Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒன்று திரட்டி வடமாகாணத்தில் சங்கம்!

Featured Replies

வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒன்று திரட்டி வடமாகாணத்தில் சங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவத்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக வடமாகாண சபையின் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான என்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆகியோர்கள் தலைமையில் நடாத்தப்பட்ட விசேட கூட்டம் இன்று (24) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளின் நன்மை கருதி இந்தச் சங்கத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், குறித்த சங்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இன்றைய தினம் மூன்றுபேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த விசேட கூட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னோடியாக வடமாகாண விவசாய,கமநலசேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகிய தாம் மூவரும் இணைந்து மூன்று பேர் கொண்ட குழுவொன்றை உருவாக்கியுள்ளோம்.

அண்மைக் காலமாகச் சில மனித உரிமை அமைப்புகள்,அரசார்பற்ற நிறுவனங்களும் கூட எங்களுடைய காணாமல் போனவர்களின் உறவினர்களின் பலவீனத்தினைப் பயன்படுத்தி, சில சந்திப்புக்களை ஏற்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள்.

அவர்கள் எமது மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

போருக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆராயும் போது சிங்கள மனித உரிமை அமைப்புக் கள்,அரசசார்பற்ற நிறுவனங்கள் பல ஆதரவுகளைத் தந்துள்ளனர்.

இது ஆட்சி மாற்றத்திற்கான ஆதவே தவிர எமக்கான தீர்வுக்கான ஆதரவு அல்ல எனவும் குறிப்பிடார்.

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் மிகத் தெளிவானதொரு தீர்வினைப் பெற்றுத்தர எல்லாநாடுகளுடனும் பேசிவருகின்றார்.

மக்களிடமிருந்தும் ஒரு தலைமைத்துவத்தினைக் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளுக்காகச் சங்கம் ஒன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்தச் சங்கத்தில் இணைந்து கொள்ளும் மக்கள் இந்தச் சங்கத்துக்கான நிர்வாகத்தைத் தெரிவு செய்வார்கள். பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக வடமாகாணத்தின் காணமல் போனவர்களின் உறவுகளுக்காகச் சங்கம்

அமைக்கப்பட்டபின்னர் கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்குள்ள மாகாணசபையின் அமைச்சர்கள்,மாகாண சபையின் உறுப்பினர்களோடு இணைந்து இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வட,கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவுக்களுக்கான சம்மேளனம் ஒன்றை அமைக்கவிருக்கின்றோம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/115257

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.