Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குதிரை எப்போவோ களவு போய்விட்டது; லயத்திறப்புப் பற்றி தத்துவார்த்த விவாதங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[14 - January - 2007] [Font Size - A - A - A]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கின் நிலைமை பற்றி ஒரு விவாதத்தை நடத்திற்று. அந்த விவாதத்தில் அந்த இணைவின் அவசியம் பற்றி சம்பந்தன் பேசினார். அன்றோ அடுத்த நாளோ இதே விடயம் பற்றிப் பேசிய ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பற்றிய சில நிபந்தனைகளை தமிழர்கள் ஏற்காத வரை தாங்கள் வடக்கு, கிழக்கு மீள் இணைப்புக்கு உதவப் போவதில்லையென அறிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இதுபற்றி பேசியிருப்பாரென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய தரவுகள் அதிகமில்லை.

பிரதானமாக வடபகுதியைக் கொண்ட முஸ்லிம்களைக் கொண்ட ஒரு இயக்கம் வடக்கு, கிழக்குப் பகுதியை தங்கள் தாயகப் பிரதேசமாக பிரகடனப்படுத்தி தமிழர்கள் தங்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளது. முஸ்லிம் தலைமைகளுக்குள்ளேயுள்ள பிரச்சினைகள் காரணமாக அவர்கள் தம்மையொரு சமூக இயக்கமாகவே பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு தமிழர்களும் முஸ்லிம்களும் வடக்கு, கிழக்குப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க அரசாங்கமோ வடக்கு, கிழக்கு இணைப்பினை சட்டரீதியாக இல்லாமல் ஆக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. ஆனந்தசங்கரியின் `ஹீனஸ்வர'க் குரலைத் தவிர அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகள் எதுவுமே பேசவில்லை.

ஆனால், வடக்கு, கிழக்கைப் பிரித்து இரண்டையும் தனித்தனி மாகாணங்களாக நிர்வகிப்பதற்கு வேண்டிய நடைமுறைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளமைக்காக அரசாங்கத்தைப் பாராட்டி சிங்கள புத்திஜீவிகள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளார்களென்று இலங்கை வானொலி கூறுகின்றது.

வட,கிழக்கு மீளிணைப்புப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாதென ஜே.வி.பி.யின் தலைமை கூறுகின்றது. மேலே குறிப்பிட்டனவற்றுள் தமிழ், முஸ்லிம் தலைமைகள் கூறுவன தான் தலைமையின் அவலத்தை மாத்திரமல்ல அவர்களது இயலாமைகளையும் காட்டுகின்றன.

இவை ஒரு புறமாக வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு விடுவிப்புப் பற்றிய நிர்வாக செயற்பாடுகளை அடுத்து நோக்குவோம். திருமலையில் இருந்த வட, கிழக்கு மாகாண சபையின் மூத்த உத்தியோகத்தர் இருவர் இரண்டு மாகாணங்களுக்கும் பிரதம செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இணைந்த வட, கிழக்கின் பிரதம செயலாளரை புதிதாக தோற்றுவிக்கப்படும் வடக்கு மாகாண பிரதம செயலாளராகவும், வடக்கு, கிழக்கு கல்விச் செயலாளராக இருந்தவர் கிழக்குக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணச் செயலாளர் வவுனியாவிலிருந்து தொழிற்படுவார். அவர் அங்கு புதிய நிர்வாகத்தையே கட்டியெழுப்ப வேண்டியவராகவே ஆகின்றார். நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அதற்கான திறன் நிறைய உண்டு.

வடக்கு மாகாண நிர்வாகம் பற்றிய மிக முக்கியமான அம்சம், அது வடக்கின் தென் கோடியான வவுனியாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகும். இத்தகைய விடயங்களுக்கான இடமாக கருதப்பட்டு வந்த யாழ்ப்பாணம் முற்றிலும் கைவிடப்பட்டு இப்பொழுது, வவுனியா வடமாகாணத்தின் தலைநகர மாக்கப்பட்டுள்ளது.

இதற்குள் ஒரு பாதுகாப்பு தந்திரோபாயமுண்டு. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களை வவுனியாவிலிருந்து கட்டுப்படுத்தலாம். ஏ-9 இல்லையென்றால் யாழ்ப்பாணத்தை கடல்மார்க்கமாகவே கவனித்துக் கொள்ளலாம். இவையாவற்றுக்கும் மேலாக வவுனியாவை கொழும்பிலிருந்து கட்டுப்படுத்துவது மிக மிகச் சுலபம்.

