Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பேண்ட நிகழ்வு நுழைவு சீட்டு வருமானம் மாத்திரம் ஒரு கோடி ரூபாய்.

Featured Replies

நண்பேண்ட நிகழ்வு நுழைவு சீட்டு வருமானம் மாத்திரம் ஒரு கோடி ரூபாய்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  யாழ்ப்பாணம்

யாழில். அண்மையில் நடைபெற்ற நண்பேண்டா இசை நிகழ்ச்சிக்காக பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்கப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது. யாழ்.நகர சபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை , பிரபல இந்திய பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , மற்றும் திரைப்பட இயக்குனரும்,  இசையமைப்பாளரும் , பின்னணி பாடகருமான கங்கை அமரன் உள்ளிட்ட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது.

ganbgai3
அந்த நிகழ்ச்சியின் ஊடாக யாழ்.மாநகர சபைக்கு எட்டு இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க பெற்று உள்ளதாகவும் , அதில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நுழைவு சீட்டு விற்பனை வரி மூலம் கிடைக்க பெற்றதாகவும் , இட வாடகையாக நாளொன்றுக்கு 11 ஆயிரம் ரூபாய் மூலம் மூன்று நாட்களுக்கும் அதற்கான 13 வீத வரி பணமுமாக 50 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைத்ததாகவும் , யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
 
களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டு விற்பனை பெறுமதியின் 7.5 வீதத்தை மாநகர சபை வரியாக அறவீடு செய்கிறது. ஆகவே வரி பணமாக 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி பணமாக கிடைக்க பெற்று இருந்தால் 10 மில்லியன் ரூபாய்க்கு நுழைவு சீட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
 
அத்துடன் இந்நிகழ்வுக்கு பல நிறுவனங்கள் விளம்பர அனுசரணை வழங்கி இருந்தன. பிரதான விளம்பர அனுசரணையாளர்களாக , ஸ்ரீலங்கா ரெலிக்கொம் அனுசரணை வழங்கி இருந்தன.என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை , யாழில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில் ,
 
 
யாழில் நடைபெறும் இசை நிகழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல நாம். ஆனால் அந்த நிகழ்வின் ஊடாக கோடிக்கணக்கான ரூபாய்க்களை வருமானமாக பெற்று செல்லாது. வடக்கு கிழக்கிலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
 
kangai-amaran
 
அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கங்கை அமரன் ,  போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தாம் இலவசமாக இசை நிகழ்ச்சி நடாத்த தயார் என தெரிவித்து இருந்தார். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அங்கை அமரன் கருத்து தெரிவிக்கையில் ,
 
 
எம்.ஜி.இராமசந்திரன் முதலமைச்சாராக இருந்த கால பகுதியில் ஈழ தமிழ் மக்களுக்கு நிதி திரட்ட வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தினேன். அதற்காக பின்னாளில் இந்திய சி.பி.ஐ. விசாரணைக்கும் முகம் கொடுத்தேன் என தெரிவித்து இருந்தார்.
 
 
அந்நிலையில் இதுவரை அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் எவருமோ, நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களோ  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ganagai2
cleardot.gif

You may also like

http://globaltamilnews.net/archives/2683

 
 
 
தென்னிந்திய கலைஞர்களால் யாழ் மாநகரசபையும் பயன்பெற்றது
 
 
தென்னிந்திய கலைஞர்களால் யாழ் மாநகரசபையும் பயன்பெற்றது
பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  சுமார் 8 லட்சம் ரூபா வரு மானம் கிடைத்துள்ளதாக மாநாகர ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 
தென்னிந்திய கலைஞர்களானஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்,கங்கைஅமரன்ஆகியோரின் யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
 
குறிப்பாக மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் , மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்திய வகையில் குறித்த இடம் 3 நாட்களிற்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு செலுத்தப்பட்டுள்ளது.
 
இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற ஒரு நாள் நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. என்றார். 

http://onlineuthayan.com/news/18815

http://onlineuthayan.com/news/18815

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.