Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்... சென்னை கருணையற்ற நகராமா?

Featured Replies

2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்... சென்னை கருணையற்ற நகராமா?

சுவாதி கொலையை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து... ‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவி வருகிறது.

swathi.jpg

சென்னை நுங்கம்பாக்கத்தில்  பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டபோது, ரயில் நிலையத்தில்  50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். கொலையாளி ஒரே ஆள்தான். கல்லை கொண்டு தாக்கத் தொடங்கியிருந்தால்கூட, கொலையாளி மிரளத் தொடங்கியிருப்பான். சுவாதி உதவிக்கு யாரும் வராத நிலையில் தனி ஆளாக போராடி பலியாகியுள்ளார்.

கொலையாளி தப்பி ஓடும்போதும், யாரும் பிடிக்க முன்வரவில்லை. கொலையாளி அங்கிருந்து சென்ற பின்னரும்கூட உயிருக்கு போராடிய சுவாதிக்கு உதவி செய்யகூட யாரும் முன்வரவில்லை. சென்னை மக்களின் இந்த கருணையற்ற முகத்தை விமர்சித்து,  வாட்ஸப்பில் ''நான் சுவாதி பேசுகிறேன்'' என்று உருக்கமான பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

''இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதாயத்தில் நானும் ஒருத்தி தான்.

எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன், என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களின் மனதுக்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழியபட்டு தான் இறந்தேன்.

உங்களில் ஒருவருக்குகூட அதை தடுக்க ஆண்மை இல்லையே. அவனை தடுக்காத உங்களின் கயமைகூட எனக்கு புரிந்தது. ஆனால் அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணீர் கொடுக்க கூடவா ஆள் இல்லை.

2 மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள்கூட உங்களை சுடவில்லையா? பெண் பிள்ளைகள் வெளியில் போகும்போது பார்த்துப் போக சொல்லும் நீங்கள், அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச் செய்யுங்கள்.''

சொல்ல  வார்த்தைகள் இல்லை..!

http://www.vikatan.com/news/crime/65557-safest-city-to-crime-capital-chennai.art

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலையை நியாயப்படுத்தவில்லை .....
நீயா நானா புகழ் நமீதா என்ன சொல்கிறார் என்றால் ...ஒரு பெண் ஆபத்திலிருக்கும் போது காப்பாற்ற போவது கூட Benevolent Sexism, Misogyny Patriarchy  என்று  

..ஆகவே  இப்படியான பெண்ணியவாதிகளை வைத்துகொண்டு ஆண்வர்க்கத்திடம் இந்த கொலைகளை பற்றி நியாயம் கேட்பது தப்பு ...
மேலே உள்ள காணொளியில் பெண்ணிற்கு உதவி செய்வதானால் கூட அவரின் அனுமதி பெறவேண்டும் என்று கூறுகிறார் 
ஆகவே ஒட்டுமொத்த ஆண்களும் சுவாதியின் அனுமதிக்கு வெயிட் பண்ணிக்கொண்டு இருந்திருக்கினம் போல ...
ஒரு பெண்ணியவாதியும் காப்பாற்ற வரவில்லை ...இவர்கள் எல்லாம் பேச்சில் மட்டுமே 
அளவுக்கதிகமான பெண்ணுரிமை சிந்தனையின் விளைவு ....அவர்களுக்கே ஆபத்து ....Tasted their own medicine 

  • தொடங்கியவர்

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது: விரைவில் பிடிபடுவார் என தகவல்

 
 
cctv_2910812f.jpg
 

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி (24) கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய ஆதாரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் தெரிந்துள்ளது. கொலையாளியை நெருங்கிவிட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். | வீடியோ இணைப்பு கீழே |

சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட் டுள்ளது. ரயில்வே போலீஸார் 2 டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர் கள் தலைமையில் தனிப்படை கள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் 4 வகையான வீடியோக்கள் வெளியிடப்பட் டுள்ளன.

சவுராஷ்டிரா நகர் முதல் தெரு முதல் அங்குள்ள 10 தெருக்கள் வரையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சந்தேகிக்கும் இளைஞர் வந்து போவது பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.

கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் இளை ஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2-வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் அந்த இளைஞர், ரயில் நிலையம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நெருங்கிவிட்டோம்

இது தொடர்பாக ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலை வழக்கில் பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள் ளன. அதன் மூலம் குற்ற வாளியை சந்தேகிக்கும் வகை யில் அடையாளம் கண்டறிந்துள் ளோம். அவரை நெருங்கிவிட் டோம். விரைவில் பிடித்து விடு வோம். சந்தேகிக்கும் குற்றவாளி யின் படத்தை வெளியிட்டுள் ளோம். அந்த இளைஞரை நேரில் பார்த்தால் 1512 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.

பட்டா கத்தி

கொலை செய்த இளைஞர் பட்டா கத்தியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த கத்தியை பறிமுதல் செய்துள்ள ரயில்வே போலீஸார், இதுபோன்ற கத்தி எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது, அது எப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் விசாரித்து வருகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சுவாதி-கொலை-வழக்கில்-குற்றவாளி-அடையாளம்-தெரிந்தது-விரைவில்-பிடிபடுவார்-என-தகவல்/article8778139.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.