Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையிலும் கருணா குழுவால் தமிழ் பத்திரிகைகளுக்கு தடை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையிலும் கருணா குழுவால் தமிழ் பத்திரிகைகளுக்கு தடை.

எழுதியவர் ஆர்த்தி

Wednesday, 10 January 2007

திருகோணமலை மாவட்டத்தில் தினக்குரல் சுடர்ஒளி ஆகிய தமிழ் தினசரிப்பத்திரிகைகளை விற்பனை செய்வதற்கும் கொழும்பிலிருந்து திருமலைக்கு அப்பத்திரிகைளை எடுத்து செல்வதற்கும் இராணுவ ஒட்டுக்குழுவான கருணாகுழு தடை விதித்துள்ளது.

தினக்குரல் சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகளை எடுத்து வரக்கூடாது என்றும் விற்பனை செய்யக்கூடாது என்றும் அதை மீறினால் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என மேற்படி பத்திரிகைகளின் திருகோணமலை முகவர்களுக்கு கருணாகுழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

தினக்குரல் சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் விற்பனை செய்வதற்கு கருணாகுழு தடைவித்துள்ளது. கடந்த ஆறுமாதங்களாக இப்பத்திரிகைகள் மட்டக்களப்பு அம்பாறைக்கு எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மேற்படி பத்திரிகை வெளியீட்டாளர்கள் அரசாங்கத்திற்கு முறைப்பாடு செய்த போதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் மக்களை இருண்ட உலகத்தில் வைத்திருப்பதற்கும் வடக்கு கிழக்கை பிரித்து கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்குவதற்கும் கருணாகுழுவின் சதி முயற்சிகளை இத்தமிழ் பத்திரிகைகள் அம்பலப்படுத்தி விடும் என்ற அச்சத்தில் தமிழ் பத்திரிகைகளுக்கு கருணாகுழு தடைவிதித்துள்ளது.

வீரகேசரியின் வாரப்பத்திரிகைக்கும் கிழக்கு மாகாணத்தில் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. பி.தேவராசாவை ஆசிரியராக கொண்ட வீரகேசரி வாரவெளியீடு ஓரளவு தமிழ் மக்களின் அவலங்களையும் நியாயத் தன்மைகளையும் சொல்வதால் வீரகேசரி வாரவெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.பிரபாகரனை ஆசிரியராக கொண்ட வீரகேசரி தினசரி முழுக்க முழுக்க சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோகும் பத்திரிகையாகவே வெளிவருகிறது. முழுக்க முழுக்க ரம்புக்கல சொல்லும் அபாண்டமான பொய்களையே தாங்கி வருகிறது. இதனால் வீரகேசரி தினசரி பத்திரிகையை கருணாகுழுவும் இராணுவமும் கிழக்கில் அனுமதித்திருக்கிறது.

கிழக்கு மாகாண மக்களுக்கு இப்போது நாட்டில் உண்மையாக என்ன நடக்கிறது என தெரியாது. இலங்கை வானொலியும் சக்தி வானொலியும் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் அறிக்கைகளை மட்டுமே வழங்கி வருகிறது. சூரியன் வானொலியின் செய்தி முகாமையாளர் குருபரன் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின் அவ்வானொலியும் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை அவலங்களை சொல்ல முடியாத நிலையில் உள்ளது. தினக்குரல் சுடர்ஒளி பத்திரிகைகளும் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பதால் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கமும் இராணுவமும் வெளியிடும் செய்திகளை மட்டுமே கேட்க முடிகிறது.

இலங்கை வானொலி சக்தி வானொலி ஆகியவற்றிலும் அரசாங்கத்தின் பத்திரிகையான தினகரன், மற்றும் அரசுக்கு ஆதரவாக வெளியாகும் வீரகேசரி தினசரியும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் போரில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் கொச்சைப்படுத்தும் வகையிலுமே செய்திகள் வெளியாகின்றன.

இதனால் கிழக்கு மக்கள் உண்மைத் தகவல்களை அறிய முடியாது இருண்ட உலகத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.