Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு

Featured Replies

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு

 

 
supreme_court_2219033f.jpg
 

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது' என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த செப்.30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அக்டோபர் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர் வாதிடும்போது, 'காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது" என்றார்.

மத்திய அரசின் இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

கர்நாடகா நியமிக்கவில்லை:

"காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் வரும் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலும் காவிரி நீர்ப்பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கெனவே மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதிகளை அறிவித்துவிட்ட நிலையில் கர்நாடகா இப்போதைக்கு பிரதிநிதியை அறிவிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசு காவிரி பிரச்சினையில் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/india/காவிரி-மேலாண்மை-வாரியம்-அமைக்க-உச்ச-நீதிமன்றத்திடம்-மத்திய-அரசு-மறுப்பு/article9179555.ece?homepage=true

  • தொடங்கியவர்

காவிரி மேலாண்மை வாரியம்.. இரண்டே நாளில் மத்திய அரசு அடித்த அந்தர் பல்டி.. பின்னணி என்ன தெரியுமா?

 

 

 டெல்லி: வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது அதை காவிரி விவகாரத்தில் கண்முன் காட்டிவிட்டது மத்திய அரசு.

 

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடக அரசு முரண்டுபிடித்து வந்தது. இதனால் சுப்ரீம்கோர்ட் மூலமாக, தமிழக அரசு தண்ணீர் பெற போராடி வந்தது. அடிக்கடி சுப்ரீம் கோர்ட்டை தமிழகம்-கர்நாடகா நாடுவதால், அதிருப்தியடைந்த சுப்ரீம்கோர்ட், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

03-1475475891-cauvery-698.jpg

 

3 நாளில் ஓ.கே என்றார்

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா தனது உத்தரவை ஏற்று தண்ணீர் திறக்காமல் இருப்பதை பார்த்து கோபமடைந்த சுப்ரீம் கோர்ட் 3 நாட்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா என மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதகியிடம் கேட்டது. இதற்கு முகுல் ரோதகியும், முடியும் என கூறிவிட்டார்.

 

03-1475476022-uma-bharati.jpg

அரசியல் நகர்வுகள்

அட்டார்னி ஜெனரல் இவ்வாறு கூறியது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, அரசியல் நகர்வுகளை ஆரம்பித்தனர் கர்நாடக அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா உள்ளிட்டோர் மத்திய நீர்வள அமைச்சர் உமா பாரதியை சந்தித்து முறையிட்டனர்.

03-1475475880-cauvery577.jpg

மத்திய அமைச்சர்கள் முகாம்

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது கர்நாடகாவிற்கு ஆதரவான உமா பாரதி மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கர்நாடகாவில் பாஜகவின் எதிர்காலமே பாழாகிவிடும் என மோடியிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலையில், ஆட்சிக்கு வர நிச்சய வாய்ப்பு உள்ள கர்நாடகா சார்பாகவே நாம் முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.

03-1475475944-devegowda3566.jpg

மத்திய அரசுக்கு நெருக்கடி

இதனிடையே, கடந்த சனிக்கிழமை பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். இதுவும், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இது ஒருபக்கமெனில், தமிழகம் தரப்பில் மத்திய அரசுக்கு எந்த ஒரு அழுத்தமும் போகவில்லை. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், அரசு தரப்பிலிருந்து நெருக்கடி தர முடியவில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் சார்பிலும் மத்திய அரசிடம் நெருக்கடி கொடுக்க உரிய நபர்கள் இல்லை என்றாகிவிட்டது.

03-1475475899-central-government-600.jpg

பல்டியடித்த அரசு

இந்நிலையில்தான், இன்று சுப்ரீம்கோர்ட்டில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதகி, ஒரு மனுவை தாக்கல் செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள், தீபக் மிஸ்ரா மற்றும் உதய் லலித் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என அதில் கூறப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா 3 பெஞ்ச் அமர்வில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், 2 நீதிபதிகள் பெஞ்ச் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என கூறப்பட்டுள்ளது.

03-1475475871-cauvery7767687.jpg

திடீர் பல்டி

கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய வழக்கில், இது சட்டசபை விவகாரம் என சுப்ரீம்கோர்ட் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ள முகுல் ரோதகி, காவிரி வழக்கிலும் அதையே பின்பற்ற வேண்டும் என கோரியுள்ளார். இதன்மூலம், 3 நாளில் மேலாண்மை வாரியம் அமைக்க ரெடி என கூறிய 2வது நாளிலேயே மத்திய அரசு பல்டியடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

03-1475476109-siddaramaiah-latest-600.jpg

கர்நாடக குரல் எதிரொலி

மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒத்துக்கொள்ளக்கூடாது, 2 நீதிபதிகள் இவ்வாறு அறிவிப்பது செல்லாது என கூற வேண்டும் என்பது கர்நாடக அரசியல் கட்சிகள், மீடியாக்களின் ஒருமித்த குரல். அதை அப்படியே மத்திய அரசு இன்று எதிரொலித்துள்ளது. வெள்ளிக்கிழமை கர்நாடக மக்களிடம் வில்லனாக இருந்த மத்திய அரசு இன்று ஹீரோவாகியுள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை தமிழக மக்களிடம் ஹீரோவாக இருந்த மத்திய அரசு இன்று ஹீரோவாகிவிட்டது. மொத்தத்தில் அரசியல் காய் நகர்த்தலில் தமிழகம் தோற்றுவிட்டது என்பதே கசப்பான உண்மை.

Read more at: http://tamil.oneindia.com/news/india/centre-challenges-constitution-cauvery-management-board-says-264230.html

  • கருத்துக்கள உறவுகள்
Quote

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு

காக்கி அரை டவுசர் பாய்ஸ் உண்மை முகம் வெளிப்பட்டமைக்கு முதலில் நன்றிய தெரிவித்து கொள்வோம்... அடேங்கப்பா டிசைன் டிசைனா சுத்தி சுத்தி ஆப்படிக்கறாங்க ..!!

என் பேரு  சாப்பாணி இல்ல !! கோபால கிருஸ்ணன்..!!
என் பேரு  சாப்பாணி இல்ல !! கோபால கிருஸ்ணன்..!!
என் பேரு  சாப்பாணி இல்ல !! கோபால கிருஸ்ணன்..!!

--அப்படியே 16 வயதினிலே கமல் ஸ்ரைலில் படிக்கவும்..

டிஸ்கி:

கவுண்டமணி : டேய் எங்க இருந்துடா வர?
பிச்சைகாரன் :உங்க வீட்டுல பசிக்குதுனு கொஞ்சம் பழையசோறு கேட்டன் .. தரமாட்டேனுட்டாங்க..
கவுண்டமணி : ஏன்னாது அப்படியா சொன்னா அவ ..? வா நான் கேக்குறன்.. ஏண்டி இவனுக்கு சோறு இல்லனு சொன்னயாமே..?
கவுண்டமணி மனைவி : ஆமா அதுக்கு என்ன இப்ப..?
கவுண்டமணி : ஏண்டி இந்த வீட்டுல நீ புருசனா இல்ல நான் புருசனா..? நீ வச்சதுதான் சட்டமா? குடும்ப தலைவர் என்று நான் எதுக்கு இருக்கன்.. இப்ப நான் சொல்லுறன் சோறு கிடையாது ...போடா..!!!
பிச்சைக்காரன்: த்தூ...

  • கருத்துக்கள உறவுகள்

14572321_1095840857168119_74680599519429

  • கருத்துக்கள உறவுகள்

 

14523120_622337741274082_393261549638039

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.