Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு - உள்நாட்டு தன்னார்வ நிறுவனங்கள் புலிகளுக்கு உதவுகின்றன: கெஹெலிய ரம்புக்வெல

Featured Replies

வெளிநாட்டு - உள்நாட்டு தன்னார்வ நிறுவனங்கள் புலிகளுக்கு உதவுகின்றன: கெஹெலிய ரம்புக்வெல

சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் நாட்டின் சட்ட விதிகளை மீறி பயங்கரவாதத்திற்கு துணைபுரிவதாக குற்றம்சுமத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை காஞ்சிக்குடிச்சாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ மனையொன்றையும் படையினர் கைப்பற்றப்பட்டதாகவும் அங்கு நெதர்லாந்தை சேர்ந்த சோவா நிறுவனத்தின் உடமைகள் காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு மையம் வெளீயிட்ட செய்திக் குறிப்பில் சேவ் த சில்ரன், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் ஆகியவை புலிகளுக்கு உதவி செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளது.

-Pathivu-

  • தொடங்கியவர்

சர்வதேச அமைப்புக்களுக்கு அரசு எச்சரிக்கை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்குவதாகக் கண்டுபிடிக்கப்படும் உதவி வழங்கும் அமைப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இவ்விதம் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் அனைத்துலக அமைப்பொன்றின் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்குகின்றதா என்ற சந்தேகத்தின் பேரில் பல உதவி வழங்கும் அமைப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதுடன், அதனடிப்படையில் நெதர்லாந்து அமைப்பொன்று நாட்டைவிட்டு வெளியேற்றபபடலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அண்மையில் படையினர் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கஞ்சிகுடிச்சாறு பகுதியிலுள்ள புலிகளின் முகாம் ஒன்றைக் கைப்பற்றிய வேளையில் நெதர்லாந்தைச் சேர்ந்த 'சோஆ' அமைப்புக்கு சொந்தமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தங்களின் சின்னத்துடன் ஏதாவது உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பின் அது திருடப்பட்டதாகவே இருக்கும் என 'சோஆ' அமைப்பு தெரிவித்திருந்தது.

இதேவேளையில், குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றத்துக்குரிய அமைப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் என அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் விசாரணையின் கீழுள்ள அமைப்புக்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. 'சோஆ' என்று அரச சார்பற்ற அமைப்பொன்று விடுதலைப் புலிகளின் ஸ்ரான்லி முகாமிலுள்ள மருத்துவமனை ஒன்றை நடத்துவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கும் அமைச்சர் ரம்புக்வெல, சில அரச சார்பற்ற அமைப்புக்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதேவேளையில், விசாரணையின் போது எமது சந்தேகங்கள் உறுதிசெய்யப்பட்டால், எமக்கு அவர்களது விசாக்களை இரத்துச்செய்ய வேண்டியிருக்கும். அல்லது அவர்களாகவே நாட்டைவிட்டு வெளியேறவேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

இருந்தபோதிலும் தம்மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என 'சோஆ' அமைப்பின் பொது அலுவல்கள் முகாமையாளர் அன்ஸ் லெம் முனதற்றா தெரிவித்துள்ளார். அத்துடன் போரின் காரணமாக தாம் தமது அலுவலகத்தை மூடி வெளியேறும் போது எல்லாவற்றையும் எடுத்துவர முடியாது எனவும், பலவற்றைக் கைவிட்டு வரவேண்டியிருந்த பின்னணியிலேயே அவற்றைப் படைத்தரப்பு கைப்பற்றியிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளையில் கொழும்பு நாரகேன்பிட்டிய பகுதியிலுள்ள மேற்படி அரச சார்பற்ற அமைப்பின் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் அதனை அடித்து நொருக்கியிருக்கின்றனர். அங்கிருந்த பணியாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வமைப்பு விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகக் குற்றஞ்சாட்டியே ஹெல உறுமயவினர் இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

-Puthinam-

ஆரவாரமாக ஆரம்பித்த தென்தமிழீழ ஆக்கிரமிப்பு இனிவரும் காலங்களில் அமைதியாக பிரச்சாரங்கள் இன்றி சாதுரியமாக தொடரும் போலுள்ளது.

கண்காணிப்புக் குழு வெளியேற்றம் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் மீதான நெருக்குதல்கள் என்பன பக்கச்சார்பற்ற சாட்சியங்களை அப்பிரதேசங்களில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றுவதாக தான் இருக்கிறது. அத்தோடு மூதூரில் பிரென்சு தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலையால் ஏற்பட்ட சங்கடங்கள் போன்றவற்றையும் தவிர்த்துக் கொள்ள முனைகிறது.

சிறீலங்கா படைகளின் தளபதியோ பேச்சாளரோ "கிழக்கில் இருந்து புலிகளை வெளியேற்றுவோம்" போன்ற விமர்சனங்களை கவனத்தை பெறும் வகையில் எதையும் எதிர்காலத்தில் வெளிப்படையாக கூறுவதை தவிர்ப்பார்கள் போலுள்ளது. அவ்வாறு அவர்கள் கூறுவதை வைத்துத்தான் அவர்களிற்கு எதிரான பிரச்சாரங்கள் நடை பெறுகிறது என்பதை உணர்கிறார்கள். சிங்கள இனவாதிகளின் மிலேச்சத்தனமான நடத்தைகள் தான் அவர்களது பலவீனம். தமிழ்த் தேசிய எதிர்ப்பு இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அறிவுரையும் அதுவாகவே இருக்கும்.

ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற நாடுகளிற்குள் செல்லும் முன்னர் அமெரிக்க செய்த ஆரவரத்திற்கும் மூச்சுப்பேச்சு இன்றி எத்தியோப்பிய படைகளிற்கு பின்னால் நின்று இயங்கியபடி உள்ளே சென்ற அனுபவமும் அதைத்தான் சொல்லும் சிறீலங்காவிற்கு.

அவ்வப்போது ஆயிரத்தில் ஒரு தடவை ஆவது நடுநிலையாக ஒன்றைச் சொல்ல களத்தில் கண்காணிப்பு குழுவோ ஏனை அமைப்புகளோ இருக்கப் போவதில்லை எதிர்வரும் காலங்களில். இவ்வாறான அறிக்கைகளை ஆதாரமாக வைத்துத்தான் எமது பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இனிவரும் காலங்களில் சிறீலங்காவின் அடாவடித்தனங்கள் இன அழிப்புகளை ஆதாரங்களுடன் வெளி உலகிற்கு கொண்டுவரும் நிலையில் தமிழர் மாத்திரமே உள்ளனர். சிறீலங்காவின் மிலேச்சத்தனத்தில் நம்பியிருக்காது புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதுரியமாக பிரச்சாரங்கள் செய்ய வேண்டிய காலம் இது.

சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குமார் அடங்கிய குழுவால் சேப்படுத்தப்பட்டுள்ளது

நெதர்லாந்தை தளமாக கொண்டுள்ள சோஆ என்ற சர்வதேச சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குமார் அடங்கிய குழுவால் சேப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமில் சோஆ நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட பல உபகரணங்களை தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

இது குறித்து சிங்கள ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட குழு ஒன்று அந்த அலுவலகத்தை சேதப்படுத்தியுள்ளது

இந்த சம்பவத்தை அடுத்து அங்கு நேரில் சென்ற இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அந்த கும்பலின் அச்சுறுத்தல்களை அடுத்து அங்கியிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.