Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போரில் 220,000 மக்களுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்(படங்கள்)

Featured Replies

இறுதிப்போரில் 220,000 மக்களுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்(படங்கள்)

News%2BVedio212.jpg
 
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சனத்தொகை

பரம்பல் விகிதம் கடந்த 1981ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மாற்றத்தினை 2012ஆம் ஆண்டு நிலை காட்டுகின்றது.
 
 
2007ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 220,117ஆக இருந்த மக்கள் தொகை 2012ஆம் ஆண்டில் 81,263ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் 195,386 ஆக இருந்த மக்கள் தொகை 111,210ஆக குறைந்துள்ளது.
 
 
கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடுகளுக்கும் 2012இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டிற்கும் பாரியளவிலான வித்தியாசத்தினை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
 
குறிப்பாக இறுதிப்போரில் முழுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரம் இரண்டு இலட்சத்து இருபத்துமூவாயிரத்து முற்பது பொதுமக்களின் நிலை என்னவென்பது கேள்விக்குள்ளாகியுள்ளது?
 
இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச இறப்புக்கள்,காணாமல் போனமை தவிர கிளி,முல்லை மாவட்டங்களில் மாத்திரம் 223,030 எண்ணிக்கையான மக்களுக்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதை நல்லாட்சி அரசோ அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள த.தே.கூட்டமைப்போ இதுவரை வாய்திறக்கவில்லை.
 
ஐ.நா அறிக்கையின்படி நாற்பதாயிரம் என்றும் ஒரு இலட்சம் என்றும் சொல்லப்பட்டுவந்த தொகை தற்போது இரண்டு இலட்சத்திற்கு மேலாக காணப்படுகின்றது.
 
1981இலிருந்து 2012 வரை வடக்கு கிழக்கில் தமிழ்,சிங்கள இனங்களின் பரம்பல் விகிதமும் வாசகர்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

2221.jpg
Untitled-2.jpg
 
23.jpg
3-2.jpg
 
 
32.jpg
 
1-2.jpg
52.jpg
 
56-2.jpg
 
 
 
 
 
 
323.jpg
 
432.jpg
 
 
 
Jaffna2.jpg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கணிப்புக்களின்... முடிவுகள், மிகவும் கவலையாக இருந்தது.
எனது... மச்சாள் ஒருவர், இந்தக் கணிப்பீட்டை,  20  வருடங்களுக்கு முன்பு, கவலையுடன்  சொன்னது....
இந்தப் போர் தோற்றால்......  இலங்கையில்  தமிழர்,  மூன்றாம் குடி மக்களாக வாழ வேண்டிய நிலைமை ஏற்படும்.
கண் மூடித், திறப்பத்துற்குள்... அதுகும், நடக்கப் போகுது.
இனத்தையும், போராட்டத்தையும்... காட்டிக் கொடுத்த தமிழன்... 
இப்போ...எங்கே....?

எவ்வளவு.... நக்கல், நளினங்கள்.... விட்டீர்கள். எல்லாவற்றையும், சகித்தோமே....
நல்ல... சந்தர்ப்பத்தை, தவற விட்ட... இனம் நாங்கள்.
இப்படியே.... அழிந்து போவோம் என்று, நினைத்தால்.... அது நடக்காது.
அடுத்த தலை முறை, இதனை ஒரு படிப்பினையாக எடுக்கும்.

தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்த நாடுகளும், தமிழின அழிப்புக்கு துணை போன நாடுகளும் பதில் சொல்லியே ஆகவேண்டும். தப்பிவிட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.