Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா செல்லமுன் பாதுகாப்பு தரப்பை சந்திக்கவுள்ள மங்கள

Featured Replies

ஜெனிவா செல்­லமுன் பாது­காப்பு தரப்பை சந்­திக்­க­வுள்ள மங்­கள

 

சர்­வ­தேச தரப்­பினால் இலங்கை இரா­ணுவம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு போர்க்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரிக்­கப்­படும் என்ற கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் நிலையில் இறுதி யுத்த கால­கட்­டத்தில் கட­மை­யாற்­றிய இரா­ணுவ உய­ர­தி­கா­ரிகள், முக்­கிய உறுப்­பி­னர்கள் மற்றும் முப்­ப­டை­களின் தள­ப­தி­க­ளுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் முக்­கிய சந்­திப்­பொன்றை நடத்­த­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் 32ஆவது கூட்­டத்­தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை விவ­கா­ரங்கள் தொடர்பில் எதிர்­வரும் 29ஆம் திகதி வாய்­மூல அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­துடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளக விசா­ரணை பொறி­மு­றைகள் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

mangala_samaraweera.png

இந்­நி­லையில் இலங்­கையில் இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக சர்­வ­தேச தரப்­பி­னரும் சிவில் அமைப்­பு­களும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளன .

இதே­வேளை புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவைக்­காக இலங்கை இரா­ணு­வத்தை போர்க்­குற்­ற­வா­ளி­க­ளாக நிரூ­பிக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­ற­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ ஆகியோர் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர். இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இலங்கை தொடர்­பி­லான விவாதம் ஆரம்­பிக்க முன்னர் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு­வினர் பாது­காப்பு தரப்­பி­ன­ருடன் முக்­கிய சந்­திப்­பு­களை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

இறுதி யுத்த கால­கட்­டத்தில் கட­மை­யாற்­றிய இரா­ணுவ உய­ர­தி­கா­ரிகள், முக்­கிய உறுப்­பி­னர்கள் மற்றும் முப்­ப­டை­களின் தள­ப­தி­க­ளையும் வெளி­வி­வ­கார அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்திக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய நபர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.virakesari.lk/article/7523

ஜெனீவா புறப்படமுன்னர் போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு!

ஜெனீவா புறப்படவுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட முக்கிய அதிகாரிகள் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 32ஆவது அமர்வு கடந்த திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் சிறீலங்காவின் நிலைப்பாடுகள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் எதிர்வரும் 29ஆம் திகதி வாய்மூல அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார். அத்துடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை தொடர்பாக உரையாற்றவுள்ளார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றன என்பதை சர்வதேச தரப்பும், சிவில் அமைப்புக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ஆனால், அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ஷ இராணுவத்தை போர்க்குற்றவாளிகளாக்கவே இப்போதைய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முனைகின்றது எனவும் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்காவின் நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றுவதற்கு முன்னர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகள், மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர சந்திக்கவுள்ளதோடு, இக்கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சியும் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

http://thuliyam.com/?p=30267

தமிழின அழிப்புக்கு சுதுனெலும் என்ற பெயரில் சிங்கள இளைஞர்களை திரட்டிய சிங்கள-பௌத்த இனமதவெறியரான மங்களவை சந்திக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும், ராஜபக்ச கும்பலையும் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதே தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் சிறந்த முதல் கட்ட செயற்பாடாக இருக்க முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.