Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு

Featured Replies

காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு

 

 
ஜெனரல் ரன்பீர் சிங் (இடது), இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் (வலது).
ஜெனரல் ரன்பீர் சிங் (இடது), இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் (வலது).

காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தங்களது இரண்டு ராணுவ வீர்ர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புதன் இரவு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்கும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டிருப்பதாக வந்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் வியூக ரீதியான சில தாக்குதல்களை அப்பகுதியில் மேற்கொண்டது.

அதாவது நாட்டிற்குள் நுழைந்து நம் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை இவர்கள் ஏற்படுத்தல் கூடாது என்பதை கருத்தில் கொண்டே இந்தத் தாக்குதலை நடத்தினோம். இதில் பயங்கரவாதக் குழுக்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய தாக்குதலைத் தொடரத் திட்டமில்லை. ஆனால் தேவைப்பட்டால் தீவிரவாத எழுச்சியை முறியடிக்க ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பிலும் பேசி எங்கள் கவலைகளை தெரிவித்தோம். இப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதே எங்கள் நோக்கம். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதிகள் நடமாட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

காங்கிரஸ் பாராட்டு

இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிரடியாக வியூகம் வகுத்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு ராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். | விரிவாக வாசிக்க > எல்லையில் தாக்குதல் வியூகம்: பிரதமர், ராணுவத்துக்கு பாஜக, காங்கிரஸ் பாராட்டு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம்:

துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்.

அண்டை நாடுகளுடன் அமைதியான உறவு பேண வேண்டும் என்ற எங்கள் கொள்கையை பலவீனமாக கருதிவிட வேண்டாம், எங்கள் ராணுவத்தினர் எங்கள் பகுதியைக் காக்க போதிய வலுவும் திறமையும் உடையவர்கள். பாகிஸ்தான் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்த ஒரு தீய முயற்சியையும் அவர்கள் முறியடிக்கவல்லவர்களே என்று ஷெரிப் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

http://tamil.thehindu.com/india/காஷ்மீரில்-இந்திய-ராணுவம்-வியூகத்-தாக்குதல்-கட்டுப்பாட்டு-எல்லையில்-தீவிரவாத-முகாம்கள்-அழிப்பு/article9162472.ece?homepage=true

  • தொடங்கியவர்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிர்மூலம்: இந்திய ராணுவம் சாகசம்

 

புதுடில்லி: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர் ( டி.ஜி.எம்.ஓ., ) ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார். இந்திய - பாக்., எல்லையில் நிலவி வரும் பதட்டமான சூழலில், பிரதமர் மோடி பாதுகாப்பு தொடர்பான உயர் மட்டக்குழுவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாம் மீது பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, எல்லையில் இந்திய துருப்புகள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்து மீறுவோரை சுட்டுத்தள்ளுங்கள் என பிரதமர் மோடி நேரிடையாக அறிவுறுத்தினார். கடந்த வாரத்தில் பிரதமர் மோடி முப்படை வீரர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என ஐ.நா.,உரையில் உலக நாடுகளுக்கு சுஷ்மா வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்தை இன்று காலை 11 மணியளவில் கூட்டினார். ஜவஹர்லால் நேரு பவனில் நடந்த இந்த கூட்டத்தில் , உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், மற்றும் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்திற்கு பின்னர் ஜெனரல் ரன்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:யூரி மற்றும் பூஞ்ச் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது முதல் ராணுவ நடவடிக்கையை கடுமையாக எடுத்து வருகிறோம். எல்லையில் 20 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் எல்லையில் 3 முறை பாகிஸ்தான் அத்துமீறலை நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தாக்குததை பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை முழுமையாக அழிப்போம். உளவுத்துறை அளித்த தகவலின்படி, பயயங்கரவாதிகள் முகாமிட்டிருந்த பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று இரவு (புதன் கிழமை ) , இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்ட்டிருக்கலாம். இதற்கு மேல் முழு விவரங்களை தெரிவிக்க முடியாது. எந்த தாக்குதலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

* யூரி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தந்துள்ளது.

* இந்த தாக்குதலில் சிறப்பு படை பயன்படுத்தப்பட்டுள்ளது

* பாகிஸ்தானை சேர்ந்த பலர் கொல்லப்பட்டிருக்கலாம்

* ஏராளமானவர்கள் காயமுற்றிருக்கலாம்

* பயங்கரவாத முகாம் அழிப்பு

* 8 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

* தாக்குதல் குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு தகவல்

* அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முறையான தகவல் அளிக்கப்பட்டது.

 

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1617361

  • தொடங்கியவர்
பலவீனமாக கருத வேண்டாம்: பதிலடிக்கு நாங்களும் தயார்: ஷெரீப்

 

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் பாக்.,எல்லையில் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருப்பதாவது:பாக்., எல்லை பகுதியில் இந்தியா அத்து மீறல் நிகழ்த்தியுள்ளது. 2 பாக்., படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் காயமுற்றுள்ளனர். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இதனை ஏற்க முடியாது. இந்திய ராணுவம் கூறுவது போல் பெரும் கொடூர தாக்குதல் ஏதும் இல்லை என எங்களின் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமைதியாக இருப்பதை எங்களின் பலவீனமாக கருத வேண்டாம். எதையும் சந்திக்க தயார். பாகிஸ்தான் மக்களை காத்திட பதில் தாக்குதல் நடத்த நாங்களும் தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாக்., ராணுவம் இது தொடர்பாக கூறுகையில்; இந்தியா தாக்குதல் என்பது பொய். எல்லை தாண்டி இந்திய துருப்புகள் எதுவும் வரவில்லை. எல்லையில் இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என கூறியுள்ளது.


இதற்கிடையில் பாக்., பாதுகாப்பு துறை அமைச்சகத்துடன் பிரதமர் நவாஸ் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1617364

  • கருத்துக்கள உறவுகள்

14463229_903653129766463_883164549053106

:D:

  • கருத்துக்கள உறவுகள்

பூமி பாரம் குறையுமா ? ரெல் மீ... ரெல் மீ .. இதெல்லாம் சண்டைய்யா? ஒருத்தனும் சாக மாட்டேன் என்கிறார்கள் .. அட போங்கப்பா .. !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.