Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களின் வாகனங்கள் முகாமுக்கு வரவழைத்து சோதனை

Featured Replies

 
இலங்கை தமிழர்களின் வாகனங்கள் முகாமுக்கு வரவழைத்து சோதனை
 

article_1469438862-33.jpgதமிழகத்தின் தாரமங்கல பிரதேசத்தில் நடக்கும் தங்கநகை பறிப்பு சம்பவங்களில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகத்தில், அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களை, தாரமங்கலம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தனர்.

தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களில், பத்துக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் தங்கநகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

அதில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம், பொலிஸாருக்க ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திக்காட்டானூர் ஆகிய முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களில், மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளவர்களை, வாகனங்களுடன் பவளத்தானூர் முகாமுக்கு வரவழைத்து, ஆய்வு செய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் வாகனங்களை ஆய்வு செய்ததில், சிலர் மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரம் வைத்துள்ளதும், ஒரு வாகனம் கூட, இலங்கை தமிழர் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையை விட்டு தமிழகத்துக்கு வந்து, 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு சார்பில், பல்வேறு உதவிகள் செய்தாலும், புதிய வாகனம் வாங்கும்போது, அதை எங்கள் பெயரில் பதிவு செய்ய, அரசு தடை விதித்துள்ளது.

அதனால், நாங்கள் இலங்கை தமிழர் அல்லாத வேறொருவர் பெயரில், பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாகனங்களில் வெளியூர் செல்லும்போது, சோதனையில் சிக்கி, அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள், நாங்கள் வாங்கும் வாகனங்களை, எங்கள் பெயரிலேயே பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/177890/இலங-க-தம-ழர-கள-ன-வ-கனங-கள-ம-க-ம-க-க-வரவழ-த-த-ச-தன-#sthash.R8MqhyRu.dpuf

தாய் மண்ணுக்கு திரும்புவது தான் இவர்களின் வாழ்வில் நிரந்தர விடிவுக்கு வழி வகுக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.