Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம்

Featured Replies

'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம்

veera3.jpg

க்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி. ' வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் வீரலட்சுமி.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில், ' மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என அறிவித்திருக்கிறார். ’என்ன நடந்தது?' என்று விசாரித்தோம் வீரலட்சுமியிடம்.

"நிறைய காரணங்கள் இருக்குண்ணே...அவருடைய கொள்கை, செயல்பாடு என இரண்டில் இருந்தும் நாங்கள் முற்றிலும் மாறுபட்டதால் விலகுகிறோம். தமிழ்நாடு அரசியல் களத்தில் தி.மு.கவா? அ.தி.மு.கவா என்றால், 'முதலில் அ.தி.மு.கவை வீழ்த்த வேண்டும்' என்றுதான் சொல்வோம். ஆனால், அவருடைய செயல்பாடு தி.மு.கவை வீழ்த்துவதாக அமைந்துவிட்டது. அதை அவரே ஒப்புக் கொண்டார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவேதான், கூட்டணியில் இருந்து விலகுகிறோம்". 

இதைத் தெரிந்து கொள்ள ஒரு மாதம் தேவைப்பட்டதா?

"ஆமாம். அவருடைய கொள்கை முரண்பாட்டைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன. மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராகத்தான் நானும் இருந்தேன். ஏதோ ஒரு கட்சியின் மாவட்ட, மாநில செயலாளராக நான் இல்லை. ஒரு அமைப்பை வழிநடத்தக் கூடிய தலைமைப் பொறுப்பில் உள்ள பொண்ணு நான். 'வடமாவட்டத்தில் உள்ள 120 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்தால், எளிதில் வெற்றி பெறுவோம்' என வைகோ அய்யாவிடம் சொன்னேன். ஆனால், அவர் என்னுடைய பேச்சையும் கேட்கவில்லை. எந்த மேடையிலும் என்னை முன்னிலைப்படுத்தவும் விரும்பவில்லை. அப்படி அறிமுகப்படுத்தினால் அவருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என யோசித்திருக்கலாம். அவருடைய செயல்பாட்டை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கொள்கையோடு உடன்பாடு உள்ள கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம். அதன்பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். இதற்காக, அகில இந்திய தமிழர் முன்னேற்றக் கட்சி என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். அதன் நிறுவனத் தலைவராக நான் செயல்படுவேன்!"

40 தொகுதிகளில் எப்படி போட்டியிடுவீர்கள்?

"எங்கக் கட்சியில நிறைய பேர் இருக்காங்கண்ணே...கண்டிப்பாக எங்களால போட்டியிட முடியும். சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களில் போட்டியிடுவதற்காக ஆட்களைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். வைகோ அய்யா என்னிடம், 'நீங்கள் மட்டும் நில்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றதால்தான் பல்லாவரத்தில் போட்டியிட்டேன். தவிர, நாங்கள் தனித்துப் போட்டியிட்டு மக்கள் நலக் கூட்டணிக்கு வரக் கூடிய ஓட்டுக்கள் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகக் கூட்டணியில் இணைந்தோம். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், 'நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பலத்தைக் காட்ட வேண்டும்' என பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வந்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று போட்டியிட இருக்கிறோம்!"

தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பீர்கள்?

"பல்லாவரம் தொகுதியில் தேர்தல் செலவுக்காக 20 லட்ச ரூபாயை வைகோ அய்யா கொடுத்தார். அதையும் அவர் கட்சியின் மாவட்ட செயலாளரிடம் கொடுத்துவிட்டேன். எவ்வளவு ரூபாயைச்  செலவழித்தார்கள் என்றுகூட தெரியாது. என் பங்குக்கு 7 லட்ச ரூபாயைச் செலவு செய்தேன். அதனால், எம்.பி தேர்தலுக்கு தேவையான நிதியை சேகரித்து வருகிறோம்!"

உங்கள் விலகல் முடிவை வைகோவிடம் தெரிவித்துவிட்டீர்களா?

 

"இன்னும் சொல்லவில்லை. முகநூலில் போட்டிருக்கிறேன். விலகியதால் எங்களுக்கு எந்த வேதனையும் இல்லை. அவர் மீது எனக்குத் துளியளவும் கோபம் இல்லை. தமிழ்நாட்டின் முதிர்ந்த அரசியல்வாதி அவர். ஆனால், எங்களுடைய பயணம் வேறு. அவருடைய பயணம் வேறு. தமிழர் நலனுக்கான என்னுடைய போராட்டம் என்றுமே வீரியமாக இருக்கும்!"

http://www.vikatan.com/news/tamilnadu/66316-now-only-we-realize-on-vaiko-tactics-veeralakshmi.art

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டக் கீளீன் பண்ண வந்தமா, போனமா எண்டில்லாம, அங்க என்னம்மா, சத்தம் ? :grin:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.