Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராதனை பல்கலை. தமிழ்,முஸ்லிம் முதலாமாண்டு மாணவர்கள் அச்சத்தால் வெளியேற்றம்

Featured Replies

பேராதனை பல்கலை. தமிழ்,முஸ்லிம் முதலாமாண்டு மாணவர்கள் அச்சத்தால் வெளியேற்றம்
 
 
பேராதனை பல்கலை.   தமிழ்,முஸ்லிம் முதலாமாண்டு மாணவர்கள் அச்சத்தால் வெளியேற்றம்
பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட சிரேஷ்ட மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து  அந்த பீடத்தின் முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகைதராத காரணத்தால் அந்த பீடத்தின் முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
 
இந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர சந்திப்பில் தமிழ், முஸ்லிம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என துணைவேந்தர் கூறியிருந்த நிலையில், அச்சம் காரணமாக தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
பல்கலைக்கழக நிகழ்வொன்றுக்காக குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில்  மோட்டார் சைக்கிளில் வந்த 20 பேர் கொண்ட    சிரேஷ்ட மாணவ குழுவினரால் கனிஷ்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
 
தலைக்கவசம், தடிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த நான்கு மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
 
ஏனைய மாணவர்களுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்த தாக்குதல் குறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனனர்.
 
கனிஷ்ட தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்ற போதிலும் அது குறித்த தகவல்கள் பெரிதாக வெளியில் வெளிவருவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.
 
இதேவேளை முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் திரும்பும் வரை முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
 
நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் அனைத்து வருட மாணவர்களுக்கான சந்திப்பில் பீடாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
 
இதனிடையே பீடத்தின் சிரேஷ்ட தமிழ் முஸ்லிம் மாணவர்களே வலுக்கட்டாயமாக முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லிம் மாணவர்களை வீடு செல்ல வைத்துள்ளதாக சிரேஷ்ட சிங்கள மாணவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/16664

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.