Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்”

Featured Replies

“உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்”

 

 

sorryrrr.jpg

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் தெற்கின் இனவாதத்தை மேலும் பலபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.  அதேபோல் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உருப்பினரும் அமைச்சருமான நிலம் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கவும் முதலமைச்சர்களின் அதிகாரங்கள் ஒரு எல்லைக்கும் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும். ஆகவே உடனடியாக அவர்களின் அதிகாரங்களை வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/11901

  • தொடங்கியவர்

கூற்றுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு விக்னேஸ்வரனிடம் சுதந்திரக் கட்சி கோரிக்கை

 

கூற்றுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு விக்னேஸ்வரனிடம் சுதந்திரக் கட்சி கோரிக்கை


கூற்றுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக எழுக தமி;ழ் போராட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.


இந்த விடயம் குறித்து விக்னேஸ்வரனுக்கு எதிராக சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குதல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்பில் கேள்வியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


புதிய அரசியல் சானத்தை அமைக்கும் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


விக்னேஸ்வரன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை பிழையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது வடக்கிலும் தெற்கிலும் இனவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


நாட்டை பிளவுபடுத்த எந்த வகையிலும் இடமளிக்கப்படாது எனவும் அவ்வாறான சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் சாசனம் அமைக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136479/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் கதஈகிற கதைக்கு எப்ப மன்னிப்பு கேட்பியள்>..

article_1475208730-1.jpg

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்புவதைப் பெற்றுக்கொடுக்க முடியாது. அவர் விரும்பும் தமிழீழமோ சமஷ்டி முறையிலான ஆட்சியையோ, புதிய அரசியலமைப்பில் உருவாக்கிவிட முடியாது” என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறினார்.   

இவ்வாறானவர்களின் கருத்துக்களைக் கண்டு அஞ்சி, கலவரமடைய வேண்டாமென, தெற்கு வாழ் மக்களிடம் கேட்டுக்கொள்வதாகக் கூறிய அமைச்சர், புதிய அரசியலமைப்புக்கான அங்கிகாரத்தைப் பெற, மக்களிடமே வரவேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார்.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,   

“எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தானது, சிறுபிள்ளைத் தனமானது. ஒரு முதலமைச்சராக இருக்கவேண்டியவர் தெரிவிக்கக்கூடிய பொறுப்பான கருத்தல்ல அது.  ஜனாதிபதியின் தலைமையில், இந்நாட்டின் இனங்களுக்கு இடையே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழலில், இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதானது, தெற்கில் இனவாத அரசியலைப் பயன்படுத்துபவர்களுக்கு சாதகமாகிவிடும். அரசியலமைப்புச் சீர்திருத்தமானது, இன்னமும் உருவாக்கப்படவில்லை.

அதற்கு நீண்டதொரு படிமுறையொன்று உள்ளது. அதனைப் பிரயோகிக்காமல், அரசியலமைப்பினை உருவாக்க முடியாது. விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, பிரதமரோ அல்லது நானோ விரும்பினாற்போல், அரசியலமைப்பொன்றை உருவாக்கிவிட முடியாது. சமஷ்டிக் கோரிக்கையோ, தமிழீழக் கோரிக்கை கொண்டோ, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால், இவ்விரண்டையும் நாங்கள் நீக்குவதற்கான முயற்சியை முன்னெடுப்போம். எவ்வாறாயினும், அரசியலமைப்பு விடயத்தின் இறுதியில், மக்கள் தீர்ப்பெற்றதொன்று உண்டு. அது, மக்களின் அபிலாஷைப்படியே நிறைவேற்றப்படும். அதனால், இவ்வாறானவர்களின் கருத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை.   

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் இரண்டு பிளவுபட்ட கருத்துநிலை காணப்படுகின்றது. ஒரு தரப்பு, நடுநிலையுடன், நாட்டின் நிலைவரங்களை அறிந்து, அதற்கேற்றாற்போல் நடுநிலையுடன் செயற்படுகின்றது. மற்றைய தரப்பு, பிரபாகரனின் தமிழீழம் என்ற இனவாதக் கருத்தினைக் கொண்டு செயற்படுகின்றது. விக்னேஸ்வரனின் கருத்தானது, இரண்டாந்தரப்பினரை மாத்திரமே திருப்திப்படுத்தும். விக்னேஸ்வரனுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கட்சி என்ற வகையில் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்” என, வலியுறுத்தினார்.  

http://www.tamilmirror.lk/182882/-வ-க-ன-ஸ-வரன-க-ட-பத-க-ட-க-க-த-ந-மல-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.