு ஒன்றும் அமைக்கப்படுகிறது” என்றார்.

புத்தகக் கண்காட்சியை தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே துவங்கும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10.
 

bookfair5003.jpg

குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கட்டுரை, ஓவியம், குறும்படப் போட்டிகள் நடத்தப்படும். ஓவியப்பயிற்சி பட்டறையில் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கப்படும். தினசரி குறும்படங்களும் வெளியிடப்படும். படைப்பாளிகளுடன் பார்வையாளர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலையில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுர புத்தகங்கள் அரங்கு எண் 366 முதல் 369 மற்றும் 424 முதல் 427 எண்ணிட்ட அரங்குகளில் கிடைக்கும். ஆனந்தவிகடன் வெளியீடுகள் 77, 78,216, 217 எண்ணிட்ட அரங்குகளிலும், விகடனின் புதிய இலக்கிய வெளியீடான தடம் இதழ் 312 மற்றும் 313 அரங்குகளிலும் கிடைக்கும்.

புத்தக கண்காட்சி வாசகர்களின் தீபாவளித்திருவிழா!

http://www.vikatan.com/news/tamilnadu/64742-chennai-bookfair-stars-today-in-theevuthidal.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.