Jump to content

அதிநவீன மோதிரம் - அன்பானவர்களின் இதயத் துடிப்பை உணர வைக்கும் அதிசயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

laterst-rings-170816-380-seithy.jpg

உலகிலேயே அதிநவீன மோதிரம் Touch HB Ring. இது காதலர்களுக்கும் தம்பதியர்களுக்குமான மோதிரம். இதை அணிந்து கொண்டால் உங்கள் அன்புக் குரியவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும். போன், ஸ்கைப் என்று எத்தனையோ கருவிகள் உறவுகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடுகின்றன. ஆனால் அவற்றைவிட இந்த மோதிரம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கிறது.

   

பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் கணவனும் மனைவியும் தனித்தனியாக இருந்தாலும் மோதிரத்தின் மூலம் அவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும்! அருகில் இருப்பது போலவே தோன்றும். ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, கணவன் அல்லது மனைவியின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பிறகு மோதிரத்தை அழுத்தினால் இதயத் துடிப்பைக் கேட்கலாம்.

இந்தச் சின்னஞ்சிறு மோதிரத்துக்குள் பேட்டரி, சார்ஜிங் கனெக்டர், மதர்போர்ட், சென்சார்கள் என்று ஏராளமான விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தண்ணீர் புகாதவாறு அமைக்கப்பட்டிருக்கிறது. 2 தங்க மோதிரங்கள் 2 லட்சம் ரூபாய். துருப்பிடிக்காத உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும் 2 மோதிரங்கள் 40 ஆயிரம் ரூபாய். மோதிரங்களின் தரத்துக்கு ஏற்ப விலையும் இருக்கும். ஆப்பிள் கைக்கடிகாரங்களில் பதிவு செய்யப்பட்ட இதயத் துடிப்புகளைத்தான் கேட்க முடியும். ஆனால் டச் மோதிரங்களில் நேரடியாகவே இதயத் துடிப்புகளை அறிய முடியும்.

அன்பானவர்களின் இதயத் துடிப்பை உணர வைக்கும் மோதிரம்! ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறது ஒரு குடும்பம். காரோலா க்ரிஸ்பாச்சும் ஆண்ட்ரூவும் இரு மகள்கள், 4 பேரக் குழந்தைகளுடன் 1,400 மைல்கள் பயணம் செய்து, ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். “ஜெர்மனி எல்லோரும் நினைப்பதுபோல அமைதியான நாடு இல்லை. அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்ததில் இருந்து ஜெர்மனி மாறிவிட்டது. அங்கே குழந்தைகள் வளரக்கூடிய இனிமையான சூழல் இல்லை.

திடீரென்று கிளம்பியதால் சுற்றுலா விசாவில்தான் ரஷ்யா வந்தோம். இங்கே வந்த பிறகு அரசியல் அடைக்கலம் கோரியிருக்கிறோம். இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ரஷ்ய மக்கள் எங்களிடம் காட்டும் அன்புக்கும் உதவிக்கும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. இவ்வளவுக்கும் எங்களுக்கு இன்னும் ரஷ்ய மொழி நன்றாக வரவில்லை. ஒரு கடை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.

ஜெர்மனியை விட எல்லா விதங்களிலும் ரஷ்யா சிறந்த நாடாக இருக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பாதுகாப்பான நாடு. சொந்த நாட்டைவிட இங்கேதான் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்கிறோம். எங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டோம் என்பதைத் தவிர எங்களுக்கு வேறு வருத்தங்கள் இல்லை. 8 மாதங்களாக ரஷ்யாவில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அரசியல் அடைக்கலம் கிடைத்துவிட்டால் இன்னும் நிறைவாக இருப்போம்’’ என்கிறார் ஆண்ட்ரூ. உலக நாடுகளில் ஜெர்மனிக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஆண்ட்ரூ சொல்லும் காரணத்தை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அரசியல் அடைக்கலம் இன்னும் வழங்கவில்லை. இந்தக் குடும்பத்தை வெளியேறவும் சொல்லவில்லை.

http://www.seithy.com/breifNews.php?newsID=163719&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு....  ஒரு தலைப்பில்,  இரண்டு வெவ்வேறு செய்திகள் இணைக்கப் பட்டுள்ளது.

//அன்பானவர்களின் இதயத் துடிப்பை உணர வைக்கும் மோதிரம்! ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறது ஒரு குடும்பம்.//

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
    • வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது! யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1400407
    • அஸ்வத்துடன் ஒரு ஆறுதல் ......!   👍  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.