Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தின் மீதும் குற்றப் பொறுப்பு விழுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்தின் மீதும் குற்றப் பொறுப்பு விழுகிறது

நிட்டம்புவவிலும், ஹிக்கடுவவுக்கு அருகில் மீட்டியகொட விலும் கடந்த வாரத்தில் இருபது மணி நேர வித்தியாசத்தில் இடம்பெற்ற இரு வேறு பஸ் குண்டு வெடிப்புகளில் அப்பாவிப் பொதுமக்கள் 21 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். 75 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இக்குண்டு வெடிப்புகள் விடுதலைப் புலிகளின் சதி நாச வேலை என்று அரசு குற்றம் சுமத்தியிருக்கின்றது. ஆனால், புலி களோ அதை மறுத்துள்ளனர். இந்தக் குண்டு வெடிப்புகளுக் கும், தங்களுக்கும் தொடர்பு ஏதுமில்லை என அவர்கள் தெரி வித்துள்ளனர்.

""புலிகளுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன், எவ்வித ஆதாரங்களும் அற்ற நிலையில் இத்தகைய குற்றச்சாட்டு புலிகள் மீது சுமத்தப்படுகிறது'' எனப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் கூறுகின்றார்.

எது எப்படியோ, யார் செய்திருந்தாலும், என்ன பின்னணி யில் செய்திருந்தாலும், அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரங்கள் ஏற்கப்படவே முடியாதவை; கண்டிக் கத் தக்கவை.

இத்தகைய சம்பவங்களை அடுத்து, வழமைபோல அவற்றுக்கு விடுதலைப் புலிகளைப் பொறுப்பாக்கி, அவர்களைக் குறை கூறி, பிரசாரப்படுத்தும் பங்கு பணியை சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களும் ஆரம்பித்து விட்டன.

ஆனால் அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதி முயற்சிகளுக்கான வாய்ப்புக் குன்றி, மோதல் நிலை தீவிர மடைந்து, யுத்தம் வெடிக்கும் இன்றைய ஆபத்து நிலை ஏற்பட்டமைக்கு அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினர் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகமும் கூடக் காரணம் என்பது தான் உண்மை. குறிப்பாக, இப்பிரச்சினையில் அதிகம் தலை நீட்டி, இடைநடுவில் புகுந்து அளவுக்கு மீறி "நியாயம் பிளக் கும்' இணைத் தலைமைகள் உட்படச் சர்வதேச சமூகத்து பல்வேறு அங்கத்துவ நாடுகளும், இராஜதந்திர வட்டாரங்களும் கூட இந்நிலைமைக்குப் பொறுப்பு.

உதாரணத்துக்கு மன்னார், இலுப்பைக்கடவை படகுத்துறைக் குடியிருப்பு மீதான விமானக் குண்டு வீச்சுத் தாக்கு தலை எடுத்துக் கொள்வோம். இந்தக் கொடூரத்தில் இருபது அப்பாவிப் பொதுமக்கள் உடல்சிதறிப் பலியானார்கள். இருபத் தியைந்து பேர் வரை படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலை நடத்தியவர்கள் அரசுப் படையினர் என்ப தில் சந்தேகமில்லை. ஆனால், தாக்குதலில் பலியானவர்கள், காயமுற்றவர்கள் யார் என்பதில்தான் முரண்பாடு. புலிகள் மீதே தாக்குதல் நடத் தப்பட்டது என்று திரித்துக் கூறி, சர்ச்சை ஒன் றைக் கிளப்பி, அதன் மூலம் தனது தமிழின அழிப்பு நடவடிக் கையை அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. அந்தத் திரிப்புக்கு எடுபட்டது போல சர்வதேச சமூக மும் நடந்து கொண்டமைதான் தப்பு; தவறு.

இக்கொடூரத்தை தனது நாட்டு மக்கள் எனத் தான் உரிமை கோரும் மக்கள் சமூகத்தின் மீது தன்னைச் சட்டபூர்வ அரசு என்று கூறிக் கொள்ளும் அரசு இவ்வாறு கண்மூடித்தனமான குண்டு வீச்சைப் புரிந்தபோது ஐ.நா. சபையின் பிரதிநிதி கூட கவலைதான் தெரிவிக்கின்றார். கண்டிக்க முன்வரவில்லை.

