Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாததால் திருச்சபை மீது பிரியங்கா சோப்ரா காட்டம்

Featured Replies

கிறிஸ்தவ திருச்சபையின் விரோத போக்கினால், தன்னுடைய பாட்டி மது ஜ்யோத்சனா அகோரியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் பாட்டி கடந்த ஜூன் 3-ம் தேதி இறந்துபோனார்.

தன் இறப்புக்கு முன், தன்னுடைய சொந்த ஊரான ஆட்டமங்கலத்தில் உள்ள சர்ச்சில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதை அவரின் கடைசி ஆசையாக வெளிப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து அவரின் உடல் கேரள மாநிலம் குமரகத்தில் உள்ள அவரின் சொந்த கிராமத்துக்கு எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஜூன் 5-ம் தேதி மும்பையில் இருந்து கோட்டயத்துக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் ஆட்டமங்கலத்தில் அடக்கம் செய்ய, அங்கிருந்த திருச்சபை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அங்கிருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் உள்ள பொன்குன்னம் திருச்சபையில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடல் பொன்குன்னத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதால், கடைசிகட்ட பிரார்த்தனை மற்றும் சடங்குகள், பருத்தும்பராவில் இருந்த உறவினரின் வீட்டில் நடத்தப்பட்ட்டன.

ஜேக்கோபைட் சிரிய கிறிஸ்தவ சர்ச்சும் ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதந்தையரும், ஆட்டமங்கலத்தில் அடக்கம் செய்ய அனுமதி தந்திருக்கின்றனர். ஆனால் ஆட்டமங்கலம் சர்ச் குழு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. ஜ்யோத்சனா அகோரி தன்னுடைய மதத்துக்கு வெளியே திருமணம் செய்ததாலும், திருச்சபையோடு நீண்ட வருடங்களாக தொடர்பில் இல்லாததாலும் அவரின் உடல் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று திருச்சபை வட்டாரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கேரள கிறிஸ்தவர்

கவலப்பாரா குடும்பத்தில் பிறந்த மது ஜ்யோத்சனா அகோரியின் உண்மையான பெயர் மேரி ஜான். செவிலியர் படிப்பை முடித்த மேரி, பிஹாருக்கு இடம்பெயர்ந்தார். அங்கே மருத்துவர் அகோரியைத் திருமணம் செய்தவர் தன்னுடைய பேரை மது ஜ்யோத்சனா அகோரி என மாற்றிக்கொண்டார். தம்பதியினர் இருவரும் விடுதலைப் போராட்டத்திலும், சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா, அகோரியின் மகளான மது சோப்ராவின் மகள் ஆவார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டயம் ஜேக்கோபைட் சர்ச் மறைமாவட்டத்து பங்குதந்தை தாமஸ் மோர் தீமத்தியோஸ், ''மது ஜ்யோத்சனா அகோரி ஒரு சிறந்த சமூக சேவகர், அவர் ஏராளமான நல்ல காரியங்களை செய்திருக்கிறார்'' என்றார்.

"அவரை அடக்கம் செய்வதற்கான உரிமைகளை மறுப்பது மனிதத்தன்மையற்ற, கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்'' என்கின்றனர் பொதுமக்கள்.

இந்நிலையில், கிறிஸ்தவ திருச்சபையின் விரோத போக்கினால், தன்னுடைய பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதாக பிரியங்கா சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/india/பாட்டியின்-கடைசி-ஆசையை-நிறைவேற்ற-முடியாததால்-திருச்சபை-மீது-பிரியங்கா-சோப்ரா-காட்டம்/article8718104.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.