Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் நினைத்தால் அரசாங்கத்துடன் இணையும் 20 எம்.பி. க்களையும் இன்றே தடுத்து நிறுத்தலாம்: எஸ்.பி. திஸாநாயக்க

Featured Replies

ரணில் நினைத்தால் அரசாங்கத்துடன் இணையும் 20 எம்.பி. க்களையும் இன்றே தடுத்து நிறுத்தலாம்: எஸ்.பி. திஸாநாயக்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நினைத்தால் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ள 20 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இன்றே தடுத்து நிறுத்திவிடலாம். ஆனால் ரணில் தனது தலைமைப்பதவியை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றார் என்று ஐ.தே.க.வின் முன்னாள் தேசிய அமைப்புச்செயலாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 18 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 20 பாராளுமன்றஉறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வது உறுதியாகிவிட்டது. நேற்று முன்தினம் மாலை

www.virakesari.lk

  • தொடங்கியவர்

நிபந்தனைகளுடன் அரசாங்கத்தில் இணைகிறது முஸ்லிம் காங்கிரஸ்.

ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் நிபந்தனையுடன் இணைவது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்பீடச் சந்திப்பின்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

சுமார் ஆறு மணித்தியாலம் நீடித்த இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையா விட்டாலும், தான் இணையப்போவதாக பகிரங்கமாக அறிவித்த பாயிஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டார்.

இங்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைவதற்கு முன்னர் 4 பிரதான விடயங்களை உள்ளடக்கிய நிபந்தனைகளை முன்வைத்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதெனவும், இது தொடர்பாக அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு இணைந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றால் அதில் முஸ்லிம்களுக்குத் தனித்தரப்பு, உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம், முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட இடங்களில் அரசியல் அதிகாரம், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வகிக்கும் கல்முனையை மையமாகக் கொண்டு தனிக் கரையோர மாவட்டம் உட்பட முஸ்லிம் காங்கிரசின் நிபந்தனைகள் குறித்து அரசுடன் பேசுவது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இப்பேச்சுவார்தையில் எட்டப்படும் முடிவுகளை அங்கீகரிப்பதற்கான இறதி அதிகாரம் கட்சியின் தலைவர் என்ற வகையில் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளையில், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் அரசுடன் இணைவதற்கு முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் அது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை விவகாரங்கள் குறித்து பேசி, முடிவெடுப்பதற்காக அரச தலைவர் மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

-Puthinam-

FOX party will destroy by their member like like like

want to more happen like this

பொறிக்குள்ள சிக்க வைக்க ரணில் எண்ணியவர் கருநாவை பிரித்து ஒரு கேணலை இன்று கோணலாக்கியவர்

ஆனால் இன்று தமிழர் தலைவன் சொன்ன ஒரு மறைமுகச்சொல்லால் ஜனாதிபதவியை இழந்தார் இன்று கட்சியையே இழந்து காலிமுகத்திடலில் புத்தி பேதலித்து நிக்கிறார்.ஜனாதிபதி ஆகியிருந்தால் UNPக்கு இந்த நிலை வந்திருக்குமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.