Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டுமீறிய சுதந்திரத்தை ஜீரணிக்க முடியாததன் வெளிப்பாடுதான் பகிடிவதை!

Featured Replies

இன்னமும் தீர்வின்றித் தொட ரும் ஆபத்து மிகுந்த பிரச்சினையாக இருக்கிறது பகிடி வதை.

றுகுனு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உபாலி பன்னிலகே இது குறித்துக் கூறும் போது, பல்கலைக்கழகக் கட்டமைப்பையே சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பாக இந்த பகிடிவதையினை அனேக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவதாகக் கூறுகிறார்.

இலங்கையில் இதுவரை மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பகிடிவதையினால் உயிரிழந்த போதிலும் இன்னமும் இதற்கு நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கவில்லை. எனவே அச்சுறுத்தலான பகிடிவதையை நிறுத்துவதற்கான வழிவகைகள் இல்லையா? பகிடிவதை என்பது இன்று இந்நாட்டில் வேரூன்றியுள்ள வார்த்தையாகியிருக்கின்றது.

இந்த பகிடிவதை தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் பகிடி வதையினால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக நாட்டின் கவனம் அடிக்கடி இவ்விடயத்தில் செலுத்தப்படுவதையும் காணக் கூடியதாக உள்ளது.

பகிடிவதை அல்லது இலகு வார்த்தையில் கூறுவதானால் 'ராகிங்'(ராக்) என்பதை இன்று முழுப் பல்கலைக்கழக கட்டமைப்பிலும் காணக் கூடியதாக உள்ளதோடு, சித்திரவதை மற்றும் கொடுமைகள் காரணமாக இதற்கு எதிராக சட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. என்றாலும் அந்த சட்டங்களையும் மீறிக் கொண்டு சிலர் பகிடிவதையில் ஈடுபடுவது ஏன் என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது.

இன்று இது தொடர்பில் றுகுனு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உபாலி பன்னிலகே தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம்.

பகிடிவதை அல்லது நம் அனைவராலும் புரிந்த பாஷையில் சொல்வதானால் 'ராக் பண்ணுதல்' என்பது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது என அநேகமானோர் நினைத்துக் கொண்டிருந்தாலும் இதன் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பதுதான் நிஜமாகும்.

பகிடிவதையின் ஆரம்பம் தொடர்பில் பார்க்கும் போது இரண்டு முக்கிய விடயங்களைக் காண முடியும்.

7ம், 8ம் நூற்றாண்டுகளில் கிரீஸ் நாட்டின் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் போது அவர்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்தவர்களாகச் செயற்படுவதற்கும், குழுச் செயற்பாடுகளின் போது இணங்கி நடப்பதற்கும் இவ்வாறு பகிடிவதை வழங்கப்பட்டது .

அதே போன்று பிரித்தானிய அரச இராணுவக் குழுவுக்காக இணைத்துக் கொள்ளும் வைபவத்தின் போது இவ்வாறு புதியவர்களுக்கு சில சில இணங்கி நடக்கும் செயற்பாடுகளைச் செய்வதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு ஆரம்பமான இந்த பகிடிவதையானது முதலாவது மற்றும் இரண்டாவது உலக யுத்தத்தில் கலந்து கொண்ட இராணுவக் குழுக்கள் வரை வியாபித்திருந்தது.

உலக மகாயுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் கல்விச் செயற்பாடுகளுக்காகத் தங்களது கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற இராணுவ அதிகாரிகள் இராணுவத்தில் இருந்த இந்த உப கலாசார விடயமான பகிடி வதையினை தொடர்ந்தம் முன்னெடுத்துச் சென்றுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

ராகிங் பிறந்தது எவ்வாறு என்பதை ஆராய்வோம்.

மேற்கத்தேய நாடுகளில் ஆரம்பமான பகிடிவதையானது பின்னர் இந்தியாவின் ஊடாக இலங்கைக்கும் வந்துள்ளதைக் காண முடிகின்றது.

