Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரப்போவதில்லை

Featured Replies

அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும்

நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு.

வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள்.

சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி

நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007

வந்திட்டான் தொப்பி பிரடீட்டானெல்லா இவரின் ஆதரவு என்னத்துக்கு இவங்களை விரட்டினது சரியானதே

கக்கீம் ஒரு சாதாரண அரசியல்வாதி. அவரை வைத்து ஒரு சமூகத்தை முழுவதும் எடைபோடுவது தவறு.

எமது தாயகத்தில் இஸ்லாமிய தமிழருக்கும் பாரம்பரிய இடங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு தான் போராட்டம் நடக்கிறது. அவர்களது அபிலாசைகள் தீர்க்கப்படாது ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுவிட முடியாது.

அந்தளவிற்கு நாம் பலமானவர்களும் அல்ல வேறு பலமானவர்கள் எமக்கு பின்னால் நிக்கப்போவதும் இல்லை. எந்தளவு விரைவாக இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நடந்து கொள்கிறோமோ அந்தளவிற்கு இழப்புகளும் அவலங்களும் இழுத்தடிப்புகளும் குறையும்.

இல்லாவிட்டால் நன்மை அடையப்போவது சிங்கள இனவாதம் தான்.

  • தொடங்கியவர்

அரசில் இணைந்து ஏதோ அமைச்சர் பதவி கிட்டப் போவதாக தகவல். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாததுகள் எல்லாம் வானமேறி வைகுந்தம் போக கனவு காணுதுகள். சமாதான காலத்திலையும் மூன்றாம் தரப்பு முக்கால் தரப்பு என்று குளறுபடி செய்தவர்கள். பேச்சு வார்த்தைகளின் முஸ்லிம்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி ஒன்றிணையுங்கள், அதன் பின் மற்றவைகளைப் பேசலாம் என்று தலைவர் இவர்களைச் சந்தித்த போது கூறியிருந்தார். இவர்கள் இங்கே கொழும்பில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தமது மக்களையே விற்று அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள். இவர்களை இவர்கள் இன மக்களே விரைவில் புறக்கணிப்பார்கள். சலசலப்பு மட்டுமே.

ஈழத்திலிருந்து

ஜானா

முஸ்லிம்களுக்கு தனியாக இஸ்லாம் சட்டங்களுடன் நீதிமன்றம் வேண்டும், அரபு மொழியையும் தேசிய மொழியாக்கவேண்டும்... இப்படித்தான் ஏதாவது கேட்கப் போகிறார்கள்.

எரிகிற வீட்டில் நெருப்பு கேட்க வருகிறார் ஹக்கீம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்திட்டான் தொப்பி பிரடீட்டானெல்லா இவரின் ஆதரவு என்னத்துக்கு இவங்களை விரட்டினது சரியானதே

ஈழவன்!!

இந்தக்களம் முஸ்லீம்களின் வெறுப்பை தமிழ் இனத்துக்கு வாங்கிக் கொடுக்காமல் இருக்க பார்த்துக் கொள்வோமே.

  • தொடங்கியவர்

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் மு. கா. ஆராய்வு பேச்சு நடத்த 9பேர் கொண்ட குழுவும் நியமன

ஜன 13 2007 08:12:42 (யாழ் வாணன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரிவாக ஆராய்ந்து வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒன்பது பேர்கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் ஜனாதிபதியை அடுத்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஜனாதிபதியை சந்திப்பதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி தருமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது.அரசியல் இணைவது குறித்து பேச்சு நடத்தவதற்கான கட்சியின் இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் மாவட்ட அமைப்பாளர்கள் மூன்று பேரும் அங்கம் வகிக்கின்றன.

நன்றி தமிழ்வின்

சோழியன் குடுமி சும்மா ஆடாது. முஸ்லிம் சகோதரரும் தமது சந்தர்ப்பவாத தலைமைகளைப் பற்றி புரிந்து கொள்ளட்டும்.

நன்றி

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துடன் இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பூரண இணக்கத்தை தெரிவித்துள்ளது. ரவூப் ஹக்கீம்

[saturday January 13 2007 06:17:50 PM GMT] [யாழ் வாணன்]

ஜனாதிபதி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ உள்ளடங்கிய அரச தரப்பு குழுவினருக்கும் இடையில் இதற்கான பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

வெள்ளியிரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில் விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் அரச தரப்பில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ, அமைச்சர் அதாவுட செனவிரத்ன, அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் கலந்துகொண்டனர்

Tamilwin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.