இது நாணயத்தின் ஒருபுறம் தான். இந்த நாணயத்தின் மறுபுறம் கிழக்கு மாகாணத்துக்கு செய்யப்பட்டுள்ள சத்திர சிகிச்சையாகும். திருமலை ஒரு தனி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்படப் போகின்றது. அதாவது, திருமலை மாவட்டத்தின் நிர்வாகம் நேரடியாக கொழும்பிலிருந்து நடத்தப்படும்.

ஆனால், அடுத்துவரும் சில வருடங்களுக்குள் கிழக்கு மாகாணம் கூட மட்டக்களப்பிலோ அம்பாறையிலோ இருந்தல்லாமல் திருமலையிலிருந்தே நடத்தப்படுமாம். அதற்கான கட்டிடம் கூட ஒதுக்கியாயிற்றாம். ஆனால், திருமலையைப் பொறுத்தவரையில் ஒரு உண்மையை மனத்திலிருத்திக் கொள்ள வேண்டும். சேருவில, சாகரபுர போன்றவை மூலமாகவும் கந்தளாயை பலப்படுத்துவதன் மூலமாகவும் அங்கு சிங்கள மக்களின் தொகை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 1980 களில் சிங்கள - முஸ்லிம் - தமிழ் சனத்தொகையில் ஒரு சம பலமிருந்தது. இப்பொழுது அது இல்லை. திருமலை நகர்ப்பிரதேசத்திலிருந்தும் அருகேயுள்ள கிராமங்களிலிருந்தும் (10 ஆம் வட்டாரம், சல்லி) தமிழ் மக்கள் மன்னார் வழியாகவும், நேராகவும் இந்தியா சென்றுள்ளனர். இன்றைய நிலையில் நிச்சயமாக உத்தியோகபூர்வ திருமலை மாவட்டத்தில் தமிழ்ப் பெரும்பான்மை இருக்காது.

திருமலை நகரம் கடற்படையின் ஆதிக்கத்தின் கீழ் வர இன்னும் சில காலங்களில் திருகோணமலையின் அலுவலகங்கள் கந்தளாய்க்கு மாற்றப்படும். கந்தளாயில் ஏற்கனவே, தனிச் சிங்கள கெடுபிடிகள் பலவுள்ளன. அங்குள்ள தமிழ்க் கிராமங்கள் கல்வி போன்ற விடயங்களில் கணிசமான புறக்கணிப்பை எதிர்நோக்குவதாகத் தெரிகின்றது.

முஸ்லிம்களுக்குக் கூட அங்கு பெருத்த வரவேற்பு இருப்பதாகக் கூறமுடியாது. அண்மையில் நடந்த மூதூர்த் தாக்குதலின் போது கந்தளாய்க்கு அகதிகளாக அனுப்பப்பெற்ற முஸ்லிம்களுக்கு சில நாட்கள் சென்றதும் வரவேற்பு பெரிதாக இருக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. கந்தளாய்ப் பகுதியின் சிங்களத் தன்மையை இழக்க அவர்கள் விரும்பவில்லையெனக் கேள்வி. இதனால், முஸ்லிம் அகதிகளை அவசர அவசரமாக மூதூருக்குக் கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம்கள் பலர் நோன்பு நேரத்தில் தமது சொந்த ஊரிலேயே இருக்க விரும்பினராம்.

திருமலை போனால் மீதியாகவுள்ளது மட்டக்களப்பும் அம்பாறையும் தான். அம்பாறைக் கச்சேரியின் அதிகாரம் கல்முனை வரை வருகின்றது. சம்மாந்துறை முதல் கல்முனை வரை முஸ்லிம் கிராமங்கள் தங்கள் மரபுகளையும் அடையாளங்களையும் பேணிக்கொண்டு வருகின்றனர். எனினும், அம்பாறைக் கச்சேரியில் தமிழ் தெரிந்த உயர் உத்தியோகத்தர்கள் எவருமில்லையென்பது சுனாமியின் போது தான் தெரியவந்தது. அதாவது, கச்சேரி நிர்வாகத்தில் தமிழ் கிடையாது. அதாவுல்லா அமைச்சருக்கு அது பிரச்சினையில்லாமலிருக்கலாம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.