இதற்கு சிங்களத்தில் பகிடிவதை என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் இது பிரித்தானிய அரச இராணுவத்துடன் இணைந்து கொள்ளும் போது பயன்படுத்தப்பட்ட Royal Admission Gang என்ற வாசகத்தின் முதல் எழுத்துக்களான RAG (ராக்) என்று பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையினை சமூக அறிவியலோடு நோக்கும் போது எமக்குப் புரிவது என்னவென்றால் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் இளைஞர், யுவதிகளின் இளமை மற்றும் அதனுடன் இணைந்துள்ள சித்தாந்தங்கள் தவறான முறையில் கையாளப்படுகின்றது என்பதாகும்.

விஷேடமாக பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் அநேக மாணவர்களின் வயது 20 க்கு அண்மித்ததாகும். இந்த இளைஞர், யுவதிகள் அந்நேரம் வரையில் தமது பெற்றோரின் பாதுகாப்பினைப் பெற்றுக் கொண்டிருந்தவர்கள். பிரத்தியேக வகுப்புகள் அல்லது பாடசாலை எனப் போய் வரும் அனைத்து இடங்கள் தொடர்பிலும் பெற்றோர் அவதானத்துடன் இருப்பர்.

பாடசாலை_ - பல்கலைக்கழக இடைவெளி

அதே போன்று பாசடாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவ மாணவிகளுக்கு அப்பாடசாலையில் இருக்கும் சட்ட திட்டங்கள் மற்றும் பாடசாலை ஆரம்பிக்கப்படும் நேரங்கள் என்பனவும், பாடசாலைக்கு வராவிட்டால் அது பற்றி ஆராய்ந்து பார்த்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்படும். அத்துடன் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை, அதிபர் அலுவலகம் போன்ற இடங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். அதேபோன்று தமக்கு விரும்பிய வகையில் விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு பாடசாலைக்குச் செல்லவும் முடியாது.

ஆனால் பல்கலைக்கழகங்களில் இவை அனைத்தும் வேறுபடும். பல்கலைக்கழகங்களில் கதவுகள் காலை 7.30 மணிக்கு மூடப்பட மாட்டாது. மாணவத் தலைவர்கள் அல்லது மாணவத் தலைவிகள் வந்து தாமதித்து வந்த மாணவர்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பதில்லை. அங்கு முற்றிலும் மாறுபட்ட சூழலே இருக்கும். இவ்வாறான சூழலுக்கு ஒரேயடியாக ஒன்றிப் போவதற்கு புதிய மாணவர்களுக்கு சற்று சிரமமாகவே இருக்கும்.

உண்மையிலேயே பாடசாலையில் மற்றும் குடும்பச் சூழலிலும் கிடைக்க வேண்டியவைக்கும், பல்கலைக்கழகங்களினுள் கிடைக்க வேண்டியவைக்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கின்றது.

பாரிய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருந்த மாணவ மாணவிகளுக்கு ஒரேயடியாகக் கிடைக்கும் சுதந்திரத்தை தாங்கிக் கொள்ள முடியாது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழகங்களின் உப கலாசாரத்தினுள் காலாகாலமாக இடம்பெற்று வரும் பகிடிவதையானது புதிய மாணவர்களின் அந்த இடைவெளியை நிரப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.

இதில் இன்றைய நிலையில் பாரிய குழப்பங்கள் தோன்றியிருப்பதைக் காண முடிகின்றது.

இதற்குத் தகுதியான சூழல் ஒன்றும் பல்கலைக்கழகத்தினுள்ளேயே தோன்றியிருக்கின்றது.

பகிடிவதைகள் காரணமாக சில மாணவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் சில மாணவ மாணவிகளுக்கு பல்கலைக்கழகக் கல்வியே வேண்டாம் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. 1997ம் ஆண்டு வரையில் இந்த பகிடிவதையினால் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். இதில் 1997ம் ஆண்டில் ரூபா ரத்னசீலி என்ற மாணவி மிகவும் கவலையான விதத்தில் உயிரிழந்தார்.

