Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் மைத்திரி காலம் கடத்துவது நல்லதல்ல..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் முற்றிலுமாக மட்டுமல்ல, சரி பாதியளவு கூட இனவாதத்தை இல்லாது செய்ய முடியாது என்பதற்கு அண்மைய நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கையில் இனவாதம் இன்று நேற்று புகுத்தப்பட்ட ஒன்றல்ல. அது இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சத்தின் அடிப்படை கோட்பாடே இனவாதம் தான்.

மஹாநாமதேரர் தொடங்கி வைத்த இந்த இனவாதம் இன்று பாடசாலைகள் தொட்டு பல்கலைக்கழகங்கள் வரை வியாபித்து நிற்கின்றது.

கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும், சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கைகலப்பை பலரும், பலவிதமாக பேசியிருக்கலாம். பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டதும் உண்மை.

சிலர் மாணவர்களின் பிரச்சினையில் அரசியல் கலக்ககூடாது என்றும். இன்னொரு தரப்பினர் இது இனவாதம் அல்ல, மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற சிறு முறுகல் நிலை. அதுவாகவே சரியாகிவிடும் என்கின்றார்கள்.

இன்னும் சிலர் அதற்கு ஒருபடி மேல் சென்று தமிழ் மாணவர்கள் நடந்து கொண்ட விதம் தவறு என்றும் வாதிட்டார்கள். ஆனால் நாம் இப்பொழுது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் கருப்பொருள் தமிழ் சிங்கள மாணவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியதல்ல.

அரசியல் பற்றியது. நல்லாட்சி பற்றியது. மைத்திரி ரணில் பற்றியது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன.

இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையங்கள் தொடர்பாக இதுவரை சரியான பதில் கொடுத்ததாக தெரியவில்லை.

எதிர்க் கட்சித் தலைவராகவும், தமிழ் மக்களின் இன்றைய தலைவராகவும் சொல்லப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் 2016ம் ஆண்டு அரசியல் தீர்வினை எட்ட முடியும் என்று அவர் மட்டுமே சொல்லியிருக்கின்றார். ஆனால் அதற்கான முன் ஆயந்தங்கள் அல்லது சமிக்ஞை தென்படுவதாக இல்லை.

போர் முடிந்த பின்னர், இலங்கை அரசாங்கம் மகிந்த தரப்பாகட்டும், ஏன் மைத்திரி ரணில் தரப்பாகட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் மனவடுக்களை ஆற்றுப்படுத்த ஏதாவது காரியங்களை செய்திருப்பார்களாயின் கடந்த வாரம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் போன்று எதுவும் ஏற்பட்டிருக்காது.

அதற்கு மாறாக, மகிந்த ராஜபக்ச முதல், மைத்திரி, ரணில் வரைக்கும் பௌத்தத்தையும் சிங்களத்தையும் நாடு முழுவதிலும் கொண்டு செல்வதிலேயே குறியாக இருக்கின்றார்கள். அவர்கள் நல்லிணக்கம் என்பதை பௌத்தத்தையும், சிங்களத்தையும் முதன்மைப்படுத்துவதில் தங்கியிருக்கின்றது என நினைக்கிறார்கள்.

ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பினை அவர்கள் நினைப்பதில்லை. ஆங்காங்கே தன்னுடைய பேச்சுக்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் நியாயம் வழங்கப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரி சொன்னாலும் அது உதட்டோரத்தோடு நின்றுவிடுகின்றது.

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அல்லது அது பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு ஜனாதிபதி அச்சம் கொள்வது வேதனையானது தான். மாறாக சிங்கள மக்களை திருப்திப்படுத்தி வைப்பதில் குறியாக இருக்கின்றார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு, தமிழ் மக்களின் மனங்களில் மகிந்த ஏற்படுத்திய வடுக்களை களைய நல்லாட்சி அரசாங்கம் எவையெல்லாம் செய்திருக்கின்றது என்று பட்டியல் போட்டால் தெரியும் நல்லிணக்க முயற்சியின் சீத்துவம்.

வடக்கில் போர் முடிந்த கையோடு, மகிந்த ராஜபக்ச மிக வேகமாக விகாரைகளைக் கட்டியெழுப்பினார். சிங்கள மக்களை அதி(வி)வேகமாக குடியேற்றினார். ஆனால் மைத்திரி நாட்டின் தலைவரான பின்னரும் இந்த முயற்சிகள் தொடர்கின்றன.

தவிர, போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச அங்கீகாரத்துடன் நடைபெறும் என எதிர்பார்த்து கொஞ்சமேனும் ஆறுதலோடு இருந்த தமிழ் மக்களுக்கு இன்னொரு ஏக்கத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது மைத்திரி ரணில் அரசு. சர்வதேச விசாரணை உள்நாட்டு விசாரணையாக மாற்றம் பெற்றது.

அதுமட்டுமல்லாது, உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் கலந்து கொள்வார்கள் என்றொரு எதிர்ப்பார்ப்பு தமிழ் மக்களிடத்தில் இருக்க, தமிழ் மக்களின் பங்களிப்போடு தலைவராக்கப்பட்ட நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

ஆக, போரில் ஒரு தரப்பு தோற்று ஒடுக்கப்பட்டு, நீதியற்றுக்கிடக்கையில், அத்தரப்பை அரவணைத்து, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதை அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மீண்டும் நாட்டில் போருக்கு இடமளிக்க முடியாது, இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தவிர்க்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டிருக்குமாயின் தென்னாபிரிக்க அரசாங்கம் செயற்படுத்திய வழிமுறைகளையாவது இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதுவும் செயற்படுத்தாமல், மகிந்த அரசாங்கத்தில் நடந்தவற்றைப்போன்றே, நல்லாட்சி அரசாங்கத்திலும் நிகழுமாயின் தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் நிகழாது. ஏன் சிங்கள மக்களின் மனங்களில் இருக்கும் குரோதம் கூட தணியாது.

ஆக, என்ன தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தலைவருக்கு கொடுத்தாலும், மத்திய வங்கியின் ஆளுநரை தமிழராக நியமித்தாலும், தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்ற முடியாது.

இதனை கருத்தில் கொண்டும், அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவத்தைப் போன்று மீண்டுமொரு சிக்கல் நிலை உருவாவதை தடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி சரியான தீர்வினை விரைந்து எடுத்தாக வேண்டும்.

இல்லையேல், பிரிந்து கிடக்கும் இரு இனங்களும் என்றைக்கும் ஒன்றாக வாய்ப்பில்லாமல் போய்விடும். நிலங்களை விடுவிக்கின்றோம், மீள்குடியேற்றுகின்றோம் என்றெல்லாம் சர்வதேசத்திற்கு படம் காட்டினாலும் அந்தப் படம் தமிழ் மக்களிடத்தில் எப்பொழுதுமே செல்லாக்காசு தான்.

எதுவாயினும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்த ஐந்தாண்டு காலப்பகுதில் மைத்திரி காலம் கடுத்துவாராயின், இலங்கையின் இனச்சிக்கல்களை யாராலும் தீர்த்து வைக்கமுடியாமல் போகும்.

மாறாக பிரச்சினைகளை மூடிமறைத்து, மெழுகி எதுவும் இல்லை என்று காட்ட முனைந்தால் என்றோ ஒரு நாள் அது மீண்டும் வெளிக்கிழம்பும். அப்பொழுது இந்த நாட்டிற்கு அது நல்லதல்ல.

http://www.tamilwin.com/articles/01/111808

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.