Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட மாணவன் விடுதலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட மாணவன் விடுதலை.

எழுதியவர் ஆர்த்தி

Wednesday, 10 January 2007

யாழ். கொக்குவில் கிழக்கில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினராலும் ஈபிடிபியினராலும் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு விஞ்ஞானபீட மாணவன் மிகக்கொடூரமான சித்திரவதைகள் அச்சுறுத்தல்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரின் நேரடி உதவியுடன் கொக்குவில் பகுதிக்கு வந்த ஈபிடிபி துணைக்குழு உறுப்பினர்கள், அருணகிரிநாதன் நிருபராஜ் என்ற இந்த மாணவனை, பலாத்காரமாக கடத்தி சென்றனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், அவரது வீட்டிற்கு முன்னே வந்து நின்ற வாகனத்திலிருந்து வெளியே இவர் தூக்கிவீசப்பட்டார்.

மிக மோசமான அடிகாயங்கள் உடல் முழுதும் காணப்படுகின்றன. கடத்தப்பட்ட நாள் முதல் மிகக்கொடூரமான சித்திரவதைகள் இடம்பெற்றிருக்கிறது. உடல் எங்கும் அடிகாயங்கள். பேசக்கூட முடியாத நிலையில், மிகக் கொடூரமான உபாதைகளுடன், யாழ். போதனா மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரைக் கடத்தி சித்திரவதை செய்தவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட இவர் மறுத்து விட்டார். அப்படி வெளியிட்டால் உயிருடன் இருக்க முடியாது அவரின் குடும்பத்திற்கும் ஆபத்து என்ற காரணத்தால் அவர் எதையும் கூறக்கூடிய நிலையில் இல்லை என அவரின் உறவினர்கள் நமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட மாணவன் விடுவிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தை திறக்க முடியும் என பல்கலைக்கழக மாணவர் பேரவை அறிவித்ததுடன் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டங்கள் காரணமாகவும் இராணுவத்தினராலும் ஈபிடிபியினராலுமே இம்மாணவன் கடத்தப்பட்டான் என்பது வெளியுலகத்திற்கு தெரியவந்ததன் காரணமாகவும் இவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இனிமேல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான எந்தவித போராட்டங்களுக்கும் ஆதரவு அளிக்ககூடாது அளித்தால் இம்மாணவனுக்கு நடந்தகதிதான் நடக்கும் என்ற செய்தியை இராணுவத்தினரும் ஈபிடியினரும் இந்த அரஜகசெயலின் மூலம் கூறியுள்ளனர்.

கிழக்கில் கருணா குழுவை வைத்து தமிழ் மக்களை அடக்கி வருவது போல வடக்கில் ஈபிடிபி ஒட்டுக்குழுவை வைத்து ஸ்ரீலங்கா இராணுவம் அடக்கி வருகிறது.

http://tamilnews24.com//index.php?option=c...82&Itemid=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.