Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட மேலதிக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

Featured Replies

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட மேலதிக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

 

 

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட மேலதிக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது



முல்லைத்தீவு மாவட்டத்தில் 02.06.2016 இல் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட தீர்மானத்திற்கு அமைய மீன்பிடித்துறை சார்பான மேலதிக கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மீனவ சங்கங்களின் சமாசங்களின் தலைவர் உள்ளிட்ட பலர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் மாகாணசபை உறுப்பினர் கௌரவ அன்றனி ஜெகநாதன் அவர்களும் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று மீனவர்களால் எதிர்நோக்கப்படும் பல குறைபாடுகளும் இன்னல்களும் அச்சுறுத்தல்களும் பற்றிப் பேசப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் கௌரவ முதலமைச்சர் அவர்கள் அங்கு பேசப்பட்ட விடயங்களைத் தொகுத்து பின்வருமாறு கூறினார் -

இங்கு பலரின் குறைபாடுகள் சவால்கள் அச்சுறுத்தல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டன. இவற்றுற் சில தனிப ;பட்டவர்களின் பிரச்சனை சம்பந்தமானது. வேறுசில பிரதேசங்களின் பிரச்சனைகள் சம்பந்தமானவை. மற்றும் சில மாவட்டம் பற்றிய பிரச்சனைகளாவன.

தனிப்பட்டவர்கள் பாரம்பரியமாகப் பாவித்துவந்த பாடுகளை மாகாணத்திற்கு வெளியிலிருந்து வரும் சிலருக்குக்கு ; கையளிப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடப்பட்டது.

மேலும் பிரதேச ரீதியாக கொக்குளாய், நாயாறு, நந்திக்கடல் போன்ற பல இடங்களில் கடற்படையினரின் அல்லது இராணுவத்தினரின் தலையீட்டால் மக்கள் படும் அவஸ்தைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டன.

கரைவலைப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகள் எடுத்துரைக்கப்பட்டன. அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டன.. அத்துடன் மாவட்ட ரீதியாக முல்லைத்தீவு கரைப்பிரதேசத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அங்கு மீனவர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சனைகள் பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டன.

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மீன்பிடித் தொழில் சம்பந்தமாக உள்நாட்டு  நீர்நிலைகள் மீதே எமக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளன. கடல் மீன்பிடி சம்பந்தமாக மத்திக்கே அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் எமது மக்கள் என்ற முறையில்  மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும ; எமது அதிகாரத்தின் கீழேயே உள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரங்கள், தொழில்நிலைகள் போன்றன எம்மால் தீர்த்துவைக்கப்பட வேண்டிய விடயங்களே. அத்துடன் கரையோடு சம்பந்தப்பட்ட சில மைல் தூர கடலும் மாகாணசபையின் அதிகாரத்திற்கு உற்பட்டது.

ஆகவே முடிந்த மட்டில் இவை சம ;பந்தமான பிரச்சனைகளை நாம் மத்திய அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதே உசிதம். ஆனால் இந்த இடங்கள் பற்றியும் இங்கு   மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் பற்றியும் மத்திய அரசாங்கமும் இராணுவத்தினரும் கடற்படையினரும் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் எம்முடைய அபிப்பிராயங்களிலிருந்து மாறுபட்டவை. அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய அபிப்பிராயங்கள் தவறான அடிப்படையிலே அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களே. உதாரணத்திற்கு இன்று 1965ம் ஆண்டு பெப்ரவரி 1ம் திகதி வெளியிடப்பட்ட கரைவலை சம்பந்தமான சுற்றறிக்கை பற்றிக் கூறப்பட்டது.

யார் யாருக்கு அந்தக் காலகட்டத்தில் எந்தெந்தப் பாடுகள் கொடுக்கப்பட்டிருந்தன என்ற விபரங்கள் அதில் தரப்பட்டுள்ளன. ஆனால் குறித்த சுற்றறிக்கையின் முன்பக்கம் கிடைக்காததால் அதனைச் சுற்றறிக்கை என ஏற்கமுடியாதென்றும் 1985ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையே சரியானதென இராணுவத்தினரும் சிங்கள குடியேற்றவாசிகளும் கூறிவருகின்றனர். 1985ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஆவணம் 1983இல் கலவரங்களுக்கு உட்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வேற்று இடங்களில் இருந்த போது அரசாங்கத்தால் தான்தோன்றித்தனமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணமேயாகும். எனவே குறித்த பின்னைய ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று எம்மக்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள்.

இது சம்பந்தமான உண்மைகளை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட ரீதியாக இராணுவத்தினரும ; கடற்படையினரும ; முல்லைத்தீவு மீன்பிடித் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டிருக்கின்ற மக்களை பலவித இடையூறுகளுக்கும் இன்னல்களுக்குந் தற்போது உட்படுத்தி வருகின்றார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் அங்கு பல ஏக்கர் நிலங்களை வைத்துக் கொண்டிருப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரித்தும் இல்லை. பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களில் அவர்கள் கைவைத்து வருகின்றார்கள். தெற்கிலிருந்து சிங்கள மக்களைக் கூட்டிவந்து எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வளங்களை அவர்கள் சூறையாடிச் செல்ல உதவி புரிகின்றார்கள்.

எனவே இது சம்பந்தமான முழுமையான விசாரணையைச் செய்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். அதற்கு இங்கு வந்திருக்கும் அனைவரும் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறியிருக்கின்றமையால் அப்பேர்ப்பட்ட ஒரு குழு இளைப்பாறிய அரசாங்க அதிபர் ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ் விரைவில் இதுபற்றி ஆராயும். ஆராய்ந்து தரப்படும் அறிக்கையின் அடிப்படையில் அதிமேதகு ஜனாதிபதியுடனும், கௌரவ பிரதம மந்திரியுடனும், மத்திய அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் உரிய கலந்துரையாடல்கள் நடைபெறுவன. இவ்வாறு கூறி அவர் தமது பேச்சை முடித்துக் கொண்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135638/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.