இவ்வாறான நிலைகள் ஏற்பட்டிருக்கின்ற போதிலும் பகிடிவதைகள் இவ்வாறே ஏன் தொடர்ந்து செல்கின்றது என்பது இன்று சமூகத்தின் முன் இருக்கும் வினாவாகும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களோ அல்லது ஊடகங்களோ இவ்விடயம் தொடர்பில் எவ்விதத்திலும் நல்ல எண்ணத்துடன் பார்ப்பதில்லை. அதே போன்று சட்ட ரீதியாகவும் பகிடிவதை தடை செய்யப்பட்டிருக்கின்றது. விஷேடமாக 1998ம் ஆண்டிலிருந்து பகிடிவதை எதிர்ப்புச் சட்டம் நடைமுறையிலுள்ளது. அதேபோன்று பின்னரான காலப் பகுதியில் பாலியல் ரீதியான வன்முறை பகிடிவதை தொடர்பிலான சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு பிரச்சினை என்னவென்றால் இவை அனைத்திற்கும் மத்தியில் இன்னமும் பகிடிவதை ஏன் தொடர்கின்றது என்பதாகும்.

தற்போதைய நிலையினைப் பார்க்கின்ற போது மாணவர் என்ற தகுதி இல்லாமல் போகின்றளவுக்கு இந்த நிலை எல்லை மீறிச் சென்றிருக்கின்றது. அதே போன்று பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் என்று செல்லுமளவுக்கு மாணவர்களின் செயற்பாடுகள் எல்லை மீறிச் சென்றிருக்கின்றன.

இவை அனைத்திற்கும் இந்த பகிடிவதை தாக்கம் செலுத்தியிருக்கின்றது என்பதைக் காண முடிகின்றது.

பல்கலைக்கழக போராட்டங்களுக்காக மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் இந்த பகிடிவதை ஒரு ஆயுதமாக ஆகியிருக்கின்றது. இது கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உண்மை நிலை அதுவேயாகும்.

பாதணிகள் இன்றி நடமாடுவதைக் கூட தாங்கிக் கொள்வதற்கான சக்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கும், எந்த ஒரு இடத்திற்குச் சென்று உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் பகிடிவதை களத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இது பார்ப்பதற்கு தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற முறையாகக் காணப்பட்டாலும் அது தவறான முறையிலேயே பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.

தன்னம்பிக்கை ஊடான தீர்வுகள்கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதிலும் கூட பகிடிவதைக்குத் தீர்வுகள் கிடைக்கவில்லை.

இதன் போது நாம் மேற்கத்தேய கலாசாரத்தை விமர்சித்தாலும் அதிலும் நாம் கற்றுக் கொள்வதற்கான விடயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

மேற்கத்தேய மாணவ மாணவியர் தத்தமது காரியங்களைத் தனியாகவே செய்து கொள்வதற்கு சிறு காலத்திலிருந்தே பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இதனால் இளைஞர் பருவத்தில் அவர்களுக்கு தமது செயற்பாடுகள் தொடர்பில் நல்லதொரு தெளிவு ஏற்படும்.

எனினும் எமது கலாசாரத்தினுள் பிள்ளைகள் எல்லா சந்தர்ப்பத்திலும் தமது பெற்றோரின் பாதுகாப்பில் இருப்பதால் அதற்கு பின்னர் ஏற்படும் இடைவெளிக்கு பல்கலைக்கழகங்களின் பகிடிவதைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இந்த மாணவர்கள் சில வேளைகளில் போராட்டங்களில் அல்லது வேறு அரசியல் குழுக்களின் கைப்பொம்மைகளாக ஆகுவதற்கான சந்தர்ப்பங்களையும் காண முடியும்.

இதற்கு சிறந்த உதாரணமாக பிக்கட்டிங், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் அதிகமானோர் முதல் வருட மாணவர்கள் என்பதை இனங்காண முடியும். இதில் அதிக மாணவர்கள் அவர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்கள் எதற்காக இடம்பெறுகின்றது என்பதைக் கூட அறிந்திருப்பதில்லை. சிரேஷ்ட மாணவர்களின் துண்டுதலின் காரணமாகவே இம்மாணவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.

எனவே பகிடிவதையினை முன்னெடுத்துச் செல்வதற்கான நோக்கங்கள் ஒவ்வொரு காலப் பகுதியிலும் ஒவ்வொரு மாணவ பரம்பரையினருக்கும் ஏற்படுவதால் இந்நிலையினை அற்பமாக எண்ணிவிடாது இதற்காக நீண்ட காலத் தீர்வு ஒன்றுக்குச் செல்வதற்கான காலம் தற்போது வந்திருக்கின்றது என்பதைக் கூற வேண்டும்.

http://www.tamilwin.com/articles/01/111384

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.