Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ச சந்திக்கவிருந்த தேரர் மீது தாக்குதல்

Featured Replies

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வழிபாட்டிற்காக செல்லவிருந்த மலேசிய விகாரை ஒன்றின் தேரர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மஹிந்த நாளைய தினம் செல்வதற்கு திட்டமிட்டமிட்டிருந்த விகாரை ஒன்றின் தேரர் மீது இன்றைய தினம் சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இச்சுற்றுப்பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையும் மஹிந்தவுடன் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியினை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை இந்த தாக்குதல் குறித்து ப்ரீ மலேசியா டுடே இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மலேசிய விஜயத்தை முன்னிட்டு அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்த மாநாடு நடைபெற்ற புத்ரா உலக வர்த்தக மையத்துக்கு முன்னால், நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சுமார் 50பேர் வரை, செந்துல் கோயிலுக்குள் புகுந்தனர்.

மஹிந்த ராஜபக்ச, குறித்த கோயிலுக்குள் சென்றுள்ளார் என்ற தகவலை அடுத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு சென்றனர்.

இதன்போது ராஜபக்ச குறித்த கோயிலுக்கு வந்தாரா? என்று தெரிந்துக்கொள்ளும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கோயிலின் பிரதமக்குழு ஸ்ரீ சரணனிடம் கேள்வி எழுப்பியபோது சிலர் அவரைத்தாக்கியுள்ளனர்.

எனினும் பொலிஸார் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கருத்துரைத்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒருவர், கொலைகாரர்களை விஹாரைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையை விடுக்கவே குறித்த விஹாரைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/security/01/116365

  • தொடங்கியவர்

மஹிந்தவை தாக்க அதிரடியாக முற்றுகையிட்ட தமிழர்கள் - பின் கதவு வழியாக தப்பிய மஹிந்த!

மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அறிந்த விடயமே.குறித்த ஆர்ப்பாட்டம் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நேற்று பூதாகரமாகவே வெளிப்படுத்தப்பட்டது.

பொது மக்கள் எத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டாலும் மலேசிய அரசு தன்னைக் காப்பாற்றும் என நம்பியிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு ஏமாற்றம் தரக்கூடிய வகையில் இந்த போராட்டம் அமைந்து விட்டது.

மஹிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டும் அவரது படத்தினை எரித்து மிதித்தும் பல வகையிலும் மலேசிய தமிழர்கள் ஆக்ரோஷமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை சிங்கள ஊடகம் ஒன்று மலேசியாவில் மறைந்திருக்கும் புலிகள் அமைப்பினரே மலேசிய தமிழர்களை ஒன்றிணைத்து மஹிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், எனினும் மலேசியா அரசாங்கம் மற்றும் அந்நாட்டு பொலிஸார் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை எனவும் செய்தி வெளியிட்டிருந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

என்றாலும் குறித்த ஆர்ப்பாட்ட காணொளிகளின் அடிப்படையில் மலேசிய நாட்டு பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த உணவகத்தையும், இலங்கை அரசின் தூதரகத்தையும் மலேசிய தமிழர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

உணர்ச்சி மிக்க தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவை தாக்கவும் தயாராக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை பகிரங்கமாகவே ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் செய்து அவர் வெளியில் வரும் வரையில் காத்திருந்தார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன் காரணமாக முன் வழியாக மஹிந்த வெளியே செல்வது சாத்தியம் இல்லாததால், பின் கதவு வழியாக மஹிந்த ஒரு வெள்ளை நிற BMW காரில் ஏறிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளாக கூறப்படுகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதும் மஹிந்தவுக்கு எதிராக ஆக்ரோஷமான இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் வெறுமனே வேடிக்கையாளராக செயற்பட்டதனை அவதானிக்க முடிந்ததாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/116386

  • தொடங்கியவர்

புலிகள் எதிர்ப்பதால் பயணத்தை நிறுத்த முடியாது - மகிந்த!

மலேசியாவுக்கு செல்லும் முன்னர் அங்கு தனக்கு எதிர்ப்பான நிலைமை உருவாகும் என அறிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள மகிந்த ராஜபக்ஸ ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.

முடிந்த யுத்தத்தை நான் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாகவே எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவர்களே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு எதிராகவே ஆர்ப்பட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிகளவான மக்கள் ஆதரவுள்ள உறுப்பினர்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கட்சியை விட்டு விரட்டுகின்றனர்.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கடும் வெறுப்பில் உள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/116432

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.