Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையிலிருந்து இடம்பெயரும் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் கெடுபிடி - மக்கள் விசனம்.

Featured Replies

வாகரையிலிருந்து இடம்பெயரும் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் கெடுபிடி - மக்கள் விசனம்.

வாகரை நகரப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த சோதனைக் கெடுபிடிக்களுக்கு பின்னரே பயணத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் அகதிகள் பெரும் இடைஞ்சல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகிவருகின்றனர்.

அகதிகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளும் நகருக்குள் வரக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டாலுங்கூட, இது ஏற்கனவே நொந்து போனவர்களை மேலும் வேதனைக்கு ஆளாக்குவதாக மக்கள் கவலை தெரிவித்ததாக சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, படையினர் இடம்பெயரும் மக்களிடம் நடத்திய உடற்சோதனை உட்பட சோதனைகளின்போது விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 11 பேர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரி ஒரு வரை மேற்கோள்காட்டி தகவல் வெளியி டப்பட்டுள்ளது.

ஐ.நா. கவலை

இதேவேளை, வாகரையில் இருந்து இதுவரை வெளியேறாது இருக்கும் மக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதராலயம் (யு.என்.எச். சி.ஆர்) அக்கறையையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.

வாகரைப் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறாமல் இன்னமும் சுமார் 9,500 பேர் இருக்கக்கூடும் என்று ஜெனீவாவில் உள்ள யு.என்.எச்.சி.ஆரின் பிரதிநிதி லிஸா செலின் "வொய்ஸ் ஒவ் அமெரிக்கா' செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.

இடம்பெயரும் அகதிகளின் சரியான எண்ணிக்கை அவர்கள் தஞ்சம் அடைந்துள்ள இடங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் என்பன குறித்து சரியான மதிப்பீடு ஒன்றைச் செய்வதற்காக எமது அலுவலர்கள் இப்போது வெளிக்களப் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட் டனர்.

இதுவரை வாகரையில் இருந்து இடம் பெயராமல் சிக்குண்டு போயிருக்கக் கூடிய பொதுமக்கள் குறித்தே நாம் மிகவும் கவலை கொண்டுள்ளோம். என்று யு.என்.எச்.சி.ஆரின் ஜெனீவா தலைமையக அதிகாரிகளில் மற்றொருவரான ரோன் றேய்மண்ட் தெரிவித்தார்.

பெரிய இடப்பெயர்வு

வாகரையில் ஒரு மாதகால இடைவெளியில் நடைபெற்ற இரண்டாவது பெரிய இடப்பெயர்வாகும்.

கடந்த டிசெம்பர் மாத இறுதியில் சுமார் 20,000 பொதுமக்கள் பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள் மற்றும் அடர்ந்த காடுகள் ஊடாக இடம்பெயர்ந்திருந்தனர்.

சண்டைகள் நடைபெறும் வேளைகளில் அவற்றில் மக்கள் அகப்பட்டு, பாதிப்பில்லாது வெளியேறுவது கஷ்டமாகி விடுவதுண்டு. அதனாலேயே மோதல் பிரதேசங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சண்டையிடும் தரப்புகளிடம் நாம் கேட்பதுண்டு என்றும் றேய்மண்ட் கூறினார்.

-Sankathi-

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கும்பல் ஆட்திரட்டலை உடனடியாகவே ஆரம்பித்துள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் கடற்படையும் கட்டியெழுப்புவார்கள் போலுள்ளது (கடற்கரை பிரதேசம் கிடைத்துள்ளதால்). சிங்கள அரசு எவ்வளவு தூரம் வளரவிடுகின்றது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.