சர்வதேச சமூகத்தின் ஏனைய அங்கத்துவ நாடுகள் மௌனம் காத்து, இக்கொடூரத்துக்கு அங்கீகாரம் வழங்க, அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழித்த அரச பயங்கரவாதம், இறந்த அப்பா வித் தமிழர்களைப் புலிகளாகக் கணக்குக் காட்டி மகிழ்கிறது. சட்டபூர்வ அரசு ஒன்றின் அரச பயங்கரவாதத்தைக் கண்டிக் கப் பின்னடித்து, பாராமுகமாக சர்வதேச சமூகம் செயற்படுமானால், பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் மத்தியில் செயற்படும் விடுதலை அமைப்பிடமிருந்து அல்லது அரசினாலும், சில சர்வதேச நாடுகளினாலும் "பயங்கரவாத அமைப்பாக' சித்திரிக் கப்படும் ஓர் அமைப்பிடமிருந்து வேறு எத்தகைய செயற்பாட் டைத்தான் எதிர் பார்க்க முடியும்?

2002 முற்பகுதியில் ஆரம்பமான அமைதி முயற்சிகள் மீள ஆரம் பிக்கப்பட முடியாத இக்கட்டு நிலையை நோக்கிச் சென்றமைக்குக் கூட சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கும் பிரதான காரணம் என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியது.

இந்த அமைதி முயற்சிக் காலத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பை யும், கண்காணிப்புக் குழுவின் ஆட்சேபத்தையும் பொருட்படுத் தாது, இலங்கை அரசின் இராஜதந்திர அழுத்தங்களுக்குப் பணிந்து, அதன் பொய்ப் பிரசாரத்துக்கு எடுபட்டு, சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதி நாடுகள் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகப் பட்டியலிட்டன. இதன் மூலம் அமைதி முயற்சியில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்பை உலக அரங் கில் தீண்டத் தகாதவராகத் தனிமைப்படுத்தி, ஒதுக்கி, ஓரங்கட் டின.

நீதி, நியாயங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் முக்கிய நாடு கள் சிலவற்றால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையே அமைதி முயற்சிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது; ஆப்பு வைத்தது.

அமைதிப் பேச்சுகளின் அடிப்படையாக, தென்னிலங்கை அரசோடு தமிழர் தரப்புக்கிருந்த சம நிலையையும், சமபங்காளி என்ற தகைமையையும், அந்தஸ்தையும் இது ஆழமாகப் பாதித் தது. இதனால், பேச்சு முயற்சியில் தமிழர்கள் நம்பிக்கை இழக்க வேண்டியவர்களானார்கள்.

தவிரவும், சர்வதேசத்தின் இந்த முடிவு அமைதி விவகாரத் தில் விட்டுக் கொடுக்காத கடும் போக்கைத் தென்னிலங்கை அரசு கைக் கொள்ள அதனைத் தூண்டியது. மறுபுறத்தில் கண் காணிப்புக் குழுவைப் பலவீனப்படுத்தியது.

அதேசமயம், அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக் கொள்ளும் சில நாடுகள் உண்மையில் அதற்கு மாறாக நடந்து கொள்கின்றன. ஈழத் தமிழர் மீது அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போரைக் கண்டிக்காது, அதற்கு ஆதரவு மற்றும் நிதி உதவிகளை வழங்கி அரசின் போர்த் தீவிரப் போக்குக்கு முண்டுகொடுத்து உதவுகின்றன.

இத்தகைய தவறுகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொண்டு, நீதி, நியாயத்துடனும் பாதிக்கப்பட்ட தரப்பை நோக்கிய பரிவுடனும் விடயங்களை அணுகவும், கையாளவும் சர்வதேச சமூகம் தன்னை வழிப்படுத்தா விட்டால், இலங்கை அமைதி எத்தனங்கள் குழப்பப்பட்டமைக்கான குற்றத்துக்கு சர்வதேச சமூகமும் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.

அமைதி முயற்சிகள் குழம்பிய குற்றச்சாட்டு மட்டுமல்ல, இப்போது அப்பாவிகள் கொல்லப்படும் சம்பவங்களுக் கான குற்றச்சாட்டும் கூட இதில் அடங்கும்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.