Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் கொலை: 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Featured Replies

வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் கொலை: 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

 

வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் ஒருவர் நேற்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே ஐஎஸ் அமைப் புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.

இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அண்மை காலங்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இந்து கோயில் அர்ச்சகர் ஒருவரை தீவிரவாதிகள் குத்தி கொலை செய்தனர். அவருக்கு உதவ முன்வந்த பக்தர் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதே போல் கடந்த ஞாயற்றுக் கிழமை வழக்கமான பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்ற கிறிஸ்தவ தொழிலதிபர் ஒருவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த கொலை செய்தனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி பாபுல் அக்தரின் மனைவியையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்து அர்ச்சகர் ஒருவர் நேற்று மீண்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

அனந்த கோபால் கங்குலி (65) என்பவர் சதர் உபஜில்லா என்ற இடத்தில் உள்ள நொல்தங்கா கோயிலில் அர்ச்சகராக பணி யாற்றி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று பூஜைகள் செய்வதற் காக வீட்டில் இருந்து கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரை இடைமறித்த ஒரு கும்பல் சராமாரியாக தாக்கியது. பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

தீவிரவாதிகள் பலி

இந்த சம்பவத்தை அடுத்து ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடை யவர்களாக சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். அந்த மூன்று பேரும் தடைசெய்யப்பட்ட ஜமாதுல் முஜாஹிதீன் வங்கதேச அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது. இவர்கள் தான் கடந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி பாபுல் அக்தரின் மனைவியை சுட்டுக் கொன்றவர்கள் என கூறப்படு கிறது. மேலும் இந்து அர்ச்சகர் கொலை சம்பவத்திலும் இவர் களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஐஎஸ் பொறுப்பேற்பு

கடந்த ஏப்ரலில் ராஜ்சாஹி என்ற நகரில் வீட்டை விட்டு வெளியே வந்த பேராசிரியர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். அதே மாதம் இந்து தையல்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவங்களுக்கு ஐஎஸ் மற்றும் அல் குவைதா தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றாலும் வங்கதேச அரசு அதனை மறுத்து வருகிறது.

வங்கதேசத்தில் இஸ்லாம் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர் களை ஐஎஸ் மற்றும் பிரிவினை வாத அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்தடுத்து கொலை செய்து வரும் இந்த சிறுபான்மையின மக்கள் பீதியடைந்துள்ளனர். -

http://tamil.thehindu.com/world/வங்கதேசத்தில்-இந்து-அர்ச்சகர்-கொலை-3-ஐஎஸ்-தீவிரவாதிகள்-சுட்டுக்கொலை/article8704